rainbow in forest

வண்ணப் புடவையாக வானவில்
உடுத்திக்கொண்டாள்
வனதேவதை !

***

ஆழ்துளைக் கிணற்றில்
நீச்சலடிக்கிறது
நிலா !

***

அழுது முடிப்பதற்குள்
சமாதானமடைந்து விட்டேன்
அம்மாவின் தாலாட்டு ...!

***

மகுடம் சூட்டிய
பனி மழை
உருகிவழியும் ஆறு

***

தட்டிக்கொடுத்த நெற் கதிர்கள்
வளருவதே இல்லை
விவசாயி !

***

பிச்சைக்காரன் தட்டில்
நிரம்பிவழியுது
பாவமூட்டை !

***

குளத்தில் நிலா
தூண்டில் போடுகிறது
கடிகார முள் !

- ஹிஷாலி

Pin It