தேவையானவை:

வாவல் மீன்...1/2 கிலோ
சின்ன வெங்காயம்,,15
தக்காளி..................3
பச்சை மிளகாய்.......3
பூண்டு....................12 பல்
இஞ்சி...................... 1/2 இஞ்ச நீளம்
சீரகம்.......................1/2 தேக்கரண்டி.
மிளகாய் பொடி...1 தேக்கரண்டி.
மல்லி பொடி........1 தேக்கரண்டி.
மஞ்சள் பொடி.......கொஞ்சம்
தேங்காய்...............1 /4 மூடி
புளி.......................... எலுமிச்சை அளவு
உப்பு.........................தேவையான அளவு
கறிவேப்பிலை..........ஒரு கொத்து
எண்ணெய்.................2 தேக்கரண்டி
கருவடாம்/வெந்தயம்..1 தேக்கரண்டி

செய்முறை:

புளியை முடிந்தால் அரிசி கழுவிய கழுநீர் ஊற்றி ஊறவைத்து, நன்கு கெட்டியாக கரைத்து வைக்கவும். வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். மீனை நன்கு கழுவி.. கொஞ்சம் மஞ்சள்பொடி + உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறவைத்துப் பின்பும் கழுவவும்.

சீரகம் + 7 வெங்காயம் வைத்து நன்கு அரைக்கவும். இஞ்சி + 6 பூண்டு பல் வைத்து அரைக்கவும். மீதி பூண்டை நன்கு தட்டி வைத்துக்கொள்ளவும். மீதி வெங்காயத்தை நைசாக நறுக்கி வைக்கவும். பச்சை  மிளகாய், தக்காளியை   நறுக்கவும் .

தேங்காயை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து, மூன்று பால் எடுக்கவும்.  அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கருவடாம் + வெந்தயம் போட்டு சிவந்ததும்/வாசனை வந்ததும், உடனே நறுக்கிய வெங்காயம் + பச்சை  மிளகாய்  போட்டு வதக்கவும்.   அதிலேயே, தட்டிய பூண்டில் பாதியை போட்டு வதக்கி. அதனுடன் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.

பின்னர் அதில் மிளகாய்பொடி, மல்லிப் பொடி + மஞ்சள் பொடி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின் அதிலேயே, கரைத்த புளி + உப்பு போடவும். பின்னர் அதில் இரண்டாவது, மூன்றாவது  தேங்காய்ப்பாலை ஊற்றவும்.குழம்பு நன்கு கொதித்த பின், மீனை அதில் போடவும். மீதமுள்ள முதல் பாலை ஊற்றி கொதித்ததும், கறிவேப்பிலை + தட்டிய பூண்டு போட்டு இறக்கி விடவும்..!

வாவல் மீன் குழம்பு, இட்லிக்கு செம ஜோரான ஜோடி..! தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் சாதத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It