வண்ணப் புடவையாக வானவில்
உடுத்திக்கொண்டாள்
வனதேவதை !
***
ஆழ்துளைக் கிணற்றில்
நீச்சலடிக்கிறது
நிலா !
***
அழுது முடிப்பதற்குள்
சமாதானமடைந்து விட்டேன்
அம்மாவின் தாலாட்டு ...!
***
மகுடம் சூட்டிய
பனி மழை
உருகிவழியும் ஆறு
***
தட்டிக்கொடுத்த நெற் கதிர்கள்
வளருவதே இல்லை
விவசாயி !
***
பிச்சைக்காரன் தட்டில்
நிரம்பிவழியுது
பாவமூட்டை !
***
குளத்தில் நிலா
தூண்டில் போடுகிறது
கடிகார முள் !
- ஹிஷாலி
மேலும் ஆசிரியர் மற்றும் கவிதைத் தேர்வு குழுவிற்கு நன்றி
RSS feed for comments to this post