மரங்களைச் சுமந்து நிற்கும்
மழைமுகில் தவழ்ந்து ஓடும்
சரமலர் வாசத் தோடு
சந்தனம் கமழ்ந்து வீசும்
விரல்களை விரித்த காந்தள்
விளக்கென ஒளியைக் கூட்டும்
அரவென நெளிந்த ஓடை
அருவியாய்த் தரையில் வீழும்!
கிளையதன் மேலி ருந்து
கிளியொடு குயில்கள் பாடும்
வளைமுது கோடு மந்தி
வான்கனிக் கடுவன் தேடும்
விளைமணி மலையில் ஊறி
வியத்தகு ஓடை ஆகித்
திளைத்திடும் அருவி யேதான்
தீம்பொழில் வயல்கள் சேரும்!
மலையதன் மீது எங்கோ
மறைவினில் தோன்றி மெல்ல
அலையெது மின்றிச் சுற்றி
அத்தனை மருந்தும் சேர்த்துத்
தலையது குளிர ஊற்றித்
தளிருடல் நோயைத் தீர்க்கும்
விலையிலா அருவிப் பெண்ணே
வியந்துனை வாழ்த்து கின்றேன்!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ச.க.வை வீழ்த்துவோம்!
- ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் சட்ட ஏற்பளிக்கும் மோடியின் தேர்தல் பத்திரத் திட்டம்
- இந்துக்களின் வாக்குகளை அணி திரட்டவே CAA வெளியீடு
- வங்கித் துறையை சீரழித்த மோடி அரசு
- காடு திறந்து கிடக்கிறது
- காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம் - வழ வழா அறிக்கை
- தமிழ்நாடு மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தெற்கு ஏன் மோடியை நிராகரிக்கிறது? அதற்கான முக்கியத்துவம் தான் என்ன?
- பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2)