முறுங்கையேறிய வேதாளம்

விக்கிரமாதித்தனின் விடைக்கிறங்கும்

நொதித்தக் கதைகளை கிளர்த்தி

செய்கை புரிதலற்றிருக்க வினவினேன்

அடங்கொள்ள கைக்கொண்ட தூண்டிலை

வான்நோக்கி வீசியபடி இருக்கக் கண்டு

சாமியிடம் சேர்ந்தவர்கள்

நட்சத்திரங்களாகி உதிர

சிக்கிடச் செய்கிறேன்

பாட்டியாயின் கதை கேட்பேன்

பசங்களாயின் விளையாடுவேனென்றான்
Pin It