இயற்கைத்தாய்க் கோயில்முன்
எழுந்துநிமிர் கொடிமரமா?
வியக்கின்றோம் விண்தூசை
விரட்டும் ஒட் டடைக்கோலா?
மேகவண்ணம் தொட்டெழுதும்
மிடுக்கான ஓவியனோ!
வாகான தூண்டில் இதோ
வட்டநிலா தொட்டிழுக்க!
காற்றைக் கடைந்தபடி
கனிவான மின்சார
ஊற்றைக் கறந்துலகில்
ஒளிகாட்டத் துடிக்கின்றாய்!
பன்னாட்டுக் குழுமத்தில்
பணியாற்றும் தோழன்போல்
என்றைக்கும் விடுமுறையே
இல்லாமல் சுற்றுகிறாய்!
கவியெழுதும் போது அலுத்துக்
கைவிட்ட பூவுலகக்
கவிஞன்தன் எழுதுகோல்
காட்சிக்கு நீசாட்சி!
நிலமகளின் பாட்டுக்கு
நெஞ்சுருகிக் கசிந்தன்பால்
தலையாட்டிக் கொண்டு ஒற்றைக்
காலால் தவமிருக்கும்
எந்திர முனிவன்நீ!
எப்போதும் உழைப்புக்குச்
சொந்தம் கொண்டாடிச்
சோம்பலை விரட்டென்று
எல்லோர்க்கும் சொல்லுகிற
எழிலான வழிகாட்டி!
நல்லோய் காற்றாலை!
நாமணக்க வாழ்த்துகிறேன்!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
செம்மலர் - அக்டோபர் 2011
- விவரங்கள்
- பழனி சோ.முத்துமாணிக்கம்
- பிரிவு: செம்மலர் - அக்டோபர் 2011