கதையாகவே இருந்தது
கதை சொல்ல
முயன்ற
குழந்தையின் ஒவ்வொரு
அசைவும்
***
அடிக்கிற கைதான்
அணைக்கும்
பழமொழி
உண்மையானது
குழந்தைகளிடத்தில் தான்
***
பொய் சொன்னா
சாமி கண்ணை
குத்திடும் என்றேன்
என் அம்முவிடம்
சிரித்துக் கொண்டே
சொல்லியது
இதுவே பொய் தானே
அப்பா என்றது
***
திண்ணையில் கிடந்த
தாத்தா
வீட்டிற்குள் கிடத்தப்பட்டார்
சடலமாக...
***
அப்பாவின் பெயர்
சூட்டப்பட்ட
என் மகன்
எப்போதும் இருப்பது
என் அம்மாவிடமே....
- ந.சுரேஷ், ஈரோடு