இன்னமும்
சளிபிடித்திருக்கிறது.
என்றால்
அம்மா சுக்குக் கசாயம் போட்டுத்
தருகிறாள்.

சுகர் இருக்கிறது
என்றாலும்
அப்பா சர்க்கரை குறையாமல்
காபி குடிக்கிறார்

இவளைத்தான்
கட்டுவேன் என ஒற்றைக்காலில்
நிற்கிறான் அண்ணன்

ஒழுங்கா படிடா
கவிதை வேணாம்டா
என்றாலும்
எழுதிக்கொண்டுதான்
இருக்கிறேன்

Pin It