பன்னெடுங்காலம் முதல் தமிழகத்தில் சாதிப் பாகுபாடு நிலவி வருவதும், அதனால் சமூகத்தில் நடைபெறும் கொடுமைகளும் யாவரும் அறிந்ததே. மிக நவீன காலமான இப்போதும், சாதியக் கொடுமைகள் குறைவதற்கு பதிலாக, அதிகரித்தபடியே உள்ளன. தமிழகத்தில் கிறிஸ்தவம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் பரவியது. தற்போது, ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church), தென்னிந்திய திருச்சபை (Church of South India) உட்பட பல திருச்சபைகள் உள்ளன. கிறிஸ்தவர்களிடையேயும் சாதிக் கொடுமைகளுக்கு சிறிதும் குறைவில்லை. கிறிஸ்துவத்தைத் தோற்றுவித்தவரான இயேசு கிறிஸ்து சாதியைப் பற்றி என்ன போதித்தார்? கிறிஸ்துவின் காலத்தில் சாதி இருந்ததா? அவர் சாதிக்கு ஆதரவானவரா? ஆகியவற்றை பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.
பேரரசர் அகஸ்டஸ் காலத்தில், இயேசு கிறிஸ்து கி.மு. 5 ஆம் ஆண்டில், ரோம ஆட்சிக்குட்பட்ட யூதேயாவிலுள்ள பெத்லேகமில் பிறந்தார். கி.பி. 27 முதல் கி.பி. 30 வரை, யூதேயா மற்றும் கலிலேயா பகுதிகளில் போதித்தார். ஏறக்குறைய கி.பி.30-ல் ரோம ஆளுனர் பிலாத்துவினால், யூத குருமார்களின் பொய் குற்றச்சாட்டுகளின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்.
கிறிஸ்துவின் மக்கள் பணி மூன்றாண்டுகள் மட்டுமே. அப்போதனைகள் இன்றளவும் நிலைத்துள்ளன. பேசப்படுகின்றன; விவாதிக்கப்படுகின்றன; பெரும்பாலோனாரால் பின்பற்றப்படுகின்றன. கிறிஸ்துவின் போதனைகள் அதிகார மையங்களுக்கு எதிராக இருந்தன. அவருக்கு இருந்த முதன்மையான நோக்கமே, மக்களை, யூத அதிகார மையங்களின் (யூத குருமார்கள் மற்றும் பிற) பழமைவாத பிற்போக்குப் பிடியிலிருந்து மீட்டெடுப்பதும், இறைவனின் ஆட்சியை நிறுவுவதே ஆகும். இதனை அன்பின் அரசு எனவும் கொள்ளலாம்.
கிறிஸ்து வாழ்ந்த யூத சமூகத்தில் சாதி என்ற ஒன்று இல்லை. நம்மிடையே உள்ளது போன்ற சாதியமைப்பு, அவற்றின் பல்வேறு படிநிலைகள் போன்றவை அங்கில்லை. ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் இருந்தனர். சமூகத்தில் சிலர் கடை நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பெண்களும் ஒடுக்கப்பட்டிருந்தனர். பாவிகள் என சிலர் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். இந்த ஒடுக்கப்பட்டவர்களை கிறிஸ்து எவ்வாறு அணுகினார். ஒடுக்குதல் குறித்து அவரது பார்வை என்ன?
யூத குருமார்கள், சதுசேயர், பரிசேயர் (யூத மேல் தட்டு மக்கள்) ஆகியோர் சமூகத்தில் உயர் நிலையிலிருந்தனர். இவர்கள் சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்தி ஒடுக்குதலையும், சுரண்டுதலையும் செய்து வந்தனர்.
இயேசுவும், சமாரியர்களும்
கிறிஸ்துவின் காலத்தில் சமாரியர்கள் என்ற ஒரு பிரிவினர் (சமாரியா என்ற நிலப் பகுதியைச் சார்ந்தவர்கள்) இருந்தனர். இவர்கள் அன்றைய சமூகத்தில் கீழ்நிலையில் இருந்தவர்கள். இவர்களை யூதர்கள் தொடமாட்டார்கள், அவர்களுடன் உணவு அருந்தமாட்டார்கள், அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களைத் தொடக்கூடமாட்டார்கள். அவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள்.
இயேசுவும் ஒரு யூதர்தான்.
இயேசு பெரும்பாலும் தனது போதனைகளில் சிறு, சிறு கதைகளைப் (உவமைகள்) பயன்படுத்தினார். அவரது புகழ்பெற்ற நல்ல சமாரியன் கதையில், அவர் சமாரியர்கள் பற்றி ஒரு உயர்வான சித்தரிப்பைத் தருகிறார். தன் அயாலனை அன்பு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த, இக்கதையை கூறுகிறார்.
ஜெருசலேமிலிருந்து, ஜெரிக்கோவிற்கு செல்லும் ஒரு வழிப்போக்கனை, கள்வர்கள் அடித்து, அவனிடமிருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு, குற்றுயுரும், குலையுருமாக விட்டுச் செல்கின்றனர். அவ்வழியே வரும் ஒரு யூத குரு அவனைப் பார்த்தும், பாவி எனக் கூறி விலகிச் செல்கிறார். பின்பு அவ்வழியே வரும் ஒரு ஆசாரியரும் (தேவாலயத்தில் பூசைகளில் ஈடுபடுபவர்) அவ்வாறே செய்கிறார். அதன் பின்பு, ஒரு சமாரியர் அவ்வழியே வருகிறார். அவர், அந்த வழிப்போக்கனின் காயங்களையெல்லாம் கழுவி, எண்ணெய் தடவி, கட்டுகிறார். பின்பு உடல் குணமடைய திராட்சை ரசம் அளிக்கிறார். பின்னர், அவனைத் தன் கழுதையில் ஏற்றி சத்திரத்தில் தங்க வைக்கிறார். மேலும், சத்திர கண்கானிப்பாளரிடம் அவனுக்குத் தேவையானவைகளைச் செய்யும்படி கூறி, அதற்கான பணத்தையும் கொடுக்கிறார். அதற்கு மேலும் செலவானால், திரும்பி வரும்போது கொடுப்பதாக கூறிச் செல்கிறார்.
இக்கதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு, சொல்லப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பு. “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” என்ற சட்டங்கள் சமூகத்தில் நிலவி வந்த காலகட்டத்தில், இக்கதை கூறப்பட்டுள்ளது. இப்போதும் இதன் முக்கியத்துவத்தை உணர முடியும். முதன் முதலில் மனிதனின் மனதைப் பற்றி பேசிய கதை இது, என ஒரு மனோதத்துவயியல் அகராதி குறிப்பிடுகிறது.
அதனினும் முக்கியமானது, கதையில் குறிப்பிடப்படும் நல்லவன், ஒரு தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன். “உயர் குலத்தில் பிறந்தோர் உயரிய குணங்களையுடையவராய் இருப்பர்”, எனும் உயர் சாதி மனோபாவத்தை இக்கதை உடைத்தெரிகிறது. முதன் முதலாய் ஒரு தாழ்த்தப்பட்ட மனிதனுக்காக குரல் ஒலிக்கிறது. அவன் கதையின் நாயகனாய் உள்ளான். இதிலிருந்து கிறிஸ்து யாருக்காக குரல் கொடுத்தார்? யாருக்காக ஆதரவாக இருந்தார்? என்பது புலனாகும்.
கிறிஸ்துவும், சமாரியப் பெண்ணும்
ஒரு முறை கிறிஸ்து தனது பிரயாணத்தின் போது, சமாரியாவின் வழியே செல்ல நேரிடுகிறது. அவரது சீடர்கள் நகருக்கு உணவு வாங்கச் சென்றுவிட்டனர். ஒரு கிணறண்டையில் இருந்த அவர், அங்கு தண்ணீர் மொள்ள வந்த ஒரு சமாரியப் பெண்ணிடம் பேசுகிறார். “பெண்ணே, தாகத்திற்கு தா”, என்கிறார். அவளோ அதிர்ச்சியடைந்தவளாய், யூதரான நீர், சமாரியரிடம் தண்ணீர் கேட்பதென்ன? என்கிறாள். அவர், அவளுடன் உரையாடலைத் தொடங்குகிறார். உரையாடலினூடே, யூதர்கள், “ஜெருசலேமில் மட்டுமே கடவுளை தொழுது கொள்ள வேண்டும்” எனக் கூறுகிறார்களே, என அவள் கேட்கிறாள். அதற்கு அவர், கடவுளை அவரவர் உள்ளத்தில் வழிபடும் காலம் வரும், என்கிறார்.
பின் அவள், அவளது ஊரினுள் சென்று, ஊர் மக்களை அழைத்து வந்தாள். அவர்கள் வந்து, அவருடன் உரையாடினர். பின் அவர்களது விருப்பத்திற்கிணங்க அவர்களுடன் சில நாள்கள் தங்கியிருந்து போதிக்கின்றார்.
கிறிஸ்துவும், சமாரிய தொழு நோயாளியும்
கிறிஸ்து ஒரு முறை எருசலேம் செல்லும் வழியில், கலிலேயா, சமாரியா பகுதிகள் வழியாகச் சென்றார். ஒரு ஊரில் பத்து தொழு நோயாளிகள் எதிர் கொண்டு வந்தனர். அவர்கள், அவரிடம் குணமளிக்கும்படி வேண்டினர். அவர், அவர்களிடம், நீங்கள் போய் குருக்களிடம் காண்பியுங்கள் என்றார். அவர்களும் சென்றார்கள். செல்லும் வழியிலேயே அவர்கள் குணமாகினர். அவர்களில் ஒருவர் மட்டும் திரும்பி இயேசுவிடம் வந்து, நன்றி செலுத்தினார். அவர் ஒரு சமாரியர். திரும்பி வராத மற்ற ஒன்பது பேரும் யூதர்கள். இச்சம்பவம் சமாரியரின் நற்குணத்தையும், நன்றியறிதலையும் காண்பிக்கின்றது.
கிறிஸ்து, சமாரியர்களுடன் தங்கியிருக்கிறார். அவர்களுடன் உணவருந்துகிறார். சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்துகிறார். அதாவது இயேசு தாழ்த்தப்பட்டவர்களுடன் ஒருவராக இருக்கின்றார். அவர்களை சரி சமமாக நடத்துகின்றார். இதனாலும் உயர்குடி யூதர்களின் பகையை சம்பாரிக்கிறார். அவர்கள் கிறிஸ்துவை “சமாரியன்” என பழிக்கின்றனர். அவரை பின் பற்றியவர்களை தொழுகை கூடங்களிலிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்.
கிறிஸ்துவும், சகேயுவும்
சகேயு என்பவர் ஒரு வரி வசூலிப்பவர். வரி வசூலிப்பவர்கள், ரோம பேரரசின் பிரதிநிதியான, யூதேயாவின் ஆளுனரின் கீழ் பணி புரிபவர், அவர்கள் மக்களை கசக்கிப் பிழிந்து வரி வசூலித்தனர். அவர்கள் மக்களால் ஒதுக்கப்பட்டனர். “வரி வசூலிப்பவர்”, என்ற சொல் ஒரு இழி சொல்லாக பயன்படுத்தப்பட்டது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட அவர், ஒரு முறை இயேசு வரும் வழியில், இயேசுவைக் காண, ஒரு மரத்தில் ஏறியிருந்தார். அவர் அருகில் வந்த இயேசு, “இறங்கி வா சகேயு, இன்று உன் வீட்டில் தங்க வேண்டும்”, என்கிறார். அவருடன், அவர் சீடர்களும் சகேயு வீட்டில் தங்கினர். சகேயு மனம் திரும்பி தான் அநியாயமாய் வாங்கிய வட்டியை இரண்டு மடங்காக திருப்பிக் கொடுப்பதாக கூறுகின்றார்.
கிறிஸ்து, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட சகேயுவை ஏற்றுக் கொள்கிறார். மேலும் அவரது ஆன்ம ஒளியை மீட்டெடுக்கிறார்.
கிறிஸ்துவும், விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணும்
ஒருமுறை கிறிஸ்துவிடம், விபசாரத்தில் கையும், களவுமாக பிடிபட்ட பெண்ணை, யூதர்கள், அவரிடம் குற்றம் கண்டுபிடிப்பதற்காக, கொண்டு வருகின்றனர். மோசேயின் சட்டப்படி (எகிப்தின் அடிமைதளையிலிருந்து இஸ்ரவேல் மக்களை மீட்ட மோசே, அம்மக்களை நியாயம் தீர்க்க, கொடுத்தது இச்சட்டத் தொகுப்பு; இது ஹம்முராபியின் சட்டத் தொகுப்பை ஒத்தது.) இவளை கல்லெறிந்து கொல்ல வேண்டும், நீர் என்ன கூறுகின்றீர், என அவர்கள் வினவ, “உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதல் கல்லெறியட்டும்”, என இயேசு பதிலளிக்கிறார். சிறுவர் தொடங்கி, முதியவர் ஈறாக அனைவரும் கற்களை கீழே போட்டு விட்டு, சென்று விடுகின்றனர். “அம்மா, நானும் உன்னை தீர்ப்பிடவில்லை”, எனக் கூறி, அவளை அனுப்பிவிடுகிறார்.
இங்கு விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணிற்காக கிறிஸ்து குரல் கொடுக்கிறார். மேலும், அவளைக் கொல்லத் துடித்த, வெறி பிடித்த ஆண்களின் கூட்டத்திலிருந்து, அவளை காப்பாற்றுகிறார்.
(குறிப்பு: இப்படி ஒரு சம்பவமே, விவிலியத்தின் மூலப்பிரதியில், இல்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இயேசுவின் முக்கிய பெண் சீடரான மகதலேனா மரியாளே அப்பெண் எனவும், அவரை இழிவுபடுத்தவே இக்கதை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இது பற்றிய முழு விபரங்கள், டேவிட் பிரவுன் எழுதிய “டாவின்சி கோட்”, என்ற நாவலில் காணலாம். கட்டுரையாளர், பெண்ணிய ரீதியில், இச்சம்பவத்தை ஒரு புனைகதையாக எழுதியுள்ளார். அதனை www.thamizhstudio.com என்ற இணைய தளத்தில் காணலாம்).
கிறிஸ்துவின் பெண் சீடர்கள்
கிறிஸ்துவிற்கு பெண் சீடர்கள் இருந்துள்ளனர். அவர்கள், அவரது மற்ற ஆண் சீடர்களுக்கு இணையாக மக்கள் பணி (திருப்பணி) ஆற்றியுள்ளனர். அவர்களுக்கு இயேசு உரிய அங்கீகாரம் அளித்துள்ளார். மகதலேனா மரியாள், யோவன்னா, சூசன்னா மற்றும் பல பெண்களும் அவரின் சீடர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்கு உதவியாயிருந்தனர். மார்த்தா என்பவரும், அவரது சகோதரியான மரியாளும் ஆகியோரும் (இருவரும் லாசருவின் சகோதரிகள்) அவரது சீடர்களாயிருந்தனர்.
அரவாணியும், பிலிப்பும்
எத்தியோப்பியாவின் அரசியான கந்தகி என்பவர் ஆவர். (காலம் கிறிஸ்துவின் மரணத்திற்கு பிறகு சில வருடங்கள் கழித்து) அவரது நிதியமைச்சர் ஒரு அரவாணி ஆவார். அக்காலத்திலேயே ஒரு அரவாணி நிதியமைச்சராக பணிபுரிந்துள்ளார்! இது அன்றைய எத்தியோப்பிய சமூகம் அரவாணிகளை எவ்வாறு மதித்தது என்பதை புரிந்து கொள்ள இயலும். அவர் ஒரு முறை எருசலேம் சென்று திரும்பும் வழியில், இயேசுவின் முதன்மையான சீடர்களில் ஒருவரான பிலிப்பு என்பவரைச் சந்தித்தார். அவரிடம் கிறிஸ்துவைப் பற்றி அறிந்து, கிறிஸ்துவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, அவரை பின்பற்றுகிறார். கிறிஸ்துவை பின்பற்றியவர்களில், அனேகமாக முதல் அரவாணியாக அவர் இருக்கக்கூடும். அரவாணிகள் கிறிஸ்துவின் சீடர்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கிறிஸ்துவின் முதல் தலைமுறை சீடர்களால் புறக்கணிப்படவில்லை; மேலும், அந்த மனிதர்கள் குறித்து எந்தவித பாகுபாடும் அங்கு நிலவவில்லை, என்பதை புரிந்து கொள்ள இயலும்.
பவுலும், ஒனேசிமும் (அடிமையும்)
பவுல் கிறிஸ்துவின் முதல் தலைமுறை சீடர். இவர் உலகின் மிக முக்கிய பகுதிகளெங்கும் கிறிஸ்துவின் போதனைகளை பரப்பியவர். இவரது வாழ்வின் கடைசி காலத்தில் ரோம பேரரசர் (சீசர்) நீரோவால் சிறையிலடைக்கப்பட்டார், பின்பு மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டவர் ஓனேசிம் என்பவர். அவர் ஒரு அடிமை. பிலமோன் என்பவரின் அடிமையாய் இருந்தார். அவரும் கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக் கொண்டவர். சிறையிலிருந்தபோது பவுல், பிலமோனுக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்புகிறார். காலம் கி..பி.61ஆம் ஆண்டாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதில் ஒனேசிமை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அடிமையாக அல்ல; அன்பான சகோதரராக. மேலும், அவர் கடன் பட்டிருந்தால், அதற்கு பவுல் பொறுப்பேற்பார், எனவும் எழுதுகிறார். ஒனேசிம், அடிமையாக இருந்த போது, பிலமோனிடமிருந்து தப்பியோடிவிட்டவர். அன்றைய ரோம சட்டப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கலாம். அவரை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க பவுல் வேண்டுகிறார். மேலும் அன்பான சகோதரராக, சமத்துவத்துவத்துடன் நடத்த வேண்டும் என்கிறார். இவர்கள் அனைவரையும் இணைப்பது
கிறிஸ்துவின் போதனைகள்.
உலகெங்கும் அடிமைத்தனத்தை ஒழிக்க ஆப்ரகாம் லிங்கன் காலம் வரை மக்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
பீட்டரும், பிற சாதியினரும்
பீட்டரும் (பேதுரு அல்லது இராயப்பர்) கிறிஸ்துவின் முதல் தலைமுறை சீடர் ஆவார். அவர் கிறிஸ்துவின் போதனைகளைப யூதேயா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பறை சாற்றி வந்தார். அவருக்கு ஒருநாள் ஒரு கனவு (காட்சி) வந்தது. அதில் பெரிய கப்பற்பாயைப் போன்றதொரு விரிப்பு நான்கு மூலைகளிலும் கட்டபட்டு, வானிலிருந்து தரையில் இறக்கப்படுவதைக் கண்டார். அதில் நடப்பன, ஊர்வன, பறப்பன அனைத்தும் இருந்தன. “பீட்டர், எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு”, என்ற குரல் கேட்டது. அதற்கு, “வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும், தூய்மையற்றதுமான எதையும் நான் உண்டதேயில்லை”, என்றார். மீண்டும் இருமுறை, முன்பு ஒலித்தது போலவே குரல் ஒலித்தது.
இதன் உட்பொருளான, அனைத்து சாதியினருக்கும் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டுமென்பது, பின்பு அவருக்கு உணர்த்தப்படுகிறது. அனைத்து சாதியினரும் சமம், எந்தவித பாகுபாடும் கூடாது, என பீட்டருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
“வரிதண்டுவோரும், விலை மகளிரும் உங்களுக்கு முன்பே கடவுளின் ஆட்சியில் பங்கு பெறுவர்”, என்கிறார் கிறிஸ்து. “ஏழைகளே, கடவுளின் ஆட்சி உங்களுடையதே”, என்கிறார். “சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”, என்கிறார். காணாமல் போன ஆடு, ஊதாரி மகன் ஆகிய உவமைகள் மூலம் ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிக்கிறார். அவர்களும் சமூகத்தில், மற்றவர்களைப் போல் நடத்தப்பட வேண்டும் என்கிறார், அவர்களுடன்தான் அலைகிறார், உணவருந்துகிறார், உறவாடுகிறார். சமூகத்தை உயர் சாதியினரின் கட்டுக்குள் வைத்திருக்க உதவிய யூத சடங்குகளுக்கு எதிராய் செயல் ஆற்றுகிறார். அதனால் உயர் சாதியினரின் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறார். கொல்லவும் படுகிறார்.
ஆனால் நமது கிறிஸ்துவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதை சற்று பார்ப்போம். ஆரம்ப காலத்தில் கிறிஸ்துவத்துத்தை பரப்ப வந்த கிறிஸ்துவ மிஷனரிகள், தமிழ் மக்களிடையே நிலவிவந்த சாதிப்பாகுப்பாடு பெரும் சிக்கலாக இருந்தது. அவர்கள் சாதிகளை அங்கீகரிக்க வேண்டியிருந்தது. இது குறித்த பல விபரங்களை ஆ.சிவசுப்ரமணியனின், “கிறிஸ்துவமும், சாதியும்” என்ற நூலில் காணலாம்; (காலச்சுவடு வெளியிடு, 2001).
தமிழகத்தில் ஏறக்குறைய 16% மக்கள் கிறிஸ்துவர்கள். அனைத்து திருச்சபைகளையும் சேர்த்து மிக பெரிய சாதியாக இருப்பது தலித் கிறிஸ்தவர்கள்தாம். (அதனையடுத்துள்ள பெரிய சாதி கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த வன்னியர்கள் ஆவர். அதனையடுத்துள்ள பெரிய சாதி தென்னிந்திய திருச்சபையைச் சார்ந்த நாடார்கள் ஆவர்). இதில் மிகவும் பிந்தங்கியுள்ள சமூகம் தலித் கிறிஸ்துவ சமூகமே.
அவர்கள் கிறிஸ்துவர்களாக இல்லமலிருந்தாலாவது, அரசின் சில சலுகைகளைப் பெற்றிருக்க முடியும். கிறிஸ்துவ மதத்தில் உள்ள சாதிப்பாகுபாடுகளால் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள் இவர்களே. அதிலும் ஒடுக்கப்பட்டவர்கள், தலித் கிறிஸ்துவ பெண்கள். தலித் ஆண் கிறிஸ்தவர்களின் ஒடுக்குதலுக்கு இவர்கள் இரையாகிறார்கள்.
கிறிஸ்தவர்களிடையேயும் சாதிக் கொடுமைகளுக்கு சிறிதும் குறைவில்லை. சாதிவிட்டு சாதி திருமணங்கள் மிகவும் குறைவு. சாதிவிட்டு, சாதி காதல்கள் நசுக்கப்படுகின்றன. கவுரவ கொலைகளுக்கும் குறைவில்லை. மவுனமாக கொல்லப்பட்ட இதயங்களுக்கு கணக்கில்லை.
கிறிஸ்துவ திருச்சபைகளில் உள்ள உயர் பதவிகளிலும் சாதி தலை விரித்தாடுகிறது. இது சம்பந்தமாக சபைகளுக்குள் நடக்கும் பூசல்கள் குறித்து செய்திகள், செய்திதாள்களில் காணக்கிடைக்கிறது.
கிறிஸ்துவ பெண் துறவிகள் (கன்னியாஸ்திரிகள்) கிறிஸ்துவ ஆண் துறவிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை நாம் அடிக்கடி செய்தி தாள்களில் காண்கிறோம். இவ்விஷயத்தில் சாதியும், ஆணாதிக்கமும் கை கோர்த்து கொள்கின்றன. ரோமன் கத்தோலிக்க திருச்சபையில், இது வரை ஒரு பெண் பாதிரியாராக வர அனுமதி இல்லை. பெண்ணியப் பார்வையில் விவிலியம் என்ற நூலில் இது குறித்த சில விபரங்களைக் காணலாம். (காலச்சுவடு வெளியிடு, 2006). கட்டுரையாளரின் இந்த நூல் குறித்த மதிப்புரையை கீற்று இணையதளத்தில் (www.keetru.com) காணலாம்.
இதோடில்லாமல் சபைகளில் நிதி நிர்வாக முறைகேடுகள் பற்றிய செய்திகளையும் நாம் கேள்வியுறுகிறோம். பணத்தின் மீதான ஆசையே அனைத்து தீமைகளுக்கும் வேராயிருக்கிறது, என்பது விவிலியத்தின் கருத்து. அது பொதுவாக அனைவரும் மறந்துவிட்ட ஒரு கருத்தாகிவிட்டது.
கிறிஸ்து அதிகார மையங்களுக்கு எதிராக இருந்தார். தற்போது அதிகாரங்களின் மையமாக அவர் ஆக்கப்பட்டுவிட்டார். இவைகளையெல்லாம் பார்க்கும்போது “உலகில், ஒரே ஒரு உண்மை கிறிஸ்துவர், கிறிஸ்து மட்டுமே”, என்ற தாஸ்தயேவேஸ்கியின் கூற்று, நமக்கு நினைவுக்கு வருவதை தடுக்க முடியாது.
- ம.ஜோசப் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
தயவுசெய்து மனிதனை எதனாலும் பிரிக்காதிர்கள்
தங்களது கருத்துகளுக்கு நன்றி.
முத்துக்குட்டி அவர்கள், எனது பதிவின்படி கிறிஸ்துவ மதத்திலும் சாதி ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்கிறார். " கிறிஸ்துவ மதத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன, என்பது யதார்த்தம். ஆ.சிவசுப்ரமணியன ின் கிறிஸ்துவமும், சாதியும் என்ற நூல் இதைப்பற்றி விபரமாக கூறுகின்றது.
கிறிஸ்து சாதியைப் பற்றி என்ன போதித்தார்? எவ்வாறு வாழ்ந்தார்? யதார்த்தம் எவ்வாறிருக்கிறத ு என்பதே எனது பதிவு.
இதிலே முக்கியமாக கவனிக்க வேண்டியது இயேசு என்னிடத்திலே கானானிய பெண் என்றோ யூத பெண் என்றோ எந்த பாகுபாடும் இல்லை என்று கூறவில்லை என்பது மட்டுமல்ல, தேவ வாக்கியத்தில் “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளு க்கு போடுகிறது நல்லதல்ல” என்று கூறியதாகும். பிள்ளைகளின் அப்பம் என்பது இங்கே இயேசு கிறிஸ்துவானவரே என்பது வெளிப்படை. இயேசு கிறிஸ்து யூதர்களுக்காக வந்தாரே அல்லாமல், புறஜாதியினருக்க ு அல்ல என்பதாம். மூல பாசையில் நாய்களே குறிப்பிடப்பட்ட ுள்ளன. நாய்க்குட்டிகள் என்று மொழிபெயர்ப்பில் திருத்தம் செய்திருக்கிறபட ியினால், நாம் நாய்கள் என்பது யார் என்று அறிய கடப்பாடு உள்ளவர்களாக இருக்கிறோம். யூதரல்லாதவர் அனைவரும் நாய்கள் அல்ல. யூதரை போல பன்றி மாமிசம் சாப்பிடாதவர்கள் ஆனால் யூதரல்லாத கானானியர், பினீசியர்களை நாய்கள் என்று பழைய ஏற்பாடு அறிவிக்கிறது. பன்றி மாமிசம் சாப்பிடுவர்களை பன்றிகள் என்றே அழைக்கிறது. ஆகவே பன்றிகளுக்கு எதிராக முத்துக்களை சிதற விட வேண்டாம் என்ற மொழி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி யூதரல்லாதவர்களி டம் பேச வேண்டாம் என்பதே. இயேசுவின் தேவவாக்கியத்தில ் எந்த இடத்திலும் என்னிடம் கானானிய பெண் என்றோ யூத பெண் என்றோ பாகுபாடு இல்லை என்பதை காணவியலாது. நாய்களான புறஜாதியார் யூதர்களுக்கு கீழே பணிவிடை செய்து வாழ வேண்டியதாம் என்பதே இயேசு இங்கே அறிவிக்கும் உண்மை. அதனை ஏற்றுகொள்ளும் புறஜாதியாரை இயேசு அங்கீகரிக்கிறார ் என்பதே நாம் இங்கே காணவேண்டியது. ஆகவே இயேசு ஜாதியை ஒதுக்கினார் என்று கூறுவது தவறான கருத்தாகும்.
ஒரு சம்பவதை மட்டும் கருத்தில் கொண்டு உறுதியான முடிவிற்கு வர இயலாது, என நான் கருதுகிறேன்.
இச்சம்பவம் குறித்து நானும் பல காலமாய் சிந்தித்தே வருகிறேன். ஜெய சீலியின் நூலான பெண்ணிய பார்வையில் விவிலியம் (காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடு - டிசம்பர் 2006) என்ற நூலுக்கான எனது விமரிசனத்தை முடிந்தால் படிக்கவும். கீற்று இணைய தளத்தில் விமரிசனங்கள் பகுதியில் அதைக் காணலாம். (முடியுமெனில் அந்த நூலையும் வாசிக்கவும்).
அதில் இதற்கு பதில் கூற முயற்சித்துள்ளே ன். ஆனால்
அது உறுதியானது எனவும் என்னால் கூற இயலாது.
நன்றி.
உறுதியான முடிவிற்கு வர இயலாது என்பது சரியானதாகும். ஆனால், இது ஒரு
சம்பவம் மட்டுமே அல்ல. பல சம்பவங்கள் புதிய ஏற்பாட்டில் உள்ளன. ஆனால் இது
முக்கிய சம்பவமாகும். ”உன்னைப்போல உன் அயலானையும் நேசி” என்றுள்ளது
உண்மையே. ஆனால் அயலான் யார் என்பதே கேள்வி. அயலான் யார் என்பதை பலர்
ஆராய்ந்து அந்த அயலான் என்பவன் இன்னொரு யூதனே. ரோமானியரோ, கானானியரோ
அல்லது பினீசியரோ அல்ல என்று கூறியுள்ளார்கள் . strugglesforexistence.com/.../
யூதர்கள் இயேசுவை கொல்லவில்லை. யூத குருமார்களே இயேசுவை கொல்ல
திட்டமிட்டனர். காரணம், பழைய ஏற்பாடு வசனங்களுக்கு யூத குருமார்கள் கூறிய
பொருளுக்கு மாறாக பொருள் கூறியதாலேயே என்று கருத இடமுள்ளது. யூத
குருமார்கள் சடங்குகளை அதிகம் பினபற்றினர். (உணவுக்கு முன்னால் கை
கழுவுதல் போன்றவை) இயேசு அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
சடங்குகளில் ஆர்வம் கொண்டிருந்த குருமார்கள் இயேசுவை கொல்ல முனைந்து
வெற்றி பெற்றார்கள். ஆனால் ஒரு இடத்திலும் அவர் யூதர்களின்
முக்கியத்துவத்தை குறைக்கவோ, அல்லது அவர்களை தாழ்த்தவோ, மற்றவர்களுக்கு
சமமாகவோ கருதவே இல்லை, கருத்து கூறவும் இல்லை. யூதர்களுக்காகவே இயேசு
வந்தார் என்பதை பலமுறை இயேசுகிறிஸ்துவா னவர் கூறுகிறார். மத்தேயு 10.5.
இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக்
கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப்
போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், 6. காணாமற் போன
ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற் குப் போங்கள்.7. போகையில்,
பரலோகராஜ்யம் சமீபித்திருக்கி றது என்று பிரசங்கியுங்கள் . இயேசு
கிறிஸ்துவானவர் இஸ்ரவேல் வீட்டாரிடம் மட்டுமே போகவேண்டும் என்று தன்
சீடர்களுக்கு கட்டளையிட்டுள்ள ார். மற்றொரு இடத்தில் மத்தேயு 28.19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய ் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா
குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
Go ye therefore, and teach all nations, baptizing them in the name of
the Father, and of the Son, and of the Holy Ghost: என்று சொல்லுகிறார்.
உயிர்த்தெழுந்த பின்னால், இவ்வாறு கூறுவதன் மர்மமென்ன என்று சிந்திக்க
வேண்டும். இங்கே இருக்கும் all nations என்பதன் பொருள் சகல ஜாதிகள் என்று
பொருளல்ல. இங்கே பல தேசங்களையும் என்றுதான் பொருளாக வேண்டும். ஏனெனில்
இயேசு கிறிஸ்துவானவர் மரித்தபோது யூதர்கள் பல தேசங்களிலும் அடிமைகளாக
பிரிந்து கிடந்தார்கள். இஸ்ரவேலே ரோமாபுரியின் கீழ் அடிமையாக இருந்தது.
உரோமராஜ்யத்தின் ராஜாதிபதிகள் இஸ்ரவேலரை தாங்கள் ஆண்ட இடங்களிலெல்லாம்
அடிமைகளாக கொண்டு சென்றிருந்தார்க ள். ஆகவே தான் இங்கே
இயேசுகிறிஸ்துவா னவர் சகல தேசங்களுக்கும் செல்லவேண்டுமென் கிறார். மற்றொரு
வகையில் பார்த்தாலும் கானானிய பெண்ணிடம் சொன்னதையே இங்கே
திருப்பிசொல்லுகிறார். பரலோக சாம்ராஜ்யம் யூதர்களுக்குத்த ான். ஆனால் சகல
ஜாதியினரும் வரலாம். யூதர்களுக்கு அடிமைகளாகவோ அல்லது நாய்களாகவோ இருக்க
பிரியப்படுகிறவர்கள் வரலாம். அடுத்த வரியில் பொதிந்திருக்கும ் உண்மை.
மத்தேயு28.20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள்
கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இயேசு கிறிஸ்துவானவர்
அதுவரை அப்போஸ்தலர்களுக ்கு கட்டளையிட்டது யூதர்களுக்கான பரலோகசாம்ராஜ்யம்
தான். அதற்கு சகலஜாதிகளும் வேலை செய்ய அனுமதி. நாய்களான புறஜாதியார்
யூதர்களுக்கு கீழே பணிவிடை செய்து வாழ வேண்டியதாம் என்பதே இயேசு இங்கே
அறிவிக்கும் உண்மை.
"(வெளிப்படுத்தி ன விஷேசத்தில்)15. புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; " என்றும் தேவவாக்கியம் கூறுகிறது. ஆகவே புறஜாதிகள் என்றுமே யூதர்களுக்கு இணையாக முடியாது. இணையாகவும் கூடாது ஆகவே இங்கும் யூதர்களது முக்கியத்துவமே சிறப்படைகிறது. ஆகவே இயேசு ஜாதியை ஒதுக்கினார் என்று கூறுவது சரியல்ல.
*இயேசுவும் நூற்றுவர் தலைவரும்*
ஒருமுறை ரோம படையின் நூற்றுவர் தலைவன் (உரோமை குடிமகன்) ஒருவனுடைய பையன் முடக்குவாதத்தால ் பாதிக்கப்பட்டிர ுந்தபோது இயேசுவிடம் வந்து, _*"ஐயா, என் பையன் முடக்குவாதத்தால ் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்"_ என்றார். இயேசு அவரிடம், _"நான் வந்து அவனைக் குணமாக்குவேன்"_ என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, _"ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் 'செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் 'வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து 'இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்"_ என்றார். இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, _"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை"_ என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, _"நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்"_ என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான். (மத்தேயு 8:5-10)_*
இங்கே நூற்றுவர் தலைவர் இயேசுவிடம், _*"நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்துவைக் க நான் தகுதியற்றவன்"*_ என்று ஏன் சொல்கிறார்?
யூதர் அல்லாதவர்களோடு யூதர்கள் திருமண ஒப்பந்தம் செய்யக்கூடாது (இ.ச. 7:3,4) என்று கடவுள் சொன்னதை தவறாகப் புரிந்துகொண்டு யூதர் அல்லாதவரை, யூதர்களுடைய வீடுகளில் அனுமதிப்பதும் இல்லை; யூதர்கள் யூதர் அல்லாதவருடைய வீடுகளுக்கு போவதும் இல்லை. அப்படி செய்வது தீட்டு என்று யூதர்கள் நினைத்தனர் (யோவான் 18:28). யூதர்கள், யூதர் அல்லாதவர்களோடு பழகுவதில்லை (யோவான் 4:9). ஆனால், கடவுள் *மனிதர்களுக்குள ் அன்பை உருவாக்கவேண்டும ்* என்ற நோக்கத்தோடுதான் திருச்சட்டத்தை கொடுத்தார் என்பதை இயேசு கிறிஸ்து தெரிந்து வைத்திருந்ததால் அவரே நேரில் வந்து குணப்படுத்துவதா க கூறினார்.
_*நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் 'செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் 'வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து 'இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்"*_ என்று நூற்றுவர் தலைவர் சொல்வதிலிருந்து இயேசு கிறிஸ்து நூற்றுவர் தலைவருடைய வீட்டுக்கு வராமலேயே அவர் நின்றுகொண்டிருந ்த இடத்தில் நின்று சொன்னாலே அவருடைய வார்த்தையின் வலிமையால் தன் பையன் குணமடைவான் என்ற நூற்றுவர் தலைவருடைய முதிர்ந்த நம்பிக்கையை பார்த்து அந்த பையனை குணப்படுத்தினார ். இங்கு இயேசு இனப்பாகுபாடு காட்டாமல் இஸ்ரவேலர் வழிபட்ட கடவுள் அனைத்து மக்களுக்கும் பொதுவான கடவுள் என்று நிரூபிக்கிறார்.
_*என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வா ர்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். (மத்தேயு 10:18)*_
_*ஆண்டவர் அனனியாவிடம், "நீ செல். அவர் (பவுல்) பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக ் கொண்ட கருவியாய் இருக்கிறார். (திருத்தூதர் 9:15)*_
மேற்கண்ட வசனங்களிலிருந்த ு இயேசுவின் சீடர்கள் பிற இனத்தவரிடம் (இஸ்ரயேலர் அல்லாதவர்களிடம் ) சான்று பகர்ந்து அவர்களும் இயேசு கிறிஸ்துவின் மீட்பைப் பெற்றுக்கொள்ள இயேசு கிறிஸ்து விரும்புவதை அறிகிறோம்.
_*இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். (யோவான் 10:16)*_ _*வேறு ஆடுகள்*_ என்று இஸ்ரயேலர் அல்லாதவர்களை இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார்.
இயேசு கிறிஸ்து மொத்த உலக மக்களுக்கும் பொதுவான மீட்பராக இருக்கிறார் என்பதை பல ஆதாரங்களோடு நாம் படித்தோம். ஆனால், இயேசு கிறிஸ்து சிலுவையில் தன் உயிரை கொடுப்பதற்குமுன ் ஒருமுறை தன் திருத்தூதர்களை அருட்பணிக்கு அனுப்பும்போது, _*"பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். (மத்தேயு 10:5-6)*_ என்று கூறினார். இந்த உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் பொதுவான மீட்பர் ஏன் இப்படி ஓரவஞ்சனையாக பேசுகிறார்? _*கடவுள் ஓரவஞ்சனையோடு செயல்படுபவரல்ல (திருத்தூதர் 10:34)*_ என்று வேதம் சொல்கிறதே! கடவுளின் பிரதிநிதியாக வந்த இறை மைந்தன் இப்படி பேசியது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
புதிய ஏற்பாட்டிலுள்ள இந்த சிக்கலான பகுதியின் விளக்கத்தை நாம் புரிந்துகொள்ள உயிர்த்தெழுந்தப ின் பேசிய வார்த்தைகளை ஆராய்வோம்.
இயேசு உயிர்த்தெழுந்து பரமேறுமுன் தன் திருத்தூதர்களை பார்த்து, "நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். (திருத்தூதர் 1:4)*_ என்றார்.
இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக ்கும் _*தந்தையின் வாக்குறுதி*_ என்றால் என்ன?
*இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந் து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள்" என்றார். (லூக்கா 24:49)*_
இந்த வசனத்தில் வரும் _*உன்னதத்திலிருந் து வரும் வல்லமை*_ என்பது என்ன? அந்த வல்லமை நமக்கு ஏன் தேவை?
_*தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்க ும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார். (திருத்தூதர் 1:8)*_
ஆக, நாம் இயேசுவுக்கு சாட்சியாக நிற்பதற்கு தேவைப்படும் வல்லமையை தூய ஆவியாரிடம் பெற்றுக்கொள்வது வரை புறவினத்தாரிடம் போகக்கூடாது என்று இயேசு எச்சரிக்கிறார். தன் சீடர்கள் இஸ்ரயேலர் அல்லாதவர்களிடம் போய் அருட்பணி செய்யுமளவுக்கு ஆயத்தமானபின் அவர்களிடம் போகலாம் என்பதை இங்கே தெளிவாக அறிகிறோம்.
இயேசுகிறிஸ்து தான் அருளும் மீட்பு இவ்வுலகின் எல்லா மக்களுக்கும் சென்றடையவேண்டும ் என்னும் கொள்கை உடையவர். அதனால்தான், _*"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையு ம் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். (மத்தேயு 28:19)*_ என்று தன் சீடர்களுக்கு கட்டளையிட்டார்.
_*என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். (யோவான் 14:26)*_ என்று இயேசு கூறினார்.
தூய ஆவியார் நமக்குள் வந்தால் நாம் எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்று அவர் நமக்குக் கற்றுத்தருவார். நாம் செய்யும் தவறுகளை செய்யவிடாமல் ஆவியார் கண்டித்து உணர்த்துவார்.
_*சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம் (மத்தேயு 10:5)*_ என்று திருத்தூதர்களிட ம் கூறிய இயேசு அவர்களோடு சேர்ந்து சமாரியாவுக்கு போய் ஊழியம் செய்தார் என்றும் வேதத்தில் வாசிக்கிறோம்.
_*கலிலேயாவுக்கு அவர் சமாரியா வழியாகச் செல்லவேண்டியிரு ந்தது. அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந் த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று கேட்டார். அந்த சமாரியப் பெண் அவரிடம், "நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர ். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். (யோவான் 4:4-9, 40)*_
இயேசு கிறிஸ்து புறவினத்தாரை வெறுத்திருந்தால ் சமாரியாவுக்கு தன் சீடரோடு போயிருக்கமாட்டாரே!
*கானானிய பெண்மணியும் இயேசுவும்*
இயேசு ஊனுடலோடு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் பலரை சந்தித்தார். அந்த வரிசையில் ஒரு கானானிய பெண்மணியைச் சந்தித்தார். அந்த சம்பவத்தை பார்ப்போம்.
_*கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாக ி இருக்கிறாள்" எனக் கதறினார். ஆனால், இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, "நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர். அவரோ மறுமொழியாக, "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் " என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்" என்றார். அவர் மறுமொழியாக , "பிள்ளைகளுக்குர ிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். உடனே அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்றார். இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது. (மத்தேயு 15:28)*_
மேற்கண்ட இறை வார்த்தைகளில், "பிள்ளைகளுக்குர ிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்று இயேசு கிறிஸ்து பயன்படுத்தியது ஏன்? அனைத்து மக்களுக்காகவும் தன் உயிரையே கொடுக்கும் அளவுக்கு அன்புள்ள கருணாமூர்த்தி ஏன் இப்படி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார் ? நிச்சயமாகவே அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர் அப்படி பேசியிருக்கமாட்டார்.
இயேசுவோடு இணைந்திருந்த 12 திருத்தூதர்களும ் யூத பின்னணியத்தைச் சார்ந்தவர்கள். யூதர்கள் பொதுவாக யூதர் அல்லாதவர்களை தரக்குறைவாக நினைக்கும் குணமுடையவர்கள். அவர்கள் மட்டும்தான் நிஜமான கடவுளை வணங்குகின்றவர்க ள் என்ற தற்பெருமை உடையவர்கள். எப்படி இந்த தற்பெருமை இவர்களுக்கு வந்தது?
_*நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைபிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும் , நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள். (விடுதலைப் பயணம் 19:5)*_
மேற்கண்ட வசனத்தின்படி கடவுளுடைய வார்த்தைப்படி வாழ்பவர்களை கடவுள் சிறப்பானவர்களாக கருதுகிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால், இயேசு மக்களுக்கு போதிக்கும்போது, "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்ற னர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். (மத்தேயு 23:2-3)*_ என்று கூறினார். அதாவது யூதர்கள் தங்கள் மதத்தைப் பற்றி பெருமையடித்துக் கொண்டாலும் அதைக் கடைபிடிப்பதில்ல ை என்று அறிகிறோம். இப்படிப்பட்டவர் கள் தங்கள் விருத்தசேதனத்தை ப்பற்றி பெருமையாக பேசி பிற மதத்தவரை இழிவுபடுத்துவர்.
_*பிறப்பால் பிற இனத்தாராய் இருந்த நீங்கள், உங்கள் முன்னைய நிலையை நினைவில் கொள்ளுங்கள். உடலில் கையால் விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள் உங்களை விருத்தசேதனம் செய்யாதோர் எனக் கூறி இகழ்ந்தார்கள். (எபேசியர் 2:11)*_ என்று பவுல் எபேசு திருச்சபையாருக் கு எழுதுகிறார்.
இப்படிப்பட்ட பெருமையில் இந்த சீடர்களும் வாழ்ந்து, "நாங்கள்தான் கடவுளுக்கு நெருக்கமானவர்கள ்" என்று பிதற்றியிருக்கக ்கூடும். 'கிறிஸ்துவின் இரட்சிப்பு யூதர்களுக்கு மட்டுமே உரியது' என்றும் தலைமுறை பகையோடு நினைத்திருக்கலா ம். அதனால்தான் இயேசுவிடம், ""நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்" என்று சீடர்கள் கூறியிருக்கவேண் டும். இந்த சூழ்நிலையில் அப்பெண், "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாக ி இருக்கிறாள்" என்று விண்ணப்பிக்கிறா ள். அப்போது, 'புறவினத்தாரும் கடவுளுடையவர்கள் தான்; அவர்களையும் கடவுள் நேசிக்கிறார்; அவர்களும் கடவுளை நேசிக்கிறார்கள் ' என்று தன் சீடருக்கு புரியவைத்து ஓர் இணைப்புப் பாலம் கட்ட அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தினார் .
எனவே, யூதர்களால் 'நாய்க்குட்டிகள ்' என்று இகழப்படும் புறவினத்து மக்களுக்கு இயேசுவின்மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவத ற்காகத்தான் இயேசு அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார் . ஏனென்றால் அப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தாவிட் டால், "தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்று அந்த பெண் சொல்லி தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியி ருக்கமாட்டார். அவளுக்கு தன்மீது நம்பிக்கை உண்டு; ஆனால் அது சந்தர்ப்பவாத நம்பிக்கை அல்ல; உண்மையான கடவுளோடு அப்பெண்மணி இணைய விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்த இப்படி ஒரு குழப்பமான உரையாடலை கொண்டுசென்றிருக ்கிறார் நம் குருநாதன்.
அந்த பெண்மணியின் நம்பிக்கை அறிக்கையை எல்லாரையும் வைத்து கேட்கவைத்தபின், _*"அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்"*_ என்று கூற அந்த பிள்ளை குணமடைகிறது. புறவினத்தாரை இயேசு கிறிஸ்து வெறுத்திருந்தால ், இவர் அந்த பெண்மணியின் குழந்தைக்கு அற்புதம் செய்திருக்கமாட்டாரே!
கிறிஸ்து தன்னிடம் வந்த எல்லோரையும் உள்ளன்போடு ஏற்றுக்கொண்டார் . _*தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன ். (யோவான் 6:37)*_ என்று தெளிவாக சொல்லிவிட்டார்.
இயேசு அகில உலகத்துக்கும் பொதுவான மீட்பர் என்பதை தெளிவான ஆதாரங்களோடு படித்துவிட்டோம் . ஆனால், _*"இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் "*_ என்று இயேசு ஏன் தனிமைப்படுத்திச ் சொன்னார்?
இந்த கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பதில ்தான் இயேசு கிறிஸ்துவின் மனத்தாழ்மையும் பொறுப்புணர்ச்சி யும் விளங்கும்.
_*யூதர்களின் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலைப் பேதுருவுக்குத் தந்தவரே பிற இனத்தாருக்குத் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலை எனக்கும் தந்தார். (கலாத்தியர் 2:8)*_ என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார்.
இயேசு 100% கடவுளுக்கு சமமாக இருந்ததுபோல கடவுளோடு மனிதனை இணைக்கும் 100% மனிதனாகவும் இருந்தார். மனிதனாக இருந்தபோது தந்தையின் திருத்துதராகவும ் இருந்தார்.
_*தூய சகோதர சகோதரிகளே, விண்ணக அழைப்பில் பங்கு கொண்டவர்களே, நாம் அறிக்கையிடும் திருத்தூதரும் தலைமைக் குருவுமான இயேசுவைப்பற்றி எண்ணிப்பாருங்கள ். (எபிரேயர் 3:1)*_ என்னும் வசனப்படி இயேசு கிறிஸ்துவும் ஒரு திருத்தூதர் (Apostle). திருத்தூதர் என்னும் நிலையில், அவருடைய தந்தை அவரை இஸ்ரயேலருக்கென் று திருத்தூதராக நியமித்து அனுப்பி, அந்த நோக்கத்தில் முனைப்பாக இருந்து, இஸ்ரயேலர்களுக்க ு முதலில் பாவ மன்னிப்பின் நற்செய்தியை அறிவிப்பதாக இருந்திருக்கலாம ்.
வேறோரு காரணத்தை நாம் சொல்லலாம்.
_*முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள ். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும். (மத்தேயு 7:5)*_ என்று அவரே சொன்ன வசனத்தின்படி கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கு முதலில் பாவமன்னிப்பைப் பற்றி போதித்து அவர்களை நெறிப்படுத்தியப ின் அவர்களை வைத்து புறவின மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கலாம் என்று தீர்மானித்திருக ்கலாம். ஏனென்றால், _*"யூதரிடமிருந் தே மீட்பு வருகிறது. (யோவான் 4:22)*_ என்று கிறிஸ்து கூறுகிறார்.
RSS feed for comments to this post