முட்டிக்கொண்டு நிற்கும்
சிறுநீரின்
மரண அவஸ்தைகளில்
காணாமல்
போய் விடுகின்றன
பதவி
பவிசு
படாடோபம் எல்லாம்.

____

அடக்கமாய்
ஒடுக்கமாய்
கூண்டோரம்
கொட்டாவி விட்டபடி
அமர்ந்திருக்கும்
சிங்கத்தைப் பார்த்து
என் மகன்
திரும்பத் திரும்ப
கேட்டான்
அப்பா!
இதுதான் சிங்கமா
அப்பா!
இதுதான் சிங்கமா.

______

பூக்களின்றியும்
ஜொலிக்கும்
பூங்காக்கள்
குழந்தைகளின்றி
ஜொலிப்பதில்லை.

- எஸ்.எம்.ஜுனைத்ஹஸனி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It