நரம்பு புடைக்கும் படியாக
புடைப்பு படியும் வாழ்வாக
அமிழ்ந்து மூழ்கும் உடலாக
கணமும்...அனுதினமும்
எதிர்கொள்கிறேன் உன்னை.
குழந்தைகளை கேடயமாக்கி
மோதும்படியான - உனது
போர்த் தந்திரம்...
நிலைகுலையச் செய்கிறது என்னை!
சகிப்பின் உச்சத்தில்
ஸ்பரிசித்து தன்வயப்படுத்தி
காமத்தால் ஆளும் - உன்
சூட்சமம் வாய்த்தவர்கள் வாழ்கிறார்கள்!
பரிதவிப்போ... பதட்டமோ...ஏதுமின்றி
கீறிட்ட தண்டவாளத்தில் - தினமும்
சென்று...திரும்பும்...
ரயிலென நான்.
RSS feed for comments to this post