தேவையான பொருட்கள்:

தக்காளிப்பழம் - 3 
மிளகு - ஒன்றரை தேக்கரண்டி
புளி - கைப்பிடி அளவு
பூண்டு - 6 பல்
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
துவரம்பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

தக்காளிகளை நறுக்கி 700 மில்லி தண்ணீரில் போட்டு, அதனுடன் புளியைச் சேர்க்க வேண்டும். மிளகு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றைப் பொடி செய்து புளிக்கரைசலில் போட வேண்டும். அதனுடன் பூண்டை தட்டிப் போட்டு கொதிக்க விட வேண்டும். 

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றல், கடுகு சேர்க்க வேண்டும். அது வெடித்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதனுடன் கொத்தமல்லி இலையையும் சேர்த்து ரசத்தில் ஊற்றி இறக்கி வைத்து விட்டால் மிளகு ரசம் தயார்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.