நிலவின் கீற்றும்
குளத்தின் சுவாசமும்
மரங்களின் மௌனமும்
புதர்களின் சிலிர்ப்பும்
 
அவள்
பின்னிய கரங்களின்
விடுவிப்புக்காகவோ,
சிறகுகளின்
வீழ்ச்சிக்காகவோ...
காத்திருக்கின்றன.

ஒவ்வொன்றாக
அல்ல ஒட்டுமொத்தமாக
அகற்றப்படுகையில்
அவள்
வெள்ளுடை நனையாது
சற்றே தூக்கி
நீரின்மேல்
நடந்து ...வனம் சேர்வாள்.

Pin It