தூங்கும் முன்பும்
தூக்கத்தின் நடுவிலும்
எழுந்ததும்
குளித்ததும்
சாப்பிட்டதும்
அலுவலகம் செல்லும் முன்பும்
செல்லும் வழியிலும்
சென்ற பின்னும்
வேலையினிடையேயும்
அலைபேசியை எடுத்துப்
பார்ப்பது வழக்கம்
உன் குறுஞ்செய்திக்கும்
அழைப்பிற்கும்
ஏங்கித் தவிக்குமென்
மனதிற்கு ஒரே ஆறுதல்
இன்னும் பத்திரப்படுத்தியிருக்கும்
ஆறு மாதத்திற்கு முன்
உன்னால் அனுப்பப்பட்ட
‘நீ இரவு - நான் நிலவு’
எனும் குறுஞ்செய்தி.
- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
RSS feed for comments to this post