மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

இடஒதுக்கீடு: பிரதிநிதித்துவமா? சமூகநீதியா?

10 ஜூன் 2026 கட்டுரைகள்

ஓர் ஓட்டப்பந்தயத்தை கற்பனை செய்து பாருங்கள். சிலர் தொடக்கக் கோட்டிலிருந்து ஓடத் தொடங்குகிறார்கள். சிலர் பல மீட்டர்கள் பின்னால் நிறுத்தப்படுகிறார்கள். ஆனால்...

தவெகவின் வெற்றி - ஓரங்கட்டப் பெற்ற குறுநில மன்னர்கள்

10 ஜூன் 2026 கட்டுரைகள்

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நாம் ஏற்கெனவே சொன்னது போல தமிழக அரசியல் களத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி 60 ஆண்டுகால திராவிட அரசியல் கட்சிகளை...

ஒளிச்சேர்க்கை செய்யாமல் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்

10 ஜூன் 2026 சுற்றுச்சூழல்

எதிர்பார்க்கப்பட்டதை விட காடுகள் வெப்ப உயர்வால் ஆபத்தான நிலைக்கு வேகமாக சென்றுகொண்டிருக்கின்றன. அதிதீவிர வெப்பத்தால் வெப்பமண்டலப் பகுதி காடுகளில் மரங்களின்...

அரசியலமைப்பு அறத்திற்கும் இறையாண்மை அதிகாரத்திற்கும் இடையில்: இந்தியா, ஐ.நா. மற்றும் மனித உரிமை சிக்கல்கள்?

10 ஜூன் 2026 கட்டுரைகள்

இந்தியாவின் அரசியலமைப்புப் பயணம் என்பது ஜனநாயகத்தில் ஒரு ஆற்றல்மிக்க பரிசோதனையாகவே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது. 1950-இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச்...

வறுக்கி மழை

10 ஜூன் 2026 சிறுகதைகள்

பெரும் சோகத்தை தின்று செரித்த வீதியில் சமீப நாட்களாகவே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. யார் என்ன சொல்லி என்ன செய்ய முடியும். நடந்தது நடந்து விட்டது....

ச்சி ச்சீ சில கேள்விகள்

10 ஜூன் 2026 கட்டுரைகள்

எழுத்தின் வழியாகவோ பேச்சின் வழியாகவோ செயல்பாடுகளின் வழியாகவோ திட்டப்படவேண்டிய ஒருவனை நாம் திட்டுகிறோமே... அவன் தன் அன்றாடத்தில் என்ன செய்து...

இனி தேறல் மழை

10 ஜூன் 2026 கவிதைகள்

புறாவென நினைக்கவில்லை உன் முத்தங்கள் றெக்கை முளைத்து வந்திருக்கலாம் *கைகள் விரித்து வானம் ஏந்துகிறாய்சாரல் மழையெல்லாம்இனி தேறல் மழை * ஒரம்பரை புள்ளங்க யார்...

மனிதர்களின் எண் விளையாட்டு

10 ஜூன் 2026 கவிதைகள்

தம் மீதுவிழப் போகிற எறிகுண்டுகளைப் பார்த்துஅந்தக் குழந்தைகள்என்ன நினைத்திருப்பார்கள்?யாரோ பந்துகளை வீசிவிளையாடுகிறார்கள் என்றா...? அவர்களுக்குத்...

சுயமரியாதைத் தோழர்களும் காங்கிரசும்

10 ஜூன் 2026 பெரியார்

சுயமரியாதைத் தோழர்கள் சிலர், ஜஸ்டிஸ் கட்சியானது இரண்டொரு சட்டசபைத் தேர்தலிலும், சில ஸ்தல ஸ்தாபன தேர்தலிலும் தோல்வி அடைந்து விட்டது என்றும் பாமர மக்களிடம்...

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

கீற்றில் தேட...

பாவம்! நம்முடைய பார்ப்பன ஆதிக்க இந்திய அரசு பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் தூக்கிப் பிடிப்போம் என்றும், சூத்திரர்கள் படும் துன்பங்களைப் பற்றி எள் முனையளவும் கவலைப்பட மாட்டோம் என்றும் எவ்வளவு தெளிவாகச் சொன்னாலும், இந்த சூத்திரர்கள் பார்ப்பன ஆதிக்க இந்திய அரசையே நம்பி இருப்போம் என்ற அடம்பிடித்தால், பாவம், பார்ப்பனர்கள் இதற்கு மேல் என்னதான் செய்ய முடியும்? அதுவும் சூத்திர மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கிற வர்களும் பார்ப்பனர்களுடன் சேர்ந்து ஒத்து ஊதினால்....?

இந்தப் பீடிகை எதற்கு? செய்தி என்ன? என்று கேட்கிறீர்கள்? ஒன்றுமில்லை. இரஷ்யாவில் உள்ள சைபீரியா பகுதியில் உள்ள ஒரு நீதிமன்றம் பகவத் கீதை நூலைத் தடை செய்யப் போவதாகக் கேள்விப் பட்டு, 19.12.2011 அன்று இந்திய நாடாளுமன்றமே அமளி துமளி பட்டுப் போனது. இந்த அமளி துமளியில் கட்சி எல்லைகளைக் கடந்து காங்கிரஸ், பா.ஜ.க., லல்லுபிரசாத் யாதவின் ராஷ்ட்டிரிய ஜனதாதளம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், உலகில் பெரிய பிரளயம் ஏற்பட்டு விட்டதைப் போன்ற அவசர கோலத் தில் இதற்கு எதிராக இந்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துள்ளிக் குதித்தனர். மறு நாளே (20.12.2011 அன்று) இந்திய அரசு இரஷ்ய அரசிடம் சைபீரிய நீதிமன்றத்தின் இந்நடவடிக்கையைப் பற்றித்தனது தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்தது.

இந்த எதிர்ப்புப் பற்றிய விவரத்தைத் தெரிந்து கொண்ட சைபீரிய நீதிமன்றம் தனது தடை உத்தரவை முழுமையாகப் பார்க்கும்படியும், பகவத் கீதையையோ, அதன் மொழி பெயர்ப்பையோ தடைசெய்யவில்லை என்றும், அதற்கு உரை எழுதியவர்கள், மாற்றுக் கருத் தினரை அவமதிப்பாக எழுதியுள்ள விளக்க உரைகளை மட்டுமே தடை செய்து இருப்பதாகவும் 23.12.2011 அன்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.

சரியான விளக்கங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டே இருந்தால் இறுதியில் பார்ப்பன ஆதிக்கப் பிடிப்பு தளர்வதில் கொண்டு போய் விட்டுவிடும் என்பதை அறியாதவர்களா பார்ப்பனர்கள்? சைபீரிய நீதிமன்றத்தின் விளக்கத்தைச் சிறிதும் பொருட்படுத்தாத இந்தியப் பார்ப்பன அரசு 27.12.2011 அன்று சைபீரிய நீதி மன்றத்தின் நடவடிக்கை இந்திய மக்களின் உணர்வு களைப் புண்படுத்துவதாகவும், இதற்கு முறையான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இரஷ்ய அரசிடம் உறுதியாகத் தெரிவித்தது.

இதன் தொடர் விளைவாக 28.12.2011 அன்று சைபீரிய நீதிமன்றம், பகவத் கீதையின் மீதல்ல; அதன் மொழிபெயர்ப்பின் மீதுமல்ல; அதற்கு எழுதப்பட்ட மாற்றுக் கருத்தினரின் மீது வன்முறையை ஏவிவிடும் விளக்க உரைக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. மாற்றுக் கருத்தினர் மீதான வன்முறைக்கு எதிரான வழக்கில் வெற்றி கண்ட பெருமிதத்தில் இந்திய அரசு 29.12.2011 அன்று தனது முழு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.

தங்களை நாத்திகர்கள் என்ற பிரகடனம் செய்து கொண்டவர்கள் இந்திய அரசின் இந்த அடாவடிச் செயலைக் கண்டிப்பதற்குப் பதிலாக, பகவத் கீதை மக்கள் விரோதக் கருத்தைக் கொண்டுள்ளது என்று ஏற்கெனவே தாங்கள் கூறியுள்ள கருத்துகளையே மீண்டும் மறுபதிப்பு செய்துள்ளார்கள். சைபீரிய நீதி மன்றம் பகவத் கீதை மீதும், அதன் மொழிபெயர்ப்பின் மீதும் தடைவிதிக்கவில்லை என்றும் ‘ஹரே கிருஷ்ணா’ அமைப்பின் நிறுவனர் எழுதிய வன்முறையைத் தூண்டும் விளக்க உரைக்குத் தான் தடை விதித்துள்ளதையும் சுட்டிக்காட்டி, வன்முறையைத் தூண்டும் ஒரு தனி நபரின் விளக்க உரைக்கு அரசு வக்காலத்து வாங்கு வதைச் சுட்டிக்காட்டி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தத் தவறிவிட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், அவர்கள் ஒவ் வொரு நாளும் செத்துப் பிழைப்பதும், ஐம்புலன்களும் அவிந்துபோன ஒரு சதைப் பிண்டத்தினால் கூட அறிந்து கொள்ள முடியக் கூடிய அளவிற்கு, ஒரு கெட்டியான உண்மையாக இருக்கிறது. ஆனால் நமது இந்திய அரசினால் அதை நம்ப முடியவில்லையாம். தமிழக மீனவர்களுக்கு இந்தியக் கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றிற்கு 6.1.2012 அன்று பதிலளித்த இந்திய அரசு, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுத் தான் உள்ளதாகவும், இதை மெய்ப்பிப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் அப்படி ஏதாவது தாக்குதல் நடந்து இருந்தால் அது இலங்கைக் கடல் பகுதியில்தான் என்றும், ஆகவே இதில் இந்திய அரசு தiயிடும் படியான காரணம் எதுவும் இல்லை என்றும் இந்திய அரசு கூறியுள்ளது. இதுமட்டுமல் லாமல் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் செல்வதும் சிங்கள மீனவர்கள் தமிழகக் கடற்பகுதிக்குள் வருவதும் தான் மோதலுக்குக் காரணம் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

மக்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பகவத் கீதைக்கு ஒரு தனிமனிதர் எழுதிய வன்முறை நோக்கங் கொண்ட விளக்க உரைக்கு வெகு தொலைவிலுள்ள அயல்நாட்டைச் சேர்த்த ஒரு நீதிமன்றம் தடைவிதித்ததினால் யாரும் எவ்விதப் பாதிப்பும் அடைய வில்லை. ஆனால் ஏதோ பிரளயமே ஏற்பட்டுவிட்டது போல் இந்திய அரசு துள்ளிக் குதிக்கிறது. பகவத் கீதைக்கு எத்தனையோ பேர்கள் விளக்க உரை எழுதி இருக்கிறார்கள். அவற்றில் ‘ஹரே கிருஷ்ணா’ இயக்க நிறுவனரின் உரைக்குத் தான் தடைவிதிக்கப்பட்டது. தேவைப்பட்டால் அவ்வுரைக்கு மாற்று உரை எழுதி, தடையை நீக்க மனு செய்யும்படி அவ்வியக்கத்தி னருக்கு இந்திய அரசு அறிவுறுத்தி இருக்கலாம். அதை விட்டுவிட்டு அரசு உறவிலேயே விரிசல் ஏற்பட்டு விடும்படியான அளவில் வெகுண்டு எழுந்தது.

ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரத்தில், இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுவதைப் பற்றிக் குறிப்பிட்டு, அதனால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறிவிட்டு, தாக்கப்படுவதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று இந்திய அரசு கூசாமல் கூறுகிறது. சிங்கள மீனவர்கள் எல்லை தாண்டினாலும் பாதுகாப்பாகத் திரும்பி செல்வது போல, தமிழக மீனவர்களும் எல்லை தாண்டினாலும் பாதுகாப்பாகத் திரும்ப வேண்டிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு இம்மியளவும் அக்கறை கொள்ளவில்லை.

இந்த இரு நிகழ்வுகளிலும், பார்ப்பன இந்திய அரசை மக்கள் பிரதிநிதிகள் யாரும் கண்டிக்கவில்லை. முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு பதவிச் சுகம் அனுபவிக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் பார்ப்பன இந்திய அரசுடன் இணைந்து கூத்தடித்துக் கொண்டு இருக்கின்றன.

பார்ப்பனர்கள்தான் என்ன செய்வார்கள்? உழைக்கும் மக்கள் எவ்வளவு துன்பங்களுக்கு உட்பட்டாலும் அதைப்பற்றி அக்கறை கொள்ளமாட்டோம் என்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக ஏதாவது நடந்து விடுமோ என்று இம்மியளவு சந்தேகம் வந்தாலும், அதை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போம் என்றும் தெளிவாகத் தெரிவிக்கவே செய்கின்றனர். நாம் அச்சத்தினாலோ, எச்சில் பொறுக்கும் ஆசையினாலோ, அல்லது மௌடீகத்தினாலேயோ இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் பாவம் பார்ப்பனர்கள் என்னதான் செய்வார்கள்?