மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

இடஒதுக்கீடு: பிரதிநிதித்துவமா? சமூகநீதியா?

10 ஜூன் 2026 கட்டுரைகள்

ஓர் ஓட்டப்பந்தயத்தை கற்பனை செய்து பாருங்கள். சிலர் தொடக்கக் கோட்டிலிருந்து ஓடத் தொடங்குகிறார்கள். சிலர் பல மீட்டர்கள் பின்னால் நிறுத்தப்படுகிறார்கள். ஆனால்...

தவெகவின் வெற்றி - ஓரங்கட்டப் பெற்ற குறுநில மன்னர்கள்

10 ஜூன் 2026 கட்டுரைகள்

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நாம் ஏற்கெனவே சொன்னது போல தமிழக அரசியல் களத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி 60 ஆண்டுகால திராவிட அரசியல் கட்சிகளை...

ஒளிச்சேர்க்கை செய்யாமல் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்

10 ஜூன் 2026 சுற்றுச்சூழல்

எதிர்பார்க்கப்பட்டதை விட காடுகள் வெப்ப உயர்வால் ஆபத்தான நிலைக்கு வேகமாக சென்றுகொண்டிருக்கின்றன. அதிதீவிர வெப்பத்தால் வெப்பமண்டலப் பகுதி காடுகளில் மரங்களின்...

அரசியலமைப்பு அறத்திற்கும் இறையாண்மை அதிகாரத்திற்கும் இடையில்: இந்தியா, ஐ.நா. மற்றும் மனித உரிமை சிக்கல்கள்?

10 ஜூன் 2026 கட்டுரைகள்

இந்தியாவின் அரசியலமைப்புப் பயணம் என்பது ஜனநாயகத்தில் ஒரு ஆற்றல்மிக்க பரிசோதனையாகவே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது. 1950-இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச்...

வறுக்கி மழை

10 ஜூன் 2026 சிறுகதைகள்

பெரும் சோகத்தை தின்று செரித்த வீதியில் சமீப நாட்களாகவே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. யார் என்ன சொல்லி என்ன செய்ய முடியும். நடந்தது நடந்து விட்டது....

ச்சி ச்சீ சில கேள்விகள்

10 ஜூன் 2026 கட்டுரைகள்

எழுத்தின் வழியாகவோ பேச்சின் வழியாகவோ செயல்பாடுகளின் வழியாகவோ திட்டப்படவேண்டிய ஒருவனை நாம் திட்டுகிறோமே... அவன் தன் அன்றாடத்தில் என்ன செய்து...

இனி தேறல் மழை

10 ஜூன் 2026 கவிதைகள்

புறாவென நினைக்கவில்லை உன் முத்தங்கள் றெக்கை முளைத்து வந்திருக்கலாம் *கைகள் விரித்து வானம் ஏந்துகிறாய்சாரல் மழையெல்லாம்இனி தேறல் மழை * ஒரம்பரை புள்ளங்க யார்...

மனிதர்களின் எண் விளையாட்டு

10 ஜூன் 2026 கவிதைகள்

தம் மீதுவிழப் போகிற எறிகுண்டுகளைப் பார்த்துஅந்தக் குழந்தைகள்என்ன நினைத்திருப்பார்கள்?யாரோ பந்துகளை வீசிவிளையாடுகிறார்கள் என்றா...? அவர்களுக்குத்...

சுயமரியாதைத் தோழர்களும் காங்கிரசும்

10 ஜூன் 2026 பெரியார்

சுயமரியாதைத் தோழர்கள் சிலர், ஜஸ்டிஸ் கட்சியானது இரண்டொரு சட்டசபைத் தேர்தலிலும், சில ஸ்தல ஸ்தாபன தேர்தலிலும் தோல்வி அடைந்து விட்டது என்றும் பாமர மக்களிடம்...

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

கீற்றில் தேட...

மெரினா திரைப்படம் ஒரு பார்வை

பசங்க ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் மெரினா திரைப்படத்தில் - இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் நாயகன், உள்ளிட்டோர் அறிமுகம் என்பதே முதலில் ஆச்சர்யத்தை அளிக்கும் செய்தியாகும். தனது கதையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, சினிமாவின் வெற்றி சூத்திரங்களாக அறியப்படும் குத்துப்பாட்டு, சண்டை எதையும் படத்தில் வலிந்து திணிக்காமல், படத்தை சொந்தமாகத் தயாரிக்க முன் வந்த தைரியம் தமிழ் சினிமாவில் எத்தனை பேரிடம் உள்ளது? இதற்காக முதலில் இயக்குனரைப் பாராட்டுவோம்.

marina_575

நாயகி, நாயகன், அவருடைய நண்பனாக வருபவர், அம்பிகாபதியாக வரும் சிறுவன், அவனுடைய நண்பனாக வரும் சிறுவர்கள், தபால்காரர், பாட்டு பாடி பிழைக்கும் மனிதர், அவருடைய மகள், மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரம், குதிரைக்காரர் என படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு 100 விழுக்காடு நேர்மை செய்திருக்கிறார்கள்,

நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் ஒப்பனையில்லாமல் நாம் அன்றாடம் பார்க்கும் சக மனிதர்களின் பிரதியாக தோன்றியிருக்கிறார். பக்கோடாவாக முந்தைய படமான பசங்க படத்தில் அறியப்பட்டு இப்படத்தில் அம்பிகாபதியாக நடித்துள்ள சிறுவன், இரண்டாவது படத்திலேயே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறான். மகன் மற்றும் மருமகளால் கைவிடப்பட்ட நிலையில் அவர்களைப் பழிவாங்க பிச்சை எடுக்கும் பெரியவர் நெகிழ வைக்கிறார். வசனமே இல்லாமல் வந்து போகும் குதிரைகாரரின் அற்புதமான நடிப்பு, கடற்கரையை வாடகைக்கு விட்டுள்ளதாக அவ்வப்போது கூறிக்கொண்டு திரியும் மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரமாக நடித்திருக்கும் நண்பர் மற்றும் லந்து பட்டாசு வசனங்களால் திரையரங்கில் சிரிப்பலையால் முழ்கடிக்கும் நாயகனின் நண்பர் ஆகியோர் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

அந்த சிறுவர்களிடையே இயல்பாய் எழும் மோதல்கள், புரிதலுக்குப் பின்னால் தோன்றும் தோழமை, அவர்களுக்கே உண்டான சிறுசிறு கேளிக்கைகள் என திரைக்கதையை சிறுவர்களின் ஊடாக பயணிக்கச்செய்திருக்கும் இயக்குநர், ஒவ்வொரு பாத்திர படைப்பிலும், மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு, அந்தந்த பாத்திரங்களின் சொந்த வாழ்க்கையினூடாக சமூக சூழல்கள் மற்றும் அவலங்களை அலசியிருக்கிறார்.

marina_601

மெரினா என்பது காதலர்களின் ரகசிய சந்திப்பிற்கான இடமாகவும், மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் கேளிக்கை தளமாகவும், பணிச்சூழல் மிகுந்து விட்ட சென்னை மக்களின் மனதை ஆற்றுப்படுத்தும் பகுதியாகவும் மட்டுமே தமிழ் சினிமாவால் இதுவரை கட்டமைக்கப்பட்டு வந்த ஒரு பிம்பம் இப்படத்தால் உடைபட்டிருக்கிறது. சென்னை வரும் சுற்றுலா பயணிகளின் பயனத்திட்டத்தில் முக்கியமாக பார்க்க வேண்டியன பட்டியலில் முதலிடம் வகிக்கும் பகுதி எனவும் நம்முடைய பொதுப்புத்தியில் உரையவைக்கப்பட்டுள்ள வழமையான எண்ணத்தை மாற்றும் விதமாக, விளிம்பு நிலை மனிதர்களாக அறியப்படும் சென்னையின் சாலையோர சிறுவர்கள், ஆதரவற்றோர், சுண்டல், தண்ணீர் பை விற்கும் சிறுவர்கள் என விளிம்பு நிலை மனிதர்களாக அறியப்படுவோரின் வாழ்க்கையிலும் ஒரு பொழுதுபோக்கு தலமான மெரினா முக்கிய பத்திரம் வகிக்கிறது என்பதை ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தன்னுடைய குழுவினரின் பங்களிப்போடு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

இயல்பான கதையோடு, எளிய பத்திரங்களைக் கொண்டு, தனது ஒவ்வொரு படமும், தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாக பதிவு செய்யப்படவேண்டும் என்ற உத்வேகத்தோடு பணியாற்றும் இயக்குநர், தமிழ் சினிமாவை அடுத்த தளம் நோக்கி உயர்த்தும் தமிழின் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் தன்னுடைய இருப்பை மீண்டுமொருமுறை பதிவுசெய்துள்ளார். 

- பண்ரூட்டி காமராஜ் (panrutikamaraj@gmail. com)