தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி: ஒரு கிலோ
கரம் மசாலா: 2 தேக்கரண்டி
தனியா தூள் 2 தேக்கரண்டி
நெய்: 200 கிராம்
சுக்கு: 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்: 2
பெருங்காயத் தூள்: ஒரு சிட்டிகை
இஞ்சி: சிறுதுண்டு
கொத்துமல்லி: ஒரு கட்டு
உருளைக்கிழங்கு: 14
பச்சை மிளகாய்: 2
உப்பு: தேவையான அளவு
ரொட்டித் தூள்: தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் 50 கிராம் நெய் விட்டு, அது காய்ந்ததும் உருளைக்கிழங்கு, ரொட்டித் தூள் தவிர ஏனைய பொருள்களை எல்லாம் வாணலியில் போட்டு வதக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் விட்டு இறைச்சியை வேகவைத்து இறக்க வேண்டும்.
உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து, அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும். இதை சிறுசிறு உருண்டைகளாக்கி, தட்டி கொத்துக்கறி கலவையை வைத்து இடைவெளி விடாமல் மூடி, ரொட்டித் தூளில் புரட்டி எடுக்க வேண்டும். வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் கட்லெட்டை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- காலனிய காலத்தில் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியே இல்லை
- தமிழ்நாட்டில் தொடக்கநிலைக் காலனியம் குறித்த ஆய்வுகள்
- விழிமின் - எழுமின்
- விண்வெளி இரகசியங்களை ஆராய ஒரு மணிஜாடி சோதனை
- சுதந்திரக் கால்கள்
- நாங்கள் இருக்கும் நாடு
- "மனித உற்பவம்"
- அண்ணாவின் பொதுவுடைமை சிந்தனை
- தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!
- தொல்கபிலர் - தமிழ் அறிவு மரபின் தந்தை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மிலிட்டரி ஹோட்டல்