sparrowடவரில் செத்தது போக
மிச்சமிருக்கின்றன குருவிகள்
மிருகக்காட்சி சாலையில்
பத்திரமாக
_______________________

செத்த மானில் துடிக்கிறது
ஒரு புலிக்கான
உயிர்.
________________________

மழை குளிப்பாட்டுகிறது
குளத்து நீரை
_________________________

பிச்சைக்காரனின் தட்டில்
நிறைந்திருக்கின்றன
அவமானங்கள்
__________________________

உறிஞ்சப்பட்ட
இளநீர் மட்டைகளை
மீண்டும் வந்து நிரப்புகிறது
மழை.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Pin It