மௌனத்தை உழுதபடி

முன்னகர்கின்றன கவலைகள்

நுகத்தடியில்

புரள்கிறது ஒரு பேரமைதி

 

கருத்துத் திரளும்

நம்பிக்கை மேகங்கள்

பொழியவிருக்கும் பெரு மழையின்

முதல் துளி போல

 

உன் வருகை அமைந்துவிடாதா

எனக் காத்துக் கிடக்கின்றன

கட்டுக் கட்டாய்

என்

எதிர்பார்ப்புகள்

 

வெடிப்பு விட்டு

நீண்டுக் கிடக்கும் நம் வரப்புகளை

அளந்தபடியே முணுமுணுக்கிறது.

இந்த அகால இரவு!

 

- இளங்கோ

 

Pin It