பள்ளிக் குழந்தைகளுக்கான
முதல் மணியை அடிக்கிறான்
பால்காரன்.
__________________

கீழே விழுந்தாலும்
மனதில் நின்று விடுகிறது
அருவி.
__________________

மின்சாரம் இல்லா காற்றாடியை
காற்று சுற்றி விட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறது.
___________________

பேய்கள் கூட
கிடைத்து விடுகின்றன.
வேப்பிலைகளுக்குத்தான்
பஞ்சம்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

Pin It