நமக்கிடையேயான
பரிமாற்றங்களை
பதட்டத்துடன்
அதிகப்படுத்துகிறது
இன்னும் நிகழ்த்தப்படாத
முதல் முத்தம்..
---------------
ஒவ்வொரு முறையும் முயற்சித்து
தோற்றுப் போகிறேன்..
என் வார்த்தையினைக் கேட்காமல்
என் சொற்கள் அதனிஷ்டத்திற்கு
ஆட்டம் போடுகின்றன..
உன்னைக் கண்டாலும்
காணாவிட்டாலும் ..
--------------------
படையலை
குலசாமிக்கு
முதலில் படைத்து விட்டு
பின் அனைவருக்கும் பரிமாறுவதாய்.. 
உனக்கே படைக்கப் படுகிறதென்
ஒவ்வொரு கவிதையும்..

-----------------------------------------
நீ உன்னிடமும் ..
நான் என்னிடமும்..
எப்படியோ
அப்படித்தான்
நீ என்னிடமும் ..
நான் உன்னிடமும் ..
------------------------------------

- இவள்  பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It