கழுத்தறுத்து தொங்கிய
வௌவாலின் கனத்த
மௌனமாய் நீள்கிறது
இவ்வெளியெங்கும் முகங்கள்....
ஆதரவற்ற ஒற்றைக்குரலாய்
தடதடத்து தனித்தடங்குகிறது
நடுநிசிகள்......
எப்படி தேடியும்
கிடைக்காத புத்தனை
தேடலுக்குள் அடக்குகிறது
போதி மரக்கிளைகள்......
தீப்பிடித்த வீட்டின் பரபரப்பாய்
கலைந்து, களைத்துப் போகிறது
மடிக்கிடத்தும் தாதிக்களின்
ராத்திரிக் கண்கள்......
நேற்று எறிந்த பிணத்தின்
தீவிரத்தில் இன்றும், இப்போதும் கூட
கசிகிறது
நிலவின் வெம்மைகள்....
- ஆனந்தி ராமகிருஷ்ணன்