முறுங்கையேறிய வேதாளம்
விக்கிரமாதித்தனின் விடைக்கிறங்கும்
நொதித்தக் கதைகளை கிளர்த்தி
செய்கை புரிதலற்றிருக்க வினவினேன்
அடங்கொள்ள கைக்கொண்ட தூண்டிலை
வான்நோக்கி வீசியபடி இருக்கக் கண்டு
சாமியிடம் சேர்ந்தவர்கள்
நட்சத்திரங்களாகி உதிர
சிக்கிடச் செய்கிறேன்
பாட்டியாயின் கதை கேட்பேன்
பசங்களாயின் விளையாடுவேனென்றான்