தேவையான பொருட்கள்:

முள் அதிகம் இல்லாத பெரிய வகை மீன் - 8 துண்டுகள்
பட்டை - 1 சிறிய துண்டு
வெங்காயம் - 3 நறுக்கியது
இஞ்சி&பூண்டு - 2 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
மல்லி இலை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 10 இலை
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

• மீன் துண்டுகளில் 2 துண்டு மீனை மட்டும் முள்ளை நீக்கி வைக்கவும்.
• மீதமுள்ள 6 மீன் துண்டுகளில் கொஞ்சம் மிளகாய்,மஞ்சள் தூள்,இஞ்சி & பூண்டு உப்பு சேர்த்து பிரட்டி 2 மனிநேரம் வைக்கவும்.
• பின் எண்ணையில் மசாலா பிரட்டிய 6 துண்டுகளை பொரித்து எடுக்கவும்..பொரிக்க அதிகம் எண்ணை உபயோகிக்க வேண்டாம்.4 ஸ்பூன் எண்ணை போதும்.
• பின் மீனை பொரித்து பாத்திரத்தில் மாற்றி விட்டு அதே எண்ணையில் பட்டை,வெங்காயம்,கறிவேப்பிலை இட்டு நன்கு வதக்கவும்.
• வதங்கி பொன்னிறமானதும் இஞ்சி&பூண்டு சேர்த்து வதக்குங்கள்.
• பின் தக்காளி மல்லி இலை சேர்த்து வதக்கி தக்காளி நன்கு உடைந்து வேகட்டும்
• பின் உப்பு,மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,குருமிளகுத் தூள் சேர்த்து மீதமுள்ள பொரிக்காத 2 துண்டு முள் களைந்த மீனை இட்டு நன்கு வதக்கி மசாலாவுடன் பொடித்து வேக விடுங்கள்...இந்த மீன் 5 நிமிடத்தில் வெந்து விடும்.
• பின் மீனும் வெந்து மசாலா சுண்டி நல்ல கெட்டி க்ரேவி பருவத்தில் வந்ததும் பொரித்த மீன்களை சேர்த்து இனி அதிகம் கிளற வேண்டாம் லேசாக மசாலா எல்லா இடத்திலும் பரவும் விதம் மட்டும் கிளறி 2 நிமிடம் குறைந்த தீயில் மூடி விடவும்.
• சுவையான மீன் மசாலா ரெடி

Pin It