நோயுற்ற மனிதனுக்குத்தான் மருந்து, நோய்க்கு மருந்தில்லை என்ற தத்துவத்தில் உருவான மருத்துவம்தான் டாக்டர். ஹானிமனின் மருத்துவம், நோய் குறிகளின் தன்மையை அறிந்து, நோய் ஆரம்பித்ததின் ஆணிவேரை அறிந்து, அறவே நீக்குவதுதான் ஹோமியோ மருத்துவம்! 

 பன்னிரண்டு தாது உப்புக்களின் சேர்க் கையே இந்த உடல். ஒவ்வொரு தாது உப்பும், உடலின் ஒவ்வொரு இயக்கத்தையும் ஒழுங்கு படுத்தி இயங்க வைக்கிறது இயற்கையாக. தாது உப்புக்கள் உணவின் மூலமாக தேவையான அளவு கிடைக்கும் வரை, எந்த உடலுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. ஏதோ ஒரு தாது உப்பு சரியாக கிடைக்கவில்லையானால், உடம்பின் ஒரு பகுதி வேலை செய்வதை தாமதப்படுத்துகிறது. அதன் காரணமாக உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதிவேலை செய்யாமல் நோய்வாய்படுகிறது. அப்பொழுது எந்த தாது உப்பினால் எந்தப் பகுதி செயல் இழந்துள்ளது என்று ஆராய்ந்தறிந்து, அந்த தாது உப்பை 6ல என்ற அளவிலே உடலுக்கு அளிப்போமானால், அந்த உப்பை உடல் சிறுக, சிறுக ஏற்று நலமடைகிறது என்று கண்டறியப் பட்டது டாக்டர் சுஸ்லரின் பயோ கெமிஸ்டிரி மருத்துவம்! 

 எல்லா வியாதிகளும் உடலில் உருவாவதற்கு மூல காரணம் மனநிலை வேறுபாடுகள்தான் காரணம். கோபம், வெறுப்பு, அகங்காரம், ஆணவம், வன்மம், பொறாமை, பொய் சொல்லு தல், இல்லாததை இருப்பதைப் போல் காண்பித்தல், எப்பொழுதும் அடுத்தவரை குறை கூறுதல், குற்றம் காணுதல், பழி போடுதல், வஞ்சித்தல், வருத்தப்படுதல், அழுதல், உடலாலும், உள்ளத்தாலும், சுடு வார்த்தைகளாலும், எப்பொழுதும் காயப்படுத்துதல், தானும் உதவுவதும் இல்லை, மற்றவர்கள் உதவி செய்வதையும் தடுத்தல், தன்னால் முடியாது என்று அதைர்யபடுதல், சாதித்து காட்டவேண்டும் என்று தன்னால் செய்யமுடியாததை சவால் விடுதல், போன்ற மனநிலைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, பாட்ச் அவர்களே. அவர்கள் 38 வகையான மருந்துகள் மலர்கள் மற்ற பொருட்களிலிருந்தும் தயாரித்தார். அவர் தயாரித்த மலர் மருந்துகள் ஹோமியோபதி மருத்துவத்தோடு பயன்படுகிறது. ஆனால், இன்னும் பெரும்பான்மையான நோயுற்ற மக்களுக்கு சென்றடையவில்லை. 

 நம் நாட்டு மலர்களும் மலர் மருந்தாக செய்து பயன்பட ஆரம் பம் ஆகவில்லை. ஆனால் மலர்களையே பயன்படுத்தி சிலர் பயனடை கின்றனர். இந்த மலர்களையும் டாக்டர். எட்வர்டு பாட்ச் மலர் மருந்துகள் போல தயாரித்தால் நம்நாட்டு மலர்கள். நம்நாட்டு மக்களுக்கு பயன்படும் என்பதில் ஐயமில்லை. 

 நோயுற்றவர்கள் ஹோமியோ மருத்துவர் களிடம் உண்மையான காரணங்களை கூறுவதில்லை. மற்றவர்களுக்கு தெரியக்கூடாத ரகசியம் என்ற போலியான மனவிகாரத்தால் உள்ளத்தி லேயே ஆழமாக புதைத்து விடுகிறோம். அது சிறிய காலம் கழித்து, அவர்களின் உடல்நிலையில் அழுத்தம் ஏற்பட்டு, சுரப்பிகளிலோ, நரம்பு களிலோ, கிட்னி செயல்படும் முறைகளிலோ, தடைகளை ஏற்படுத்தி, தீராத நோய்கள் உருவாவதற்கு அடித்தளமாகிறது. 

 “மலர் மருந்துகளுக்கு மனநிலை வேறு பாடுகளை போக்கி, உடல்நிலையை சீராக்குவது மட்டுமல்ல. வேறுபல பயன்தரக்கூடிய பயன்களும் இருக்கிறது என்று, மலர் மருந்து பயன்படுத்துபவர்களும், ஆராயும் சிலரும் உணருகிறார்கள்.”

  நம்நாட்டு மலர்களிலும் அபரிமிதமான பயன்கள் இருக்கிறது. உடல்நலத்தையும், மனநலத்தையும் பேணுவதற்கு எண்ணற்ற சக்திகள் மறைந்துள்ளன. இறைவழிபாட்டிற்கு பல மலர்கள் பயன்படுகின்றன. உடல் நலத்திற்கு மலர்களையே பயன்படுத்தி, வியக்குதகு பயன்களை சிலர் அடைகின்றனர். நம்நாட்டு மலர்களையும், டாக்டர் எட்வர்ட் பாட்ச் மலர் மருந்து போல தயாரித்தால், நம்நாட்டு மக்களுக்கு பயன்படும். தீராத வினைகளையும் தீர்த்து, காலமெல்லாம் கஷ்டப் படும் வியாதிகளையும் குணப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

 மலர்களை முகரும்போது வாசனையால் மெய்மறந்து போகிறோம். உடலும் உள்ளமும் ஒன்றுபடுகிறோம். பூவின் மணம் நாடி நரம்புகளை மீட்டுகிறது. உள்ளத்தால் குளிர்ந்து, உணர்வை அமைதியாக்குகிறது. ஆனந்தம் ஆழ்மனதில் ஊறுகிறது. வியாதியின் தாக்கம் படிப்படியாக குறைந்து சமனடைகிறது. 

 நம்நாட்டு மலர்களின் மருத்துவ பயனை கண்டுபிடித்து மக்களுக்குச் சொல்ல டாக்டர் எட்வர்டு பாட்ச் போல யார் வரப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. 

காலத்தின் பதிலுக்காக காத்திருப்போம்!

Pin It