பிரியங்கள் புனைந்து
சுமந்த கருக்கள்-அவைகளின்
கனவு விருட்சங்களில்
பிரியங்களின் வர்ணத்தை
தூரிகையில் துளைத்தெடுத்து
தங்களின் அடையாளத்தை
தேடிக்கொள்கின்றன.
வர்ணங்களின் பேதமை
அறியாத பிரியங்கள்
இன்னபிற கருக்களையும்
அவ்வாறே சுமப்பதில்
தங்களுக்கான வர்ணத்தின்
செறிவு பற்றி வினவ
ஆரம்பிக்கின்றன கருக்கள்.
வினவுகளின் ஆழம்
புரியாத பிரியங்களின்
வெற்றுப் பதில்களில்
தங்களுக்கான தடித்தத்
தோல்களை அறுத்தெறிந்து
இரத்தவழிதலில்
கருக்கள் தேடி அலைகின்றன
புது வர்ணங்களை.
- சோமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- சோமா
- பிரிவு: கவிதைகள்