*
தான்யா
தன்
ஆட்காட்டி விரலையும்
கட்டை விரலையும் அழுத்தி
சொடக்கொன்று
போட முயல்கிறாள்

காற்று பொசுக்கென்று உடைகிறது

சிரிக்கிறாள்

நிற்காத சிரிப்பின் அலையெங்கும்
இறக்கை முளைத்த சொடக்குகள்
அறையை விட்டு வெளியேறுகின்றன

*****

    - இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It