எங்களைச்
செடியில் வைத்தாலென்ன?
குடுவையில் வைத்தாலென்ன?
நிச்சயிக்கப்பட்ட
நேரம் வரை
மலர்ச்சியாகவே தோற்றமளிக்க
வேண்டியவர்கள் நாங்கள்
பிரிவோம் என்று
தெரிந்த பின்னும்
பெற்றெடுக்கின்றன செடிகள்
பறிப்போம் என்றே
தினமும்
புதுமலரை நாடும்
கைகள் -
மறுக்க முடியாத நிலையில்
நாங்கள்...
Pin It