இயல்பாய் கரம் வந்திறங்கும்
பட்டாம்பூச்சியாய் சில கணங்கள்.....
உள்ளங்கையிலேந்திய நீரை
சிந்தாமல் கொண்டு சேர்க்கும்
எத்தனங்கள் சில நேரம்....
பருத்தி வேட்டியாய் காய்த்த
அபூர்வ நிகழ்வுகள்....
துண்டுகளாய் உடைந்து சிதறிய
கண்ணாடிச்சில்லுகளை
ஒட்டவைக்கும் முயற்சிகள்
சில நேரம்....
நம்பிக்கைக்கும்
நம்பிக்கையின்மைக்குமிடையே
ஊசலாடுகிறதென்
சாமான்ய வாழ்க்கை!

Pin It