கோடி முறை முயன்ற போதும்- எந்தன்
காதல் குறையுதில்லை போடீ
தேடித் தவித்ததுவா கொஞ்சம்-இந்தப்
பிறவி முழுவதுமா தேட?(கோடி)
காட்சி கனவிலொரு பாதி-அது
காண்கிறவர் அறிவ தில்லை
ஆட்சி அழகுவிழி செய்யும் உன்னைக்
காண வழியுதடி இன்பம் (கோடி)
யாரு முனக்கு இல்லை ஈடு...எனில்
யாவர்க்கும் நீயே அழகன்றோ...
வாரியணைக்கு மழை போலே-என்னை
தேடி நனைத்தவளும் நீயே....(கோடி)
பாதை வெறுத்தவிழி பாவம்-என்னை
நீயும் விலகிச் செல்லுவாயோ-
கோணல் நதியலையாய் நானும்
உந்தன் வாழ்வைத் தொடர்ந்து வருவேனே....(கோடி)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்