பரிதியை மேகம்
மறைத்திடும் நேரம்
மழை வரக்கூடும்
பூவிதழ்களின் மேலே
வண்டுகள் அமர்ந்து
ரீங்காரம் பாடும்
விடியலில்
குயில் தனியாய் அமர்ந்து
தனிமையை அருந்தும்
நெல்மணிகளைத் தின்னும் புறா
தூக்கியெறியப்படும்
இரையைக் கூட
கவண்கல்லாகவே நினைக்கும்
ஆளரவமற்ற வீதி
ஊருக்கு அந்நியமாக
நம்மை உணர வைக்கும்
கையிலேந்திய விளக்கு
இருளைக் கிழித்து
ஒளியைப் பரப்பும்
வெளிச்சம் காட்டும்
சுடரொளி தான்
வீட்டையும் எரிக்கும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- சாதித்தார் ஸ்டாலின்! இது சொல்லாட்சியல்ல, செயலாட்சி!
- முனீஸ்வரன்
- அன்னை நாகம்மையார்: பெரியாரின் மனைமாட்சி
- ரிசல்ட் வரும் நாள்
- நதியைக் கொன்றவர்கள்
- நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும்
- கருஞ்சட்டைத் தமிழர் மே 11, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன
- விவரங்கள்
- ப.மதியழகன்
- பிரிவு: கவிதைகள்