தேவையான பொருட்கள்:

தேங்காய் - ஒரு மூடி
பெருங்காயம் - பட்டாணி அளவு
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மிளகாய் - 6
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - ஒரு மேசைக்கரண்டி 

செய்முறை:

தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பருப்புடன் சிறு எலுமிச்சை அளவு புளி மற்றும் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். முக்கால் பதத்திற்கு அரைபட்டவுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்க வேண்டும். மிகவும் நைசாக அரைத்து விடாமல், தேங்காயும் பருப்பும் சேரும் அளவிற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.