தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கிலோ
நெய் - 200 கிராம்
வெங்காயம் - 40 கிராம்
கொத்தமல்லி இலை - 1 கட்டு
அக்ரூட் - 2
பாதாம்பருப்பு – 7
தேங்காய் - 1 மூடி
பச்சை மிளகாய் - 10
பிஸ்தா பருப்பு - 10
கசகசா, சாரப்பருப்பு – தலா 2 தேக்கரண்டி
ஜாதிக்காய் - 1
லவங்கப்பட்டை - 1 துண்டு
கிராம்பு - 10
ஏலக்காய் - 10
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்துமல்லி இலையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சாரப் பருப்பு, அக்ரூட் பருப்பு, பிஸ்தா, கசகசா, பாதாம் பருப்பு, ஜாதிக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

பின்பு நெய்யை பாத்திரத்தில் ஊற்றி, காயவிடவும். அதில் ஏலம், பட்டை, கிராம்பு ஆகியவற்றை போட்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்த சாமான்களை அதில் போட்டுக் கிளறி, தேங்காய்ப்பாலும் நீருமாக 2 லிட்டர் அளவுக்கு ஊற்றி அரிசியையும் சேர்த்து கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும். முக்கால் வேக்காட்டில் இறக்கி வைத்தால், நெய் சாதம் பரிமாறுவதற்குத் தயார்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.