தேவையான பொருட்கள்:

கெட்டித் தயிர் - 2 கப்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கொஞ்சம்
கொத்தமல்லி இலை - கொஞ்சம் 

செய்முறை:

தயிரை கரண்டியால் நன்றாகக் கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை 2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெயை சூடு செய்து அதில் கடுகு போட வேண்டும். கடுகு வெடித்ததும் அதனுடன் பெருங்காயத் தூள், கரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளற வேண்டும். இது கொதிக்கும்போது, தயிரை அதில் ஊற்றி நிறம் மாறும்வரை கிளற வேண்டும். பின்பு அரிசி மாவை அரை மேசைக்கரண்டி நீர் விட்டு கரைத்து குழம்பில் ஊற்றி கிளற வேண்டும்.

குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். அதனுடன் கொத்தமல்லி இலையை சேர்த்து பரிமாற வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.