நான் தனிமையில் நடக்கிறேன், உண்மையை உன்னிடம் சொன்னால்
நான் தனிமையிலிருக்கிறேன்,
நீயும் தனிமையிலிருக்கிறாய் என என் இதயம் சொல்லும்போது
நானும் தனிமையிலிருக்க எனக்கு ஆட்சேபமில்லை.  

நான் தனிமையில் நடக்கிறேன், அவர்கள் கேட்கிறார்கள் ஏனென்று,
அவர்களுக்கும் சொல்கிறேன் நான் தனிமையில் நடப்பதை.
கனவுகள் இருக்கின்றன நான் சேமிப்பதற்கு, நீ என்னை
அணைத்திருந்த இரவில் நம் மனம் திளைத்த கனவுகள்.

என் ஒவ்வொரு இறைவணக்கத்திலும்
எந்த இரவினில் நீ எங்கிருந்தாலும்
நானும் எப்பொழுதும் உன்னருகில் இருப்பேன்.
நீ அழைத்தால், நான் உன்னைக் கேட்பேன், நீ எங்கிருந்தாலும்.

உன் கண்களைச் சற்றே மூடு, நான் அங்கிருப்பேன்.
தயைசெய்து தனிமையில் நட, உன் காதலையும் முத்தங்களையும்
அனுப்பி என்னை வழிநடத்து.
நீ என்னருகில் நடக்கும் வரை, நான் தனிமையில் நடக்கிறேன்.

1944 ஆம் வருடத்தின் பிரபல பாடல்.
இயற்றியவர் - சாம்மி கான் (Sammy Cahn).
இசை - Jule Styne.

(தமிழாக்கம் - வ.க.கன்னியப்பன்)

Pin It