யாருமற்ற தனிமையில்..
பூட்டப்பட்ட வீடுகள்
துயரத்தை வெளிப்படுத்த
துர்வாடை வீசுகின்றன..!

அறைகளின் சுவாசத்தை மறுத்து
அடைத்து வைக்கப்பட்ட ஜன்னல்கள்
தூசிகளை சுவாசிக்கின்றன..!

தூசிகள்-
காற்றின் வருகையை
அறிவிக்கும்
நினைவுத்தடங்கள்..!

வசிப்பிடம் அற்றவர்களின்
பெருமூச்சு
அங்கே உறங்குகின்றன..!

சில நேரங்களில்
உறங்க மறுத்து
ஆவியைப் போல அலைகின்றன..!

குழந்தைகளின் சப்தம் கேட்டு
குதூகலிக்கும் சுவர்கள்

அவர்கள் வெளியூர் செல்ல
நேர்கிற போதேல்லாம்..
தன்னை
சமாதியாக உணருகின்றன..!

Pin It