ஒரு வெள்ளைக்காரப் பயணி எகிப்தைச் சுற்றிப்பார்க்க வந்திருந்தான். ஊர் திரும்பும் வேளை வந்துவிட்டது. ஏதாவது வந்த நினைவுக்கு பொருள் வாங்கிச் செல்லலாம் என்று ஒரு பழம்பொருள் விற்பனைக் கூடத்தினுள் நுழைந்தான். அங்கு பலபொருள்களைப் பார்த்தான். எதுவும் மனதுக்குப் பிடிக்கவில்லை.

கடைசியில் கடைக்காரன் ஒரு பளபளப்பான மண்டையோட்டைப் பயணிக்குக் காட்டி “இது உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் மண்டை யோடு, கெய்ரோ நகரில் நீங்கள் வேறெங்கும் இதைப்பார்க்க முடியாது”- என்று கூறினான். பயணி “இதன் விலை என்ன?” என்று கேட்டான். கடைக்காரன் ஆயிரம் டாலர்கள் என்றதும் இவன் ஐயோ வேண்டாம் என்றான்.

பின்பு கடைக்காரன் ஒரு சிறிய மண்டையோட்டைக் கொண்டுவந்து “இது நூறு டாலர்தான், வாங்கிச் செல்லுங்கள்” என்றான். பயணி “இது யாருடைய மண்டை ஓடு?” என்று கேட்டான். அதற்கு கடைக்காரன் “இதுவும் கிளியோ பாட்ராவின் மண்டையோடுதான். சின்னவயதில் எடுத்தது” என்றான். வெள்ளைக் காரப் பயணி தலைதெறிக்க ஓட்டம் பிடித்தான்.

திமுக தலைவர் கருணாநிதி நடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கெய்ரோ வியாபாரியைப் போலவே தமிழக வாக்காளர்களிடம் பேரம் பேசினார். ஏமாற மாட்டோம் என்று வாக்காளர்கள் அவரை விட்டு ஓடினர். இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று கூறி அதிமுக கூட்டணிக்கே வாக்களித்துள்ளனர்.

தமிழகத் தேர்தல்களில் 1967-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் புகழ்மிக்க தாகும். காங்கிரஸ் ஆட்சிக்கு அடியோடு சமாதி கட்டிய தேர்தல் அது. அதிகாலை யிலேயே வாக்காளர்கள் தாங்களாகவே ஆயிரக்கணக்கானவர்கள் வாக்குச் சாவடி களில் குவிந்தனர். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு ஓட்டுக்கு ரூ.5, ரூ.10 வரை வழங்கியது. பலஇடங்களில் எதிர்க்கட்சியினரை வாக்களிக்க விடாமல் காங்கிரசார் அராஜகங்களில் ஈடுபட்டனர். அதை யும் மீறி அன்றைய திமுக அணிக்குப் பெருவாரி யாக மக்கள் வாக்களித்தனர்.

அந்தத் தேர்தலுக்கு மறுநாள் பத்திரிகைகள் “ஆண்டி முதல் அரசன் வரை - தோட்டியிலிருந்து தொண்டமான் வரை” வாக்களித்ததாய் செய்தி களை வெளி யிட்டன. அதே போன்று அனைத்துப் பகுதிமக்களும் கீழிருந்து மேல்வரை திரண்டு வந்து வாக்களித்துள்ளனர் இந்தத் தேர்தலில். எனவே 1967 தேர்தல் போலவே இப்போதும் தலைகீழான ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று நோக்கர் கள் கூறுகின்றனர்.

இம்முறை தேர்தலின் கதாநாயகன் தேர்தல் கமிசன்தான். வரலாறு காணாத வகையில் தனது முழு அதிகாரத்தையும் செலுத்தி நேர்மையான தேர்தலை நடத்திய பெருமை தேர்தல் கமிசனையே சேரும். பணம், ரவுடித்தனம், அராஜகம் மூலம் வெற்றிபெற்று விடலாம் என்று மனப்பால் குடித்த திமுகவின் சட்டவிரோத நடவடிக்கைகள் பெரு மளவுக்குத் தடுத்து நிறுத்தப்பட்டன. வாக்காளர் களுக்குத் தரப்படவிருந்த சுமார் 50 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

விலைவாசி உயர்வு, ஊழல்கள், குடும்ப ஆட்சி யின் அட்டகாசங்கள், அராஜகங்கள், கொலை, கொள்ளைகள், கொடூரமான மின்வெட்டு போன்றவை வாக்காளர்களிடம் பெரும் குமுறலை ஏற்படுத்திவிட்டது. திமுக ஆட்சி திரும்ப வரக் கூடாது என்பதில் அஇஅதிமுக, தேமுதிக, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தோழமைக்கட்சிகள் ஒன்றுபட்ட உறுதியோடு களத்தில் நின்று போராடின.

வாக்குகள் மே 13 -ஆம் நாள் எண்ணப்படப் போகிறது. ஆனாலும் மக்களின் அசைவுகள் ஆளும் கட்சி வீழும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

தேர்தல் ஆணையத்தின் சாதனை

தமிழகத் தேர்தல் ஆணையராக உள்ள பிரவீண் குமார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. முன்பு விழுப்புரம் மாவட்டக் கலெக்டராக இருந்தவர். கடைசியாக நிதித்துறைச் செயலாளராக இருந்த அவரை மத்தியத் தேர்தல் ஆணையர் குரேஷி தமிழகத் தேர்தல் ஆணையராக நியமித்தார். இவருடன் தமிழக ஐஏஎஸ் அதிகாரி களான ராஜேந்திரன், அமுதா ஆகிய இருவரையும் கூடுதல் ஆணையர்களாக நியமித்தார். இந்த மூவரும்தான் தமிழகத் தேர்தலை நடத்திய முக்கிய மானவர்கள்.

படித்தவர்கள், இளைஞர்கள், நகர்ப்புறமக்களை ஓட்டுப் போடவைப்பதில் பிரவீண்குமார் கவனம் செலுத்தினார். வாக்காளர் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டார். அவரே கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களிடம் பேசினார். ஆளுங் கட்சியினரின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி பணங்களைப் பறிமுதல் செய்தார். பணம் கொடுத்தவர்கள் மீது 1565 வழக்குகள் பதிவு செய்தார். பணம் வாங்கியவர்களையும் கூடக் கைது செய்தார். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளைத் தகர்த்தார்.

மதுரையில் அழகிரி மற்றும் ரவுடிக் கும்பலை ஒடுக்கி உட்காரவைத்ததில் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம், காவல் ஆணையர் கண்ணப்பன், கூடுதல் எஸ்.பி, அஸ்ரா கார்க் ஆகியோர் பெரும் பங்கு வகித்தனர். தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த உதவினர். அழகிரியின் சவாலை நேருக்கு நேர் சந்தித்த இவர்களை வாக்காளர்கள் மிகவும் பாராட்டினர்.

லோக்பால் மசோதா

தற்போது உள்ள மத்திய அரசில்தான் ஊழல்கள் மிக அதிகம் என்று பொதுமக்களில் பெரும்பா லோர் கருதுகிறார்கள். முழுமையான மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று நம்புகிறார்கள். அதனால்தான் அன்னா ஹசாரே என்ற யாரும் அறியாத ஒரு காந்தியவாதியின் உண்ணா விரதத் திற்கு நாடே ஆதரவளித்தது.

ஊழலுக்கெதிராக இந்தியாவைப் பாதுகாக்கும் தன்னிச்சை அமைப்பாக லோக்பால் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே அன்னாவின் உண்ணாவிரதக் கோரிக்கையாகும். இதற்கு ஆதர வாக நாடு முழுவதும் மக்கள் திரண்டதால் மத்திய அரசு பணிந்தது. லோக்பாலை உருவாக்க குழு அமைக்கப்பட்டது. இது ஒரு மாற்றத்துக்கான நீண்ட யுத்தத்தின் தொடக்கம்தான். ஊழல் செய்த வர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும். யாரும் எளிதில் தப்பிவிடக்கூடாது என்பதே லோக்பாலின் நோக்கமாகும்.

நம்நாட்டில் ஊழல் செய்த ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் எவரும் தண்டிக்கப் பட்டதே இல்லை. மக்கள் இனியும் ஊழல்களைச் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை.

சாய்பாபா சாம்ராஜ்யம்

இந்தியாவில் நீண்டகாலம் புகழ்பெற்ற இறைமனிதர் சத்யசாயிபாபா தனது 84 வது வயதில் உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் கால மானார். அவருக்கு அஞ்சலி செலுத்த ஆந்திராவின் புட்டபர்த்தியில் அவரது பக்தர்கள் திரண்டனர். அவரது சாம்ராஜ்யம் இந்தியாவிலும் 166 வெளி நாடுகளிலும் பரவிக்கிடக்கிறது. அவரது சொத்து மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியாம்.

பாபாவின் நிரந்தர, தீவிர பக்தர்கள் 60 லட்சம் பேர் என்றும், வந்து போகும் பக்தர்கள் 3.1கோடி என்றும் மதிப்பிடப்படுகிறது. இவர்கள் அளிக்கும் காணிக்கைகளால் கருவூலம் எப்போதும் நிரம்பி வழிகிறது. இதற்கு வரிவிலக்கு உண்டு என்பதால் பெரிய மனிதர்கள் நிதியைப் பெருமளவு குவிக் கிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை கள் மற்றும் இதர துறைகளில் பணத்தை பாபா முதலீடு செய்துள்ளார். பாபாவுக்குப் பிறகு இந்த சொத்துக்களின் வாரிசு யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாபாவின் மாபெரும் சாம்ராஜ்யத்தை நிர்வ கிக்க 1972ம் ஆண்டு சத்யசாயி சென்ட்ரல் ட்ரஸ்ட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இது தகவல் களை மிக ரகசியமாய் பாதுகாக்கும் ஒரு அமைப் பாகும். ஜனாதிபதி, பிரதமர் முதல் எந்தப் பெரிய மனிதரானாலும் இந்த அமைப்புக்குத் தெரியாமல் பாபாவைப் பார்க்க முடியாது. அதற்காக விதி களை உருவாக்கியுள்ளனர்.

பணியிலிருந்து விடுபட்ட, ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த ட்ரஸ்ட் நிர்வாகத்தில் உள்ளனர். 1998ம் ஆண்டுக்குப்பிறகு இந்த ட்ரஸ்ட் பிரம்மாண்டமான தொண்டு நிறுவன மாக மாற்றப்பட்டது. சத்யசாயி பல்கலைக்கழகம், சத்யசாயி இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் மெடிக்கல் சயின்ஸ், உலக சமய அருங்காட்சியகம், விளையாட் டரங்கம், கோளரங்கம், விமானநிலையம், ரயில்வே ஸ்டேஷன் என்று உருவாக்கப்பட்டது. பெங்களூரில் சிறப்பு மருத்துவமனையும், இரண்டு கண் மருத்துவமனைகளும் உள்ளன. அனந்தபுரி மாவட்ட குடிநீர்த் திட்டம், சென்னைக்கு கிருஷ்ணாநதி நீரைக் கொண்டுவரும் திட்டங் களுக்கும் ட்ரஸ்ட் உதவியுள்ளது.

தனது உறவினர் யாரையும் அண்ட விடாத பாபா உலகெங்கும் 1300 சாயிபாபா மையங்களை நிறுவியுள்ளார். 33 நாடுகளில் பள்ளிகள் உள்ளன. இத்தகைய பரந்த சாம்ராஜ்யம் சாய்பாபாவுக்குப் பிறகு என்ன ஆகும் என்ற கேள்வி இன்று பக்தர்களிடம் தலை தூக்கியுள்ளது.

Pin It