இனிக்கிறது
வேப்ப மரங்களின்
காற்று.
________
தாங்குவது தானென்றாலும்
வெளிக்காட்டிக் கொள்வதில்லை
வேர்கள்.
________
தொலைக்காட்சி நின்றதும்
மனைவி
துவங்கி விடுகிறாள்.
________
நீரற்ற ஆற்றங்கரையினில்
இன்னமும் நம்பிக்கையுடன்
ஓடங்கள்.
________
ஆஸ்ட்ரே முழுவதும்
விரவிக் கிடக்கின்றன
உயிரின் துகள்கள்.
________
புத்தக மயிலிறகு
குட்டி போடுமென்ற
ஆசைகள் மட்டுமே
குட்டிகளை ஈன்றுகொண்டிருந்தது.
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
RSS feed for comments to this post