மருத்துவமேதை எட்வர்டு பாச் மலர் மருத்துவ முறையை உருவாக்குவதற்கு முன்பே அவர்க்கு ஒரு தெளிவான மெய்யியற் கோட்பாடு அமைந்துவிட்டது. அதன் ஒரு பகுதியாகவும், அதை நோக்கி செலுத்துவதற்கும் பயன்படத்தக்க ஒரு மருத்துவ முறையாகவே மலர் மருத்துவம் உருவாக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகின்றது.

‘உன்னையே நீ அறிவாய்’ (Know Thyself) என்னும் தலைப்பில் அவர் ஆற்றிய ஓர் உரையின் விளக்கமாகவும் விரிவாகவும் பின்னர் ‘உன்னை நீயே குணமாக்கிக் கொள்க’ (Heal Thyself) என்னும் நூலை முழுமை செய்தார். அந்நூல் அவர்தம் மெய்யியற் கோட்பாட்டை விளக்குவது; மலர் மருத்துவப் பயிற்சியாளர்கள் அனைவரும் தவறாமல் படித்துத் தெரியவேண்டிய நூலும் ஆகும்.

அம் மெய்யிய்ற் கோட்பாட்டின் சில கூறு களை இங்கு காண்போம்.

ஒருமைப்பாடு :

அண்டப் பெருவெளி பல்வேறு கோள்களையுடையது; சீர்மையான சுழற்சியையும் மாறாத ஒத்திசைவையும் உடையது; ஆற்றல் பெருவெளியாகவும், அவ் வற்றலால் அனைத்தும் இயங்கும் தன்மையதாகவும் இருப்பது. ஆவ் ஆற்றல் அண்டப்பேராற்றல் என்று கூறப்படுகின்றது.

நில உருண்டை அண்டப் பெருவெளியின் ஓர் உறுப்பியக்கமாய் உள்ளது; நிலம், நீர், தீ, காற்று, வெளி (ஆகாயம்) என்னும் ஐம்பெரும் பூதங் களை (இயற்கைப் பொருன்களை)க் கொண்டது.

அண்டப் பெருவெளியில் எங்கேனும் உண்டாகும் ஒரு மாற்றம், அதன் முழுமையுமாய்ப் பரவித் தாகத்தை உண்டாக்குகின்றது.

நிலவுலகில் வாழுகின்ற உயிர்கள் அனைத் தும் ஐம்பெரும் பூதங்களின் ஒரு குறிப்பிட்ட சேர்க்கையால் உருவாகி, அண்டப் பெருவெளி யிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன வாய் உள்ளன. அதனாலேயே ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே’ என்று கூறப்பட்டது.

இக்கோட்பாடு இயற்கையின் நெறியைத் தழுவியது; வானியல், இயற்பியல் முதலான பல துறைகளுக்கும் பொதுவானது. இக்கோட்பாட்டிற்கு உட்பட்டே, மேதை எட்வர்டு பாச் அவர்களுடைய மெய்யியல் கொள்கையும் அமைந்துள்ளது. இக்கோட்பாட்டின்படி இயங்கும் சீர் ஒழுங்கை அப் பெருமகனார் ‘ஒருமைப்பாடு’(Unity) என்று கூறினார். அவர்தம் வழிநின்று பின்கண்ட கூறு பாடுகளை அறிவோம்.

நாம் யார்?

1. ஆதன் (Soul, ஆன்மா) அல்லது உயர்மாந்த வடிவு (Higher Self)

2. மனம்

3. ஆறமை வடிவு (Personality)

4. உடல்

என்பவற்றின் ஒருமித்த இணைவு நிலையே ‘நாம்’ என அறிதல் வேண்டும். ஆதனின் தலைமையும் அதன் வழிகாட்டும் திறமும் பற்றி ‘நாம்’ (உயர்தின்னைப்பன்னை வடிவம்) நமது ஆதனையும், ஆதன் வழிபட்ட பிறவற்றையும் குறிக்கிறது. உளவியல் நூலார் இவற்றோடு அகக்குழந்தை (Personality) என்றொரு வடிவையும் சேர்த்துக் குறிக்கின்றனர்.

ஆதன் :

உருவம் இல்லாததாகவும், நமது உயர்நிலைத் தோற்றமாகவும், நம்மை அண்டப் பெருவெளி ஆற்றலோடு இசைவிப்பதாகவும், நம்மை வழிப்படுத்தி நமது உச்சத்திற்கு உயர்த்துவதாகவும் உள்ளது நமது ஆதன். உடல், மனம் என்னும் இவற்றின் மேம்பட்ட நிலையில் அமைந்திருக்கும் ஆதன், அதன் உருவமற்ற அருவ நிலையினாலும், ஆற்றல் சார்பினாலும், அது ‘ஆவி’ (நல்ண்ழ்ண்ற்) என்றும் குறிக்கப்படுகிறது. அதன் நம்முள் உறையும் தெய்வீகம் என்று மேதை பாச் குறித்தார்.

மனம் :

நம்முள்ள பருப்பொருள் உருவம் இல்லாததாக உள்ள ஓர் உறுப்பே மனம் ஆகும். அறிவு நிலை உணர்வு நிலை என்பவற்றிற்கு அது இடமாக அமைந்த இயல்பு நோக்கி, அது நுண்ணுறுப்பு (Subtle Organ) என்றும் கூறப்படும். அது பொதுவாக ஆக்கநிலை செயல்பாடு (Creativity) கொண்டது. அதன் மெல்லியல்பு காரணமாக நோயின் முந்தியதான தாக்கத்திற்கு ஆளாவதா கவும் அத்தாக்கத்தைப் பின்னர் உடலுக்கும் பரவு மாறு செய்வதாகவும் உள்ளது.

மனத்தை ‘மனச்சான்று’ என்னும் உண்மை உணர்வுடையதாகக் காத்துக் கொள்கின்ற போது, அது ஆதனுடன் தொடர்பு கொள்ள வழி செய்கிறது. ஆளுமை வடிவினால் மனச்சான்று அடுக் கப்படும் போது, மனம் ஆதனுடன் முரண்பாடு உடையதாய், நோய்த் தாக்கத்திற்கு வழி வகுப்ப தாய் ஆகிவிடுகின்றது.

ஆளுமை வடிவம் :

நமது நடை, உடை, பேச்சு முதலானவற்றால், நமது புறத்தின் வெளிப்பாடாகவும், நம்மை முன்நிறுத்திக் காட்டுவதாகவும், நமது பெயரைக் குறித்த அளவில் நம்மை இத்தகையர் எனப் பிறர் அறியுமாறு உணர்த்துவதாகவும் உள்ளது நம்மு டைய ஆளுமை வடிவு.

அது நம்முடைய ஆதனுக்கு அடங்கி நடப்பதாகவும், ஆதனின் வழிகாட்டுதலின்படி செய லாற்றுவதாகவும் உள்ளபோது, இம்மண்ணுலகில் இருந்து நாம் மறைந்த பின்னும் நிலைத்திருக்கத் தக்கவாறு புகழைச் செய்யும் அருஞ்செயல்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கின்றது.

அப்படி அது அதனுக்கு அடங்காமல், பேராசையின் பாற்பட்டும், பிறருடைய தவறான தூண்டுதலுக்கு ஆளாகியும் தன்போக்கில் இயங்குகின்றபோது, பொய்யாகவும் புனைவாகவும் போலியாகவும் நம்மை வெளிப்படுத்திக் காட்டு வதாகவும், நம்முடைய ஆதனிடமிருந்து நம்டிமப் பிரிப்பதாகவும் ஆகிவிடுகின்றது. எனவே நமது ஆளுமை வடிவுக்குக் கடிவாளம் பூட்டி அதனை நேர்வழியில் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டியுள்ளது.

உடல் :

நமது உடல் வன்பொருள் (திடப்பொருள்), நீர்ப்பொருள் (திரவப் பொருள்) ஆவி என்னும் மூன்று வகைப் பொருள்களால் ஆகியது. உயிர் இயக்கம் உள்ளவரை இயக்க ஆற்றல் கொண்டது. தற்சார்பு இல்லாதது.

நம்மை முன்நிறுத்திக் காட்டும் ஆளுமை வடிவு நமது மனத்தையும், அதன்வழி உடலையும் தன்போக்கில் ஆட்டுவிக்கிறது.

ஓரிடத்திலிருந்து வேறு ஓர் இடத்திற்குச் செல்வதற்குப் பயன்படும் வண்டியைப்போலவும், ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்குப் பயன்படும் கருவியைப் போலவும் நமக்கு நமது உடல் பயன்படுகிறது.

மனம், உடல், ஆளுமை வடிவு ஆகிய அனைத்தும் ஆதனுடன் பொருந்தி நிற்கும் போது நமக்குள் ஒருமைப்பாடு காணப்படுகிறது. அவ் வாறு பொருந்தாதபோது ஒருமைப்பாடு சீர்குலை கிறது.

நம்முடைய ஆதன் வேறு ஒருவருடைய ஆத னின் ஆளுமைக்கு ஆட்படுதலும் கூடாது. பெற்றோர், அதிகாரி, ஆசிரியர் முதலானோர் தமக்குள் அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஓர் ஆதன் வேறு ஓர் ஆதனை அடக்கி ஆள முற்படுதலும் தீங்கு பயப்பதாகும்.

ஆதனுடன் ஆளுமை வடிவு நெருக்கமாய்ப் பொருந்தி நிற்பதால் நமக்குப் பல நன்மைகள் வாய்க்கின்றன. அவை வருமாறு :

1. ஆதன் - ஆளுமை வடிவு ஆகியவற்றின் நெருக்கத்தைப் பொறுத்தே வாழ்க்கையைப்    பற்றிய நம் பார்வை அமைகிறது அந்நெருக்கத்தினால் ஒத்திசைவும் அமைதியும் மிகுந்திருக்கும். அதனால் உண்மை ஒளி பளிச் சிட்டு உவகைக்கதிர்கள் விரிந்து பரவுகின்றன.

2. வாழ்வியல் தொல்லைகளாலும் உலகியல் கொடுமைகளாலும் நாம் இடிந்து போகாதவாறு நம்மை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது.

3. உலகியல் துன்பங்கள் தற்காலமானவை என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

4. நாம் முழுச்சீர்மை அடைவதற்கு உதவியாகவே நோய்கள் நம்மைத் தாக்குகின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

5. பிறரை வருத்திப் பிழியும் நிகழ்வுகள் நம்மைத்    தாக்காதவாறு, தாக்கினாலும் அவற்றிலிருந்து மீண்டும் பாதுகாத்துக் கொள்கின்றவாறும் அமைகின்றன.

6. உறுதியின்மை, அச்சம், வருத்தம் ஆகியவை முழுமையாக நம்மைவிட்டு நீங்குகின்றன.

7.உலகம் உவகைக்குச் சிறந்த பேரிடமாய் உள்ளது என்பதை அறிய முடிகின்றது.

நோயின் தாக்கம் :

வெவ்வேறு மருத்துவ முறைகளிலும் நோய்கள் பற்றி வெவ்வேறாகக் கூறப்படுகின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் விலகியதாகவும் வேறுபட்டதாகவும் மேதை பாச் அவர்களின் நோய் பற்றிய விளக்கம் அமைகிறது.

அவ்விளக்கத்தின்படி, அடிப்படையில் நோயாகத் துளிர்ப்பது ஒன்றே. அது தன்விருப்பு (Self - Love ) என்னும் பற்றுள்ளம் ஆகும். அதிலிருந்து கிளைப்பனவாகவும், அதோடு சேர்த்தும், கீழ்க்காணும் ஏழு நிலைகளும் முதன்மை நோய்கள் (Primary Diseases) என்று அவரால் கூறப்பட்டன. அவை :

1. செருக்கு அல்லது பெருமை (pride)

2. கொடுமை (Cruelty)

3. வெறுப்பு (Hate)

4. தன்விருப்பு (Self - love)

5. அறியாமை (Ignorance)

6. நிலையின்மை (Instability)

7. போராசை (Greed) என்பன.

இவற்றுள் முதல் நிலையில் உள்ள நோளாகிய தன்விருப்பு நடுநாயகமாகக் குறிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இவையே உண்மையான நோய்கள் என்று முதன் முதலில் எடுத்துரைத்தவர் பாச் பெருமக னாரே ஆவார்.

முதன்மை நோய்களின் பெருக்கங்கள்

முதன்மை நோய்கள் எவ்வாறு பெருகு கின்றன என்பதும் பாச் அவர்களால் கூறப்பட்டது. அவ்விளக்கங்கள் வருமாறு :

(1)செருக்கு : செருக்கினால்முரட்டுப் பிடிவாதமும் இறுக்கமான மனமும் காணப்படும். அவற்றின் காரணமாக உடம்பில் விறைப்பு இறுக்கம் முதலான பாதிப்புகளை உண்டாக்கும் நோய் கள் தோன்றுகின்றன.

(2)கொடுமை : கொடுமை உணர்வினால் பிறரைத் துன்புறுத்த நேரிடு கின்றது. அதனால் உடலிலும் மனத்திலும் தீராதனவும் தாங்க முடியாதனவுமாகிய வலித்துன்பங்களைத் தரும் நோய்கள் ஒருவர்க்கு வாய்க்கின்றன.

(3)வெறுப்பு : வெறுப்பினால் தனிமைத்துன்பம், காட்டுப்பாடற்ற கடுஞ்சினம், மனமும் நரம்பும் கட்டிப்பாடின்றி அலைக்கழிதல், இசிவு நோய் முதலானவை உண்டாகின்றன.

(4)தன்விருப்பு : வாழ்வில் மகிழ்ச்சியைக் கொல்லும் மனக்கோளாறு, நரம்புத்தளர்ச்சி முதலானவை தன்விருப்பால் உண்டாகின்றன.

(5)அறியாமை : அறியாமையால் புலன் உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. அதோடு, உண்மையைக் காண மறுக்கும் குணமும் இணைந்துவிட்டால் கிட்டப்பார்வை, பார்வைக் கோளாறு, செவிட்டுத்தனம் முதலான புலன் அறிவுப் பாதிப்புகள் உண்டாகின்றன.

(6)நிலையின்மை : நிலையின்மையால் உடம்பியக்கத்தையும் அதன் ஒருங்கிணைந்த செயல்பாட்டையும் பாதிக்கும் நோய்கள் தோற்றுகின்றன.

(7)போராசை : போராசையால் பிறரை அடக்கி ஆள முற்படுபவர் தம் உடம்பிற்குத்தாமே அடிமையாகின்றார். அதோடு தம் நோய்த் தொல்லைகளால் தமக்கு விருப்பமானவற்றை துய்க்க முடியாமலும் போகின்றது.

இவ்வாறே, காரண காரியத் தொடர்புடன் ஒருவர்க்கு ஏற்பட்டுள்ள நோய்ப்பாதிப்பு, அவரி டம் காணப்படும் குறைப்பாட்டைக் காட்டுவதாகும் என்றும் மேதை பாச் கூறினார். எ-டு உடம் பின் தலைமை இடமாக உள்ள மூளையில் உண் டாகும் பாதிப்பு, ஆளுமை வடிவின் கட்டுப்பா டற்ற நிலையைக் காட்டும் - என்பதாகும்.

முதன்மை நோய்களைப் போக்குதல்

நம்மிடம் ஒன்றும், பலவும் ஆகிய குறைகள் காணப்படக் கூடும். அவை முதன்மை நோய்கள் ஆதலின் அவற்றைப் போக்குவதற்கு உரிய வழியையும் காணவேண்டும்.

ஒருவருக்குச் செருக்கு என்னும் முதன்மை நோய் ஆகிய இயல்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம். பின்கண்ட வழிகளை அதைப் போக்குவதற்குரியவை என்று அவர் நினைக்கக் கூடும். அவ்வாறு :

செருக்கைப் போக்குவதற்கு :

1.செருக்குக் கொள்ள மாட்டேன் என்று பல முறை கூறித் தனக்குத் தானே கற்பித்துக் கொள்ளுதல்.

2. செருக்கை அடக்கி வைத்தல்.

3. செருக்குக் கொள்ளும்போது தன்னைத் தானே கண்டித்தல் அல்லது தண்டித்தல்

4.தம் செருக்கினால் பிறர்க்கு உண்டானப் பாதிப்பைப் போக்க முற்படுதல் - என்னும் பல வழிகளை அவர் தேடக்கூடும். இவ் வழிகளால் அவர்க்கு முழுமையாகப் பயன் கிடைக்காமல்போகும்.

‘தம்மிடம் காணும் குறைப்பாட்டுக்கு எதிரான நல்லியல்பைப் பெருக்க வேண்டும்’ என்பதே மேதை பாச் அவர்கள் கூறும் வழியாகும். அவ்வாறு,

       செருக்கு      X      பணிவு

       கொடுமை     X     கனிவு

       வெறுப்பு      X     விருப்பு

       தன்விருப்பு    X      பொதுநலவிருப்பு

       அறியாமை    X     தெளிவு

       நிலையின்மை X      உறுதிப்பாடு

       பேராசை      X     கொடை

என்று, குறைகளுக்கு எதிரான நல்லியல்பைப் பெருக்குவதே முதன்மை நோய்களைப் போக்கும் சிறந்த வழியாகும் என்பதை அப்பெருமகனார் எடுத்துரைத்தார்.

மலர் மருத்த்துவத் தொடர்பு :

மேற்கூறிய மெய்யியல் கோட்பாடுகளைவிளக்கியவர் மேதை பாச், எதிர்கால மருத்துவம் எத்தகையதாய் இருத்தல் வேண்டும் என்பதையும் அங்குத் கூறியுள்ளார். அக் கூற்று வருமாறு :

எதிர்கால மருத்துவமுறையும் எதிர்கால மருந்துகளும் :

எதிர்கால மருத்துவம் :

  • நோயினால் உண்டாகிய இறுதி விளைவுகளில் தனி ஆர்வம் காட்டுவதாய் இராது.
     
    உடம்பில் உண்டாகியுள்ள ஊறு பற்றியும் அது கவனம் செலுத்தாது.

    நோய்அறிகுறிகளைத் தணிவிப்பதற்காகவே மருந்துகளையும் வேதியற் பொருள்களையும்    தருவதாகவும் அது இருக்காது.

    உடல் அளவில் உண்டாகியுள்ள மாற்றங்கள் (நோய்கள்) மறுவினையின் விளைவால் வந்தவை என்னும் உண்மையை அம்மருத்துவம் இருந்ததாய் இருக்கும்.
     
    உடல், உள்ளம், ஆதன் ஆகிய இவற்றிற்கிடையே ஒத்திசைவை உண்டாக்குவதில் கவனம் செலுத்துவதாக அம்மருத்துவம் இருக்கும்.
     
    அது, தொடக்கத்திலேயே மனத்தைத் திருத்த முற்படுவதாகவும், பின்னர் வருவதற்குரிய நோய்களைத் தடுத்து விலக்குவதாகவும் அமையும் என்று அப்பெருமகனார் எதிர்கால மருத்துவ முறைப்பற்றி கூறியதோடு, எதிர்கால மருந்துகள் எத்தகையவையாய் இருக்கும் என்பதையும் எடுத்துரைத்தார்.

  • ‘இயற்கை என்னும் மருத்துவத் தொழிற்சாலையில் காணப்படுபவையும், மாந்தரின் மனத்தையும் உடலையும் குணமாக்கும் ஆற்றலும் வளமும் பொருந்தியவையும் ஆகிய மிக அழகிய பயிர் வகைகளும் மூலிகை வகைகளிலும் இருந்து கிடைக்கும் மருந்துகளையே எதிர்கால மருத்துவ முறை பயன் கொள்ளும்’ என்பது அவர்தம் கூற்றாகும்.

    இவ்வாறு கூறியவற்றால் மருத்துவமேதை எட்வர்டு பாச் அவர்களின் மெய்யியற் கோட் பாட்டு அடிப்படைகளை அறிந்து கொள்ளலாம். அக்கோட்பாடுகளுக்கு ஏற்பவே, எதிர்கால மருத்துவ முறை என்று அவரால் சிறப்பித்துக் கூறப்பட்ட மலர் மருத்துவ முறையும் அவரால் உருவாக்கப்பட்டது என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    Pin It