துப்பாக்கி சத்தத்திற்கு மத்தியில்
மலரும் பூக்களில்..
இரத்த வாசம் அடிக்கிறது..!

வெண்கொடி ஏந்தி 
வேடர்கள் வருகிறார்கள்..!
மறைந்து கொள்கிறார்கள்
மண்ணின் மைந்தர்கள்..!

மதங்களின் ஆட்சியே 
எப்போதும் நடக்கிறது..!
மக்களாட்சி மட்டும் 
மரணித்துக் கிடக்கிறது..!  

ஜனநாயகத்தின் சவ ஊர்வலம்
நெடுநாளாய் நடக்கிறது..
தேசிய மயானம் தேடி..!

குருதிப் பாத்திகளில் 
நட்டு வைத்த ரோஜா செடியோ
வெள்ளையாய் சிரிக்கிறது..!

கனிவளத்தால் மறைக்கப்படும் 
கண்ணீர் நிலம் 
காஷ்மீரம்..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It