உனதிருகைகளுக்கிடையேயென்
முகம் தாங்கியுன்
கூர் பார்வையில்
உதடுகள் சிறிதே
விரிந்தசையும் போதிலென்
துயரத்தின் வேர்கள்
தூள் தூளாகும்...
-----------------------------
உன் பார்வையில் நட்பும்
என் பார்வையில் காதலுமாய்
தொடரும்
பயணத்தின் முடிவு
எதுவாக இருப்பினும்
அதனுள்ளே உயிர்த்திருப்பது
புரிதலும், நம்பிக்கையுமே
புரிந்து கொள்வாய்
நம்புகிறேன்..
--------------------------------
எத்தனையோ பேரை
நண்பனென அழைக்கும்போதும்
அறிமுகப்படுத்தும் போதும்
பிறரிடம் சொல்லும் போதும்
இல்லாத ஒன்று
உன்னை
நண்பனென
அழைக்கும்போதும்
அறிமுகப்படுத்தும் போதும்
பிறரிடம் சொல்லும் போதும் 
வந்து ஒட்டிக் கொள்கிறது..
சிறு வெட்கத்தினூடாக ...
-----------------------------------
எதிலும்
வீழ்ந்துவிடக்
கூடாதென்ற
கவனத்தில் ஏற்பட்ட
சிறு சிதறலில்
நுழைந்துவிட்டாய்
என் வாழ்விற்குள்

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It