இவர்கள் ஏன் இப்படி ஒரு பெண்ணைத் தாக்குகிறார்கள் என்றுதான் நானும் அந்த லீனாவின் கவிதைகளைப் படித்துத் தொலைத்தேன். உலகின் சகல பிரச்சனைகளுக்குமே ஆண்குறிதான் காரணம் என்பது போலவும் உபரி மதிப்பு, உழைப்பு, புரட்சி எல்லாமே ஒரு புணர்தலில் அடங்கியிருக்கிற்து என்பது போலவும் லீனாவின் கவிதை இருந்தது. இதைப் படிக்கிற மாத்திரத்தில் வினவு தோழர்களின் எதிர்வினையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குக் கூட கோபம் வரும். அப்படியான மூன்றாம் தரமான கவிதை. ஒரு மார்க்சிஸ்ட் இக்கவிதையை வாசிக்கும்போது தார்மீக ரீதியில் கோபமடைவதுதான் அவரது அரசியல் நேர்மையாக இருக்க முடியும். வினவு கட்டுரையை அப்படித்தான் என்னால் பார்க்க முடிகிறது.
லீனாவின் கவிதைக்கு மறுப்பாக கடினமான வார்த்தைகளுடன் எழுதப்பட்ட வினவு கட்டுரை எழுப்பிய கேள்வி இதுதான்... புரட்சிகரத் தோழனும், மார்க்சும் எல்லாமும் ஆண் குறிதான் என்றால் அக்கவிதையில் ஏன் சேரன் பெயரோ, பாரதிராஜா பெயரோ, சி.ஜெரால்ட் பெயரோ இல்லை என்று கேட்டார்கள். லீனாவின் கவிதையில் அரசியல் இல்லை மிக மோசமான ஆபாசமான கவிதை என்பதை அம்பலப்படுத்திய கேள்வியே இதுதான் என்னும் போது இந்தக் கேள்வியை எப்படி நாம் உதாசீனப்படுத்தி விட முடியும். வினவின் கட்டுரைக்கு பதில் எழுதிய லீனாவும் சரி அவரது ஆண் நண்பர்களும் சரி வினவின் இக்கேள்வியை எதிர்கொள்ளவே இல்லை. மாறாக அவதூறு என்றும் தனிப்பட்ட தாக்குதல் என்றும் கூறினார்கள். இருக்கலாம் தனிப்பட்ட தாக்குதல் இருக்கலாம். ஆனால் அதையே கம்யூனிஸ்டுகள் மீது லீனா செய்யக் கூடாதில்லையா? கவிதைக்குக் கவிதை லெனின், மார்க்ஸ், புரட்சி என்றெல்லாம் எழுதும் லீனா இந்த லிஸ்டில் திராவிடத் தலைவர்களின் பெயர்களையோ, தமிழ்த் தேசியவாதிகளின் பெயர்களையோ சேர்த்திருந்தால் அவர்கள் இவரை விட்டு விடுவார்களா? இவர்களை எழுதினால் எதிர்ப்பு இருக்காது அரசின் ஆதரவையோ கம்யூனிச எதிர்ப்பாளர்களின் ஆதரவையோ பெறலாம், எதிர்வினை வந்தால் கருத்துச் சுதந்திரம் என கூட்டம் போடலாம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு இப்படி கவிதை எழுதுவது என்ன மாதிரி பெண்ணியம் என்று தெரியவில்லை.
பெண் எழுத்தில் யோனி, முலை போன்ற சொற்களை பிரயோகிப்பது தவறல்ல. குடும்பம், சினிமா, சீரியல் என பெண்கள் மீது இவைகள் நிகழ்த்தும் ஆபாச வக்கிரத் தாக்குதல்களை எல்லாம் விட, இம்மாதிரியான கவிதை வரிகள் ஒன்றும் பெண் வாழ்வை பண்பாட்டு ரீதியில் சிதைத்து விடுவதில்லை. பாலியல் சார்ந்த தனது இச்சைகளை கவிதையாகவோ, கட்டுரையாகவோ எழுதவும், அதை விற்கவும் ஒருவருக்கு உரிமையுள்ளது, நாட்டில் எத்தனையோ சரோஜா தேவி புத்தகங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அதை எல்லோரும் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, எந்த விமர்சனமும் வரக்கூடாது என்று நினைப்பதோ எந்த விதத்தில் சரி? அதையெல்லாம் விடக் கொடுமை, அதற்கான எதிர்வினையை அவதூறு என்று சொல்வதும், ஆணாதிக்கச் சிந்தனை என்று சொல்வதும். யோனி, முலை, புணர்ச்சி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பெண்ணியக் கவிதைக்கான அந்தஸ்து கிடைத்து விடும் என்ற மயக்கம் லீனாவுக்கு இருக்கும்போல் தெரிகிறது. இந்த வார்த்தைப் பிரயோகங்களை மற்ற பெண் கவிஞர்கள் எத்தகைய புரிதலுடன், எத்தனை வலியுடன் கையாளுகிறார்கள் என்பதிலிருந்து பார்த்தால், லீனாவின் பிரச்சினை புரிந்து விடும்.
ஈழத்துக் கவிஞர் கலா எழுதிய ‘கோணேஸ்வரிகள்’ கவிதையில் 'சிங்களச் சகோதரிகளே! உங்கள் யோனிகளுக்கு இப்போது தேவையில்லை' (http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html) என்பதைப் படிக்கும்போது வாசகனுக்குக் கடத்தப்படும் வலி, கோபம் இருக்கிறதே அங்கேதான் கவிஞரின் படைப்பு தக்க வைக்கப்படுகிறது. ஆனால் லீனாவின் கவிதையைப் படிக்கும்போது எரிச்சல்தான் வருகிறது. இப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது.
மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி என எல்லோருமே கலாசாரக் காவலர்களிடமிருந்து பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகளைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் லீனாவைப் போல், அதிகாரத்தின் தொனிகளையும் அதன் திசை வழிப் போக்கையும் புரிந்து, தனது மனவக்கிரங்களை அதன்மேல் ஏற்றி எழுதியவர்களில்லை. குடும்பம், சமூகம், தன் மீது நிகழ்த்தும் வன்முறைகளின் வெளிப்பாடுகளாகவே அவர்களின் கவிதைகள் இருந்தன; இருக்கின்றன. உடல்ரீதியாக பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து, பெண்ணுடலைக் கொண்டாடுகிற, அதேநேரத்தில் ஆண்மையப் புணர்தலை எதிர்த்து அவர்கள் எழுதினார்கள். காட்டாக, மாலதி மைத்ரி ஆசிரியராக இருந்து வெளிவரும் அணங்கு இதழில் வெளியான சுகிர்தராணியின் இந்தக் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1676:2009-12-16-01-38-35&catid=962:09&Itemid=216) கவிதையைப் படித்துப் பாருங்கள். அவர்கள் இருவரது பெண்ணியப் புரிதலும் தெளிவாக விளங்கும். ஆண்மைய வாழ்க்கை எப்படி ஒரு பெண்ணின் தனித்துவத்தை சிதைக்கிறது என்பதை இக்கவிதை காட்ட, அதற்கு நேர்மாறாக ஆண்மையப் புணர்தலையே கொண்டாடும் கவிதையாக லீனாவின் கவிதை இருக்கிறது. அரைகுறை பெண்ணிய அரசியல் அறிவுடன் ஒரு கவிதையையும் எழுதிவிட்டு, அதற்கு சப்பைக்கட்டு கட்ட, தனது நண்பர்களையும் ஏவிவிடுகிறார்.
அவரது இருத்தல் தொடர்பாக அவரது நண்பர்கள் எழுதுபவற்றைப் படிக்கும் போது ‘ஒரு பெண் என்றும் பாராமல் இப்படி எல்லாம் எழுதுகிறார்களே’ என்று கவலைப்படுகிற மனோபாவம் தெரிகிறது. இந்தக் கழிவிரக்கம் பெண்விடுதலைக்கு எதிரான ஒன்றல்லவா? லீனா குழுவினர் ஏன் ஆணிடத்தில் இத்தகைய கரிசனத்தை எதிர்பார்க்கிறார்கள்?
இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் நம் வாழ்வின் எல்லா தார்மீக உரிமைகளையும் இழந்து கொண்டிருக்கிறோம். கொடூரமான போர் ஒன்றை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து இலங்கையில் நடத்தி முடித்திருக்கிறது. இந்தப் போரிலும் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்களும், குழந்தைகளும்தான். இன்று வரை அந்த இழப்பின் ரணத்திலிருந்து மீளவே முடியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் இந்த நேரத்தில் வடகிழக்கில் இந்திய அரசின் போர் வெறிக்கு ஏதோ ஒரு பழங்குடிப் பெண் பலியாகிக் கொண்டிருக்கிறாள். நிரந்தரமாக தங்களின் வாழ்விடங்களில் இந்திய இராணுவத்தின் தேடுதல் வேட்டையில் கொட்டப்படும் குண்டுகள் அவர்களை நிலங்களில் இருந்து துரத்திக் கொண்டிருக்கிறது. சம காலத்தில் நாம் பார்க்கும் வீர மகளிராக பழங்குடிப் பெண்கள் ஆயுதமேந்தி ஆக்ரமிப்புப் போருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகமயச் சூழலில் நிரந்தரமான வறுமையும் வேலையிழப்பும் ஒரு பக்கம் என்றால், பெண் என்றாலே திருமணம் செய்து குழந்தை பெற்று குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் சேவை செய்து வாழ்வதே பாக்கியம் என்கிற ஆணாதிக்க நெறியை வைத்து ஒரு கூட்டம் காசு பார்த்துக் கொண்டிருக்கிறது. திருமணச் செலவுகளுக்கு பணம் தருகிறோம் என்று சுமங்கலித் திட்டத்தில் வருடக்கணக்கில் ஆயிரமாயிரம் பெண்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி நிற்கிறார்கள். குடும்பம் ஒரு வன்முறையான நிறுவனம் என்பது உண்மைதான். ஆனால் ஆணாதிக்கத்தின் வேர்... ஆண் வாரிசு சொத்துரிமையிலும் ஆண் வழி மரபுரிமையிலும் தங்கியிருக்கிறது எனும்போது இந்த அடிமைத்தனமே பெண்ணுக்கு ஒரு அடிமைப் பாதுகாப்பையும் வழங்குகிறது என்பது கசப்பான உண்மை இல்லையா?
குடும்பம் என்னும் நிறுவனம் சிதைய வேண்டும். ஆண் வழிச் சொத்துரிமை அழிக்கப்பட வேண்டும். பாலியல் பிண்டங்களாக பெண்களை மோகிக்கும் போக்கு மறைய வேண்டும் என்பது தான் சரியான பெண்ணியமாக இருக்க முடியும். குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை. சரி வெளியில் வரலாம். ஆனால் குடும்பத்தை உதறித் தள்ளுகிற பெண்களுக்கு என்ன விதமான பாதுகாப்பு இங்கே இருக்கிறது? அதுவும் ஏழைப் பெண்களுக்கு - தலித் பெண்களுக்கு? பெண் விடுதலை சிந்தனை என்று வரும்போது அதை முன்னெடுக்கிறவர்களின் வர்க்க நிலையையும், சாதீய இருத்தலையும் இங்கே கேள்விக்குள்ளாக்கியாக வேண்டும். ஏனென்றால் ஒரு தலித் பெண்ணும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணும் சந்திக்கும் பிரச்சனைகள் ஒன்றானவை அல்ல; வெவ்வேறானவை. இம்மாதிரியான பிரச்சனையின் ஒரு தொடர்ச்சி தான், லீனா நடத்திய வால்பாறை கவிதைக் கூட்டத்தில் தலித் படைப்பாளிக்கு நேர்ந்தது.
பணம், செல்வாக்கு, சமூக அந்தஸ்து என்கிற நிலையில் ஒடுக்கப்பட்டு சேரிகளில் வாழும் பெண்களுக்காக சென்னையில் ஏசி அறைகளில் அமர்ந்து கவிதை எழுதலாம்; ஆனால் சேரியில், ஊரின் ஒதுக்கி வைக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ்கிற அவஸ்தையைப் போலல்ல கவிதை என்பது. சும்மா ஒரு கவிதைக் கூட்டம் நடத்தவே நமக்கு இயற்கை எழில் கொஞ்சும் - மனித நடமாட்டம் இல்லாத அமைதிப் பிரதேசம் தேவை இருக்கிறது. வாழ்க்கை அப்படியில்லை தோழர்களே! இந்த நெருக்கடிகளில் இருந்து எங்கு தப்பிச் செல்ல முடியும்? எல்லையோர மக்களை துரத்தி விட்டு விஸ்தரிப்புக் கனவுகளோடு மக்கள் வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ நெருக்கடியில் ஒரு பழங்குடிப் பெண் எங்கு தப்பிச் செல்ல முடியும்?
சமீபத்தில் ஒரு பெண்கவிஞருடன் பேசியபோது அவர் சொன்னார், ‘லீனா இப்படி எல்லாம் எழுதுவதால் உண்மையாகவே பிரச்சனைகளை எழுத முனையும் பெண்கள்தான் கலாசார பாசிசத்தை சந்திக்க நேரிடும்.’ மற்றபடி பரபரப்புக்காக இப்படி எல்லாம் எழுதி விட்டு எல்லாப் பெண்களுக்குமான பிரச்சனையாக இதை சிலர் மாற்ற முனைவதும் வேடிக்கையான ஒன்றுதான். எல்லாப் பெண்களுக்குமான பிரச்சனையும் லீனாவின் பிரச்சனையும் ஒன்றா? லீனாவுக்கு அப்படி என்னதான் பிரச்சனை? கூலி கொடுக்காத தொழிலாளியை கூட்டுச் சித்திரவதைக்குள்ளாக்குவதும் பின்னர் அடி வாங்கியவரையே கருங்காலி என்று எழுதுவதும், விருதுகளுக்காக சினிமா எடுப்பதும், எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று கலவரக் கவிதை எழுதுவதும், தமிழ் சினிமாவில் பெண்களை ஆக மோசமாக இழிவுபடுத்தி தேவர் சாதி பெருமை பேசும் படங்களை எடுக்கும் பாரதிராஜாவை பாராட்டுவதும், இவைகள் எல்லாமே விமர்சனத்திற்குள்ளாகும் போது வரிந்து கட்டி பெண் இனத்திற்கே இழுக்கு என்று லபோ, திபோ என்று அடித்துக் கொள்வதும்.... இதெல்லாம் என்ன வகையான பெண்ணியம் லீனா?
‘நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு; வாரத்துக்கு ஏழு நாளு, வந்தவளோ நாலு பேரு; மூணு பேரு குறையுதடி கணக்கு’ என்ற பாடல் வரிகளை தனது படத்தில் சேர்த்துக்கொண்ட பாரதிராஜா, உங்களது கவிதைகளைப் படித்து புருவம் உயர்த்துவது (லீனா பேட்டி, புத்தகம் பேசுது ஏப்ரல் 2010) தங்களுக்கு உறுத்தலாகப் பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருமிதத்துடன் அதைச் சொல்கிறீர்கள். தினம் ஒரு பெண் தேடி அலைவதும், அந்தளவிற்கு வசதியில்லாதவர்கள் இரண்டு பொண்டாட்டி கட்டிக்கொண்டு திரிவதும், பெண்களை காக்க வேண்டும் என்பதற்காக அல்ல; பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் கழிசடைத்தனத்தின் வெளிப்பாடு. அதை நீங்கள் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்வதோடு, அத்தகைய ஆணாதிக்கவாதிகளின் பாராட்டில், அரவணைப்பில் மெய்மறப்பது எந்த வகையான பெண்ணியம் லீனா?
இப்படி எல்லாம் கேட்டால் உடனே உங்களை தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாகக் குறைபட்டுக் கொள்கிறீர்கள். இடது வலது அடிப்படைவாதிகள் என்று ம.க.இ.க.வினரையும் இந்துப் பாசிஸ்டுகளையும் ஒன்றாகச் சேர்த்து எழுதுகிறீர்கள். இது யுத்த தந்திரமா? அல்லது பிழைப்புவாதமா? தமிழகமெங்கிலும் இந்துப் பாசிஸ்டுகளுக்கு எதிராக முற்போக்கு சக்திகள் தொடர்ந்து போராடுகிறார்கள். திராவிட இயக்கம், முற்போக்கு என்றெல்லாம் பேசிய கருணாநிதி அரசு அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கிறது. ராயப்பேட்டையில் பெரியார் திக அலுவலகத்தையும் தாக்கி அங்கிருந்த பெரியார் சிலையையும் உடைத்து வீசியது ஒரு ரௌடிக் கும்பல். நியாயமாக பெரியார் சிலையை இந்து மக்கள் கட்சிக்காரன் தானே உடைக்க வேண்டும். ஆனால் இங்கே உடைத்தது திமுக தொண்டர்கள். பெண்களை இரவோடு இரவாக அடித்து இழுத்துச் சென்று ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் போட்டு உள்ளே தள்ளினார் கருணாநிதி........ தெரியுமா லீனா உங்களுக்கு? யோனி....... தூமை இப்படியான சில வரிகளைப் போட்டு கவிதை எழுதினால் அது முற்போக்கு என்று தெரிகிறது. ஆனால் இந்த வார்த்தைகளை கூச்சமான ஒன்றாக நினைத்து பிரயோகிக்கத் தயங்கும் பெண்கள் ரோட்டிற்கு வந்து போராடத் தயங்குவதில்லை. அவர்கள் சிறைக்குச் செல்லவும் அஞ்சுவதில்லை. நீங்களோ இம்மாதிரி வார்த்தைகளில் கபடியாடி விருதுகளுக்காக படம் எடுத்து வசதியாக வாழ்ந்து.......... ஆனால் சமூக நோக்கங்களுக்காக போராடுகிறவர்களைக் கொச்சைப்படுத்துகிறீர்கள்.
கருத்து சுதந்திரத்தில் அக்கறை உள்ளவர்களாக திடீரென்று இன்று களத்தில் குதித்திருக்கிறீர்களே, நீங்களும் அ.மார்க்சும்? கடந்த ஆண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது - போரை நிறுத்தச் சொல்லியும், இந்திய அரசின் உதவிகளைக் கண்டித்தும் பேசிய கொளத்தூர் மணி, சீமான், பெ.மணியரசன் மற்றும் எண்ணற்ற பெரியார் தி.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்களே, அது கருத்துச் சுதந்திரத்திற்கான மறுப்பு இல்லையா? அப்போது நீங்கள் இருவரும் எங்கே போனீர்கள்? கேரள சிபிஎம் கட்சியினரால் பால் சக்காரியா தாக்கப்பட்டபோது, கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று - ஒரு கண்டனக் கூட்டம் வேண்டாம் - குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது எழுதினீர்களா? உங்களது கருத்து சுதந்திரத்திற்காக இன்று போராடுபவர்கள் மக்கள் தொலைக்காட்சியைத் தாக்கியபோது, ஒரு முக்கல் முனகலாவது தங்களிடமிருந்து வந்ததா? தங்கள் கவிதை மீது விமர்சனமும் புகாரும் வருகிறது என்றதும், பணி ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவரை கூட்டம் நடத்தச் சொல்லி, இத்தனை களேபரம் பண்ணுகிறீர்கள்.
நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த தமாசுக் கூட்டம் எப்படி சிரிப்பாய் சிரிக்கிறது பாருங்கள்! இதை நீங்கள் முன்கூட்டியே - அதாவது நீங்கள் அழைத்தும் பல எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்ள மறுத்தபோதே - எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் தனக்குத்தானே கோபுரம் கட்டும் அவசரம் உங்களது கண்ணை மறைத்து விட்டது. இப்போது என்றில்லை, எப்போதும் இப்படித்தான் இருக்கிறீர்கள். நான் சில வருடங்கள் பத்திரிக்கைத் துறையில் வேலை பார்த்திருக்கிறேன். உங்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே, சக பத்திரிக்கையாள நண்பர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். நீங்கள் வந்துவிட்டுப் போனாலோ, உங்களுக்குப் பின்னால் வெடித்துச் சிரிப்பார்கள். வேறு எந்த பெண் படைப்பாளியைப் பார்த்தும் அவர்கள் இப்படி சிரிப்பதில்லை. எப்போதும் self marketing செய்வதில் தாங்கள் காட்டும் முனைப்புதான் பலரது கேலிக்கும் ஆளாக்குகிறது. இதை கீற்று குழுமத்தில் சேர்ந்தபின்பு, உணரும் சந்தர்ப்பம் எனக்கும் வாய்த்தது. லயோலா கல்லூரிப் பிரச்சினை தொடர்பாக நீங்கள் அனுப்பிய கட்டுரையுடன் 2 பக்க சுயவிளம்பர கேட்லாக்கும் வந்தது. அத்துடன் விதவிதமான புகைப்படங்கள் வேறு. கீற்றுவுடனான எனது மூன்று வருடப் பயணத்தில் வேறு எந்த ஆண்/பெண் படைப்பாளியோ இப்படி கேட்லாக் அனுப்பியதை நான் பார்த்ததில்லை.
உங்களுக்கான கட்-அவுட்டை நீங்களே சுமந்து திரிவது எல்லோருக்கும் சிரிப்பாகத்தான் இருக்கிறது (இப்போது உடன் சுமப்பதற்கு அ.மார்க்சும் வந்திருக்கிறார்). கவிதை, ஆவணப்படம் ஆகியவற்றை தங்களை விளம்பரத்திக் கொள்ளும் முயற்சியாக நீங்கள் கைக்கொண்டால் அதற்கான எதிர்வினை வரத்தான் செய்யும். அதைத்தான் வினவு தோழர்கள் எழுதினார்கள். நீங்களும் அ.மார்க்சைப் போலவே, தனிமனித அவதூறு என்று சொல்கிறீர்கள்.
ஜீன்ஸ் பேண்ட் போட்டு, டீ. ஷர்ட் போட்டு, தலைமுடியை ஹெர்லிங் பண்ணி வெள்ளை ஹூண்டாயில் வந்திறங்கும் போது நவீனமாகத்தான் இருக்கும். உடுத்தும் உடையில், மணக்கும் முடியில், காஸ்டிலியான வாழ்வில் நாம் காண்பது நவீன தோற்றமாக உங்களைப் போன்றோருக்குத் தோன்றலாம். ஆனால் சிந்தனை? அதற்கும் இந்தச் சமூகத்திற்கும் எத்தனை பெரிய இடைவெளி..?. கொஞ்சம் மாடிப்படிகளில் இருந்து இறங்கி ரோட்டிற்கு வாருங்கள் லீனா. தெருக்கோடியில் சீமாட்டிகளிடம் ஒரு முழம் பூவை விற்க படாதபாடு படுகிற ஏழைத் தாயின் வாழ்க்கையை கொஞ்சமேனும் புரிந்து கொள்ளுங்கள்.... அதை வைத்து ஆவணப் படம் எடுத்து விற்று விடாதீர்கள். அந்த வாழ்க்கைக்கும் கண்ணாடி அறைகளுக்குள் மினுங்கும் வாழ்வுக்குமான முரணைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
தமிழ் இலக்கிய உலகில் பெண்ணிய எழுத்துக்களுக்கான பாதை இன்று இராஜபாட்டையாக இருக்கிறது என்றால், அது அம்பை தொடங்கி, மாலதி மைத்ரி, இளம்பிறை, குட்டி ரேவதி, சுகிர்தராணி உள்ளிட்ட பெண் படைப்பாளிகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் நிகழ்ந்தது. புதிதாக எழுத வரும் என் போன்ற பெண் எழுத்தாளர்களுக்காக அவர்கள் அந்தப் பாதையை செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தயவு செய்து அந்தப் பாதையில் முட் கற்கள் போடும் வேலையை உங்களது படைப்புகளின் மூலம் செய்யாதீர்கள்.
- மினர்வா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் யாருடைய கட்டுரைகளை வெளியிடுகிறார்க ள் என்பது குறித்து எந்த விமர்சனமும் இல்லை.
கீற்றை தொடர்ந்து வாசித்து வருவதாகச் சொல்கிறீர்கள். சற்று கவனித்தீர்களானா ல் சிலரை விமர்சனம் செயது கட்டுரைகள் வருகின்றன. ஒரு தெளிவான மொழிநடையில், நியாயமான விமர்சனங்களோடு வருகின்றன. உதாரணத்திற்கு சீமான் குறித்து விமர்சித்து கட்டுரை வந்தால், “சீமான் மீதான கருத்தியல் சமர்” என்று அவருக்கு ஆதரவான ஒரு ஒன்றுமில்லாத கட்டுரையையும் கீற்று வெளியிடுகிறது.
இந்தப்போக்கு தமிழ்தேசியவாதிக ள் அல்லாத மற்றவருக்குக் கிடையாது. ஒன்லி அவதூறுகள் தான். நீங்கள் உற்று கவனித்தால் தமிழ்தேசியவாதிக ளை விமர்சிக்க ஒரு தரமான நாகரிகமான மொழிநடை. ஆனால் ஆதவன் போன்றவர்களை விமர்சிக்க “பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்கு” போன்ற நக்கல் மொழி நடை. இந்த மொழி நடையில் எந்த தமிழ்தேசியவாதிய ையாவது விமர்சனம் செய்து சீமானையோ, நெடுமாறனையோ, திருமாவளவனையோ குறித்து ஒரு கட்டுரை வந்திருக்கிறதா? இந்த லிஸ்டில் திருமாவளவன் எப்படி வந்தார்? அவர் இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டு எம்.பி. ஆனவர். நெடுமாறன் ஈழ தேசியவாதி. த்மிழ்நாட்டில் என்ன நடந்தாலும் கவலைப்படமாட்டார ். சீமான்...வேண்டா ம்... மேட்டருக்கு வருவோம். கண்ணெதிரே பார்த்த ஒரு விஷயத்தை வைத்து ஓவியர் புகழேந்தி குறித்து எழுதியபோது கூட என்ன டீச்ண்டான மொழியில் இருந்தது அந்தக்கட்டுரை. இந்த டீசன்சி ஏன் ஆதவன் போன்றவர்களைப் பற்றி எழுதப்படும் கட்டுரையில் இல்லை?
ஏப்ரல் 15 ஆம் தேதி கூட்டம் குறித்த அறிவிப்பினை திரித்து அறிவ்ப்பு செய்ததைப் போல ஒரு தமிழ்தேசியவாதக் கூட்டத்திற்கு இவர்களால் செய்ய முடியுமா? தமிழ்நாட்டு சிவசேனா படையினரும், பால்தாக்கரேக்கள ும் வீடு தேடி வந்து விட மாட்டார்களா? இந்த அழைப்பிதழை திருத்துவது போன்ற திருகு வேலைகளை மற்ற யாரிடமாவது கீற்று காட்டியிருக்கிற தா? ஏப்ரல் 15 கூட்டம் நடத்தப்படுவதில் அவருக்கு மாற்றுக்கருத்து உண்டு. அப்படிப்பட்ட ஒரு கூட்டத்திற்கு எதற்காக கீற்றில் அறிவிப்பு வெளியிட வேண்டும்? லீனாவின் கவிதைகளை விமர்சனம் செய்யாமல், லீனாவின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து விமர்சிக்கும் வினவு தளத்திற்கு கீற்று ஆதரவளிக்கிறது. ஜெரால்ட், பாரதிராஜா - இவர்களின் குறிகள் குறித்து ஏன் எழுதவில்லை என்று அநாகரிகமாகக் கேட்ட வினவு தளத்தின் கேள்வியை கீற்று நியாயப்படுத்துக ிறது. அதைப் பார்த்த போது அதிர்ச்சியாகத்த ானிருந்தது. அமுதனின் கட்டுரை போன்ற ஒரு மட்டமான மொழியில் உள்ள கட்டுரையை எந்த தமிழ்தேசியவாதிய ை விமர்சித்தும் வெளியிட்டார்களா?
ஆரோக்கியமான விமர்சனங்கள் வந்தால் தாராளமாக வரவேற்கலாம். அதை விவாதிக்கலாம். ஆனால் அவதூறுகள்? ஒரு சிலர் மேல் விமர்சனம் மட்டும். ஒரு சிலருக்கு அவதூறுகள் மட்டும், ஒரு சிலருக்கு தனிப்பட்ட வாழக்கையை விமர்சனம் செய்வது மட்டும் என்று பிரித்துக்கொள்வ து எந்த வகை நியாயம்?
கீற்று தொடர்ந்து நீங்கள் வாசிக்கிறீர்கள் என்றாலே இந்த சாய்வுத்தன்மையு ம், காழ்ப்புணர்ச்சி யும் உங்களுக்குப் புரிந்திருக்கும ே.. எனினும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.
வணக்கம்.
கிசுகிசுக்களுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்கள் ஆர்வத்திற்கு என்னுடைய மதிப்பை தெரியப்படுத்துக ிறேன். மினர்வா அவர்களின் விமர்சனத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள். அவர்கள் எந்தத் தமிழில் முழு விமர்சனமும் எழுதியிருக்கிறா ர் என்று புரியும்.
’ தோழி தோழி என்றபடியே அந்தரங்க தகவல்களை பொது வெளியில் உளறிக் கொட்டுகிறிர்கள் . அஞ்சாப்பு படிக்கும் இரண்டு சிறுவர்கள் சண்டை போட்டுக்கொண்டால ் கூட ஒருவனை பற்றி இன்னொருவன் பொதுவில் புகார் கூற தயங்குவான் நீங்கள் எப்படி கூசாமல் உளறிக் கொட்டுகிறீர்கள் என்பது புரியவில்லை.’
அந்தரங்கத்தை பேசுவது சரியா நானும் பேசலாமா என்று கேட்டதற்கு எதற்கு அனானி 2 பீதியைடைகி்றீர்கள்.
ஒன்று; லீனா ஹெர்லிங் பண்ணுவது கூட மினர்வாவுக்கு பிரச்சினை. இன்னும் நாகரீக உடைகள் எல்லாம் பேசுகிறார்கள். மினர்வாவுக்கு உங்கள் சப்போர்ட் இருக்கிறது மகிழ்ச்சி. ஆனால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. லீனாவின் கவிதைக்காக பேசியதற்கு என்னை கவர்ச்சியின் பால் ஈர்க்கப்படுகிறே ன் என்று மினர்வா குற்றம் சாட்டியுள்ளார்க ள். இப்பொழுது நீங்கள் மினர்வாவுக்காக பேசுகிறீர்கள்.. ..நீங்கள் ஆணா பெண்ணா என எனக்குத் தெரியாது....வரு த்தமாக இருக்கிறது... லீனாவுக்கு சப்போர்ட் பண்ணும் ஆண்கள் அலைபவர்கள், மினர்வாவுக்கு சப்போர்ட் பண்ணும் ஆண்கள்......... .............?
வசுமித்ர
சிறுகுறிப்பு
மினர்வாவின் கட்டுரைக்கு விமர்சன மேடை ஒன்று அமைத்துக் கொடுத்தால் அங்கு வந்து கிசுகிசுக்களை உரத்த குரலில் சொல்லுவேன். அப்பொழுது அது கிசு கிசு அல்ல விமர்சனம். சரியா அனானி 2.
இறுதியாக ஒரு விஷயம்.. புதுவிசை 25ஆவது இதழ் நிகழ்வில் பலரும் த்மிழ்நதி குறித்து ஆதவன் அப்படி எழுதியது தவறு என்று சுட்டிக்காட்டிய போது அப்படி தான் எழுதியது தவறு என்று மேடையில் பகிரங்கமாக ஒத்துக்கொண்டு வருத்தம் தெரிவித்தார். இனி இது போன்ற தவறுகள் நிகழாமல் கவனமாக இருப்பேன் என்றும் உறுதியளித்தார். அந்த நேர்மை நீங்கள் தூக்கிப்பிடிக்க ும் யாருக்காவது இருக்கிறதா?
உங்களுக்கு பதில் சொல்வதில் நேரத்தை வீணடித்தது என் தவறுதான். காமெடி பீஸ், பெரியவங்களை வரவழைக்கச் சொல்வது போன்றவற்றிற்கு. .. நோ கமெண்ட்ஸ்.
உங்கள் வாசிப்பனுபவம் மற்றும் ரசனையின் மட்டம் தெரிகிறது உங்கள் எழுத்துக்களில்..
பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. உங்களுக்கேற்ற பெரியவர்கள் வருவார்கள்.. அவர்களோடு பேசுங்கள்..
குட் பை..
ஆதவனின் கரடுமுரடான, நக்கலான மொழிநடை கொன்ட கட்டுரைகளும் கீற்றில் வந்தடே! மொழிநடையெல்லாம் எழுதுபவரின் மனநிலை சார்ந்தது. இந்த அடிப்படை கூடவா உங்களுக்குத் தெரியவில்லை! தமிழ்த்தேசியவாத ிகளை கடுமையாக விமர்சித்து ம.க.இ.க.வினர் எழுதிய கட்டுரைகளையும், பின்னூட்டங்களைய ும் நான் கீற்றில் படித்திருக்கிறே ன்.
தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறைகளை முதலில் தொடங்கியது யார்? ஆதவன் தானே! தமிழ்நதி மீதான அவரது விமர்சனம் முழுக்க கிசுகிசுவாகவும் , ஆணாதிக்க குரலிலும் ஒலித்ததே! அதற்குத்தானே 'பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு' என்று வாங்கி கட்டிக்கொண்டார் . நீங்கள் எழுதினால் கட்டுரை, மற்றவர்க்ள் எழுதினால் அவதூறா?
கவின், உங்களுக்கு விவாதிக்கத் தெரியவில்லை. மறுபடியும் மறுபடியும் வந்து காமெடிதான் பண்ணுகிறீர்கள். உங்களது விவாதங்கள் பலருக்கு சிரிப்பத்தான் வரவழைத்துள்ளது. போய், வீட்டிலே பெரியவங்க யாராவது இருந்தா வரச் சொல்லுங்க...
The people of tamil nadu dont even have latrines. Can you guys form an association to educate the people and do something to change these real problems. Talking about revolution / litreature wont help at all.
இறுதியாக ஒரு விஷயம்.. புதுவிசை 25ஆவது இதழ் நிகழ்வில் பலரும் த்மிழ்நதி குறித்து ஆதவன் அப்படி எழுதியது தவறு என்று சுட்டிக்காட்டிய போது அப்படி தான் எழுதியது தவறு என்று மேடையில் பகிரங்கமாக ஒத்துக்கொண்டு வருத்தம் தெரிவித்தார். இனி இது போன்ற தவறுகள் நிகழாமல் கவனமாக இருப்பேன் என்றும் உறுதியளித்தார். அந்த நேர்மை நீங்கள் தூக்கிப்பிடிக்க ும் யாருக்காவது இருக்கிறதா?
//
இவ்வாறு தனது தவறை ஒத்துக் கொண்டதை வெளிப்படையாக கட்டுரையாக அறிவித்தார ஆதவன் தீட்சன்யா?
ரகசியமாக அல்லது தெரிந்த சிலரின் மத்தியில் சுயவிமர்சனம் எடுப்பதன் பெயர் சுயவிமர்சனமோ அல்லது நேர்மையோ அல்ல அதன் பெயர் வேறு.
//
புரச்சி,
ஒரு மேடையில் பகிரங்கமா சொல்றதைப் போய் ரகசியம்னு சொல்றீங்களே! வெயில் அதிமாயிடுச்சோ..?
உங்க காமெடிக்கு ஒரு அளவில்லாம போச்சே!
போங்க! போய் வேலையைப் பாருங்க!
அனேகமாக இந்த புரச்சி என்பவர் ம.க.இ.க.வைச்ச் சேர்ந்தவராக இருப்பார் என எண்ணுகிறேன். அதான் இந்த சாத்து சாத்தியிருக்கிற ார். தனது கொள்கைக்கு முரணான கட்சியிலிருந்து ஆதவன் போன்றவர்கள் விலகாமல் இருப்பது குறித்த அரசியலை புரச்சி கடுமையாக விமர்சித்திருக் கிறார். இதைத்தான் கவின்மலர் 'செருப்பால் அடிக்க வேண்டும்' என்கிறாரா? எட்டப்பன்களுடன் ஆதவன் இருப்பது குறித்து ஒருவர் பின்னூட்டமிட 'ஆதவனை எட்டப்பன் என்பதா' என்று சொன்னவர்தானே இவர். இவரது புரிந்துகொள்ளும ் திறனுக்கு யாராவது விருது கொடுக்க வேண்டும்.
"சுந்தரராமசாமியின் செத்த பிணத்தைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராக அலைகிறார்கள்"
"ஜக்கையனின் வார்த்தைகளை உள்வாங்காத சமூகத்தின் மீது பீயைக் கரைத்து ஊற்றவேண்டும்"
"முறித்துப் போடடா பேனாவை முட்டாக்..."
இவையெல்லாம் உங்க ஆதவன் எழுதின வரிகள்தான். நீங்க எழுதினா மணக்குது. மற்றவர்கள் எழுதினா நாறுதோ...
//ஒரு மேடையில் பகிரங்கமா சொல்றதைப் போய் ரகசியம்னு சொல்றீங்களே! வெயில் அதிமாயிடுச்சோ..?//
தமிழ்நதி குறித்து தான் எழுதியது தவறு என்று ஒரு மேடையில் சொன்னவர். ஏன் எழுதவில்லை? கவின் மலர் குறித்து நான் கூட அவதூறு பேசி ஒரு பத்தாயிரம் பிட் நோட்டீஸ் மக்களிடம் கொடுக்க முடியும். கொடுத்த பிறகு ஏதோ ஒரு மேடையில் சிலர் முன்பு அது தவறு என்று சொல்வதன் பெயர் சுயவிமர்சனம் அல்ல.
அதன் பெயர் மொசடி, மொள்ளமாறித்தனம் . நியாயமாக, கவின் மலரை நான் அவதூறு செய்து விட்டேன். அது தவறு என்று உணர்கிறேன் என்று இன்னொரு பிட் நோட்டிஸ் அடித்து மக்களிடம் வினியோகிக்க வேண்டும்.
புது விசை என்ற பெயரில் பத்திரிகை நடத்தும் ஆதவன் தீட்சன்யாவுக்கு இந்த சின்ன சுயவிமர்சனத்தை( ??) வெளியிட வேறு இடமே கிடைக்கவில்லையெ ன்பதை நம்ப இயலவில்லை.
குறைந்தபட்சம் தமிழ்நதியிடமாவத ு இதைச் சொல்லியிருக்க வேண்டுமே? அதைக் கூட செய்யாவில்லை அவர்.
youthful.vikatan.com/.../...
கவின்மலர், கழிவிரக்கம் தேடிக்கொள்ளும் தாழ்ந்த நிலையில் இன்று இருப்பது உங்களது குரு ஆதவன்தான். தூற்று.காம் என்ற அவரது கவிதை முழுக்க கழிவிரக்கம் தேடிக்கொள்ளும் ஒன்றுதான். உங்களுக்கு சொந்தபுத்தி என்று ஒன்று இல்லாததால்தான், அந்த கவிதை என்ன பேசுகிறது என்பது கூடப் புரியாமல், உங்க வலைப்பக்கத்தில் அதைப் போட்டிருக்கிறீர ்கள். அடுத்தவர் சொல்லுவதை சொல்லும் கிளிப்பிள்ளையா நீங்கள்? தாம்தூம் என்று குதிப்பதற்குமுன ் எதையும் பகுத்துணர்ந்து பேச வாருங்கள்...
This leena is an engineeering graduate from madurai university. She could have to be an great engineer. Alas it is sad that she write such vulgar poems.
RSS feed for comments to this post