வட்டமிடும்
வல்லூறுகளின்
விழிகளில்
விழுந்திடாமல்
கானகம் உதிர்க்கும்
துயரக் கானங்களில்
கரைந்திடாமல்
இன்றைய
இரை தேடி
ஆகாயம் அளந்து
அலுத்து, களைத்து
கூடு திரும்பும்
ஒற்றைப் பறவை
அனைத்தும் மறந்து
சற்றே
ஆசுவாசமடைகிறது
தன்னைக் கண்டதும்
கூக்குரலிட்ட
குஞ்சுகளின்
அரவணைப்பில் ...
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- அருணா சுப்ரமணியன்
- பிரிவு: கவிதைகள்