தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் ஒரு புயலாய் உருவெடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படி ஒரு புயல் உருவாகத் தேவையான காலநிலை அப்போது இருந்தது. ‘ரோஜா’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவலாய் ஒலித்தபோதும் கூட இளையராஜாவின் இசைத் தாலாட்டில் சொக்கிப் போயிருந்த பலரும் அந்தப் படத்தின் இசையை எப்போதாவது ஒரு படத்தில் நிகழ்ந்து மறையும் அதிசயம் என்றே கூறினர். ஆனால் அந்த அதிசயம் தொடர்ந்தது. ‘ரோஜா’ படத்தின் இசை, தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையிசையே அடுத்த சில ஆண்டுகளுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
ரோஜாவில் நடந்த அதே போன்ற சம்பவம் எழுபதுகளின் தொடக்கத்தில் நடந்தது. ‘அன்னக்கிளி’ எனும் திரைப்படத்தில் பண்ணைப் புரத்தில் இருந்து வந்த ராசைய்யா எனும் இளைஞனின் இசையைக் கேட்ட ரசிகர்களுக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. தன்னுடைய அடுத்தடுத்த சில படங்களின் மூலம் அன்னக்கிளியில் நடந்தது ஒருபட அதிசயம் இல்லை என்பதைப் புரிய வைத்தான் அந்த இளைஞன். ஒரு புதிய திரையிசை வரலாற்றின் தொடக்கமாகவே ‘அன்னக்கிளி’ அமைந்தது. ஆனால் ‘அன்னக்கிளி’யில் தொடங்கிய இசைப்பயணத்துக்கும் ‘ரோஜா’வில் தொடங்கிய இசைப்பயணத்துக்கும் வேறுபாடுகள் உண்டு. இளையராஜா தன்னுடைய இலக்காகக் கொண்டிருந்தது தமிழ்த் திரையிசையை மட்டும்தான். பின்னாளில் அவருடைய பாடல்கள் இந்தி உட்பட இந்தியாவின் பிற மொழிப்படங்கள் பலவற்றில் நகலெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இளையராஜாவுக்கும் இந்தியத் திரையிசை மீதான ஆர்வம் உண்டானது. ஆனால் அது அவருடைய குருதியில் ஊறிய இசை மரபுக்கும், அவருடைய மனநிலைக்கும் ஒத்திசைவானதாக இல்லாமற் போனதால் அந்த முயற்சிகளைக் கைவிட்டார். அது தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும்பாக்கியமாக அமைந்தது.
எண்பதுகளில் இருந்து தொண்ணூறுகளின் தொடக்கம் வரை ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் இளையராஜாவின் இசை மழையில் தமிழ் மக்கள் திகட்டத் திகட்ட நனைந்தனர். இக்கால கட்டத்தில் திரையுலகமே இளையராஜாவின் காலடியில் கிடந்தது என்பதே உண்மை. படத்துக்கு அவருடைய இசை கிடைத்துவிட்டாலே படத்தின் வெற்றி உறுதி செய்யப்படும் அளவுக்கு உயர்ந்த நிலையில் அவர் இருந்தார். ஒரு ஆண்டின் பிரபலமான பாடல்களைப் பட்டியலிட்டால் அதில் எண்பது சதவீதம் அவருடைய பாடல்களாகவே இருந்தன. இக்காலத்தில் சக இசையமைப்பாளர்களாயிருந்த சங்கர்கணேஷ், டி.ராஜேந்தர், சந்திரபோஸ், தேவேந்திரன், அம்சலேகா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா போன்றவர்களால் இவருடைய உயரத்தை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத தூரத்தில் இருந்தார். மோகன், ராமராஜன், பிரபு போன்ற நடிகர்கள் சினிமாவில் நீடித்திருந்ததே ராஜாவின் இசையால்தான். ஆர்.சுந்தரராஜன், ஆர்.வி.உதயகுமார், கஸ்தூரிராஜா, பி.வாசு போன்ற இயக்குனர்களும் ராஜாவின் இசையால் உருவானவர்கள்தான். பாரதிராஜா, கே.பாலச்சந்தர், மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாக்கியராஜ் போன்றவர்களை இந்த வரிசையில் சேர்க்க முடியாது என்றாலும், அவர்களின் வெற்றிகளுக்குப் பக்கபலமாக ராஜாவின் இசை இருந்ததை மறுக்க முடியாது.
‘அன்னக்கிளி’யில் இளையராஜா கொண்டு வந்தது மிகப்பெரிய மாற்றம். அதற்கு முன் இருந்த திரை இசை மரபுகளை உடைத்தெறிந்து பட்டி தொட்டியெங்கும் பரவிய புதுவிதமான இசையை அந்தப் படத்தில் இசை ரசிகர்கள் அனுபவித்தனர். அப்படத்தில் ராஜாவின் இசையில் தனித்தன்மையாக விளங்கியது மன உணர்வுகளை மீட்டக்கூடிய தரமான இசைக் கோர்ப்பு. ‘ரோஜா’வில் ரகுமான் செய்ததும் மிகப்பெரிய மாற்றம்தான். ரசிகர்களுக்கு அந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் புதுமையான விருந்தாக அமைந்தது. ஆனால் ‘அன்னக்கிளி’யின் இசையைக் கடந்து செல்லக்கூடிய, அதை விடவும் தரமான இசையைத் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் இளையராஜாவால் கொடுக்க முடிந்தது. ரகுமானால் அது முடியாமல் போனது. இதில்தான் ராஜாவுக்கும் ரகுமானுக்குமிடையிலான வேறுபாடு அடங்கியிருக்கிறது. இன்னமும் ‘ரோஜா’ படத்தின் இசையைக் கடந்து செல்லக் கூடிய தரமான இசையை ரகுமான் தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ரகுமானின் இசையில் குறிப்பிடத்தகுந்த அம்சமே ஒலி ஆளுகைதான். அவருடைய பல பாடல்களின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தது சத்தங்களில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள்தான். அந்த வகையில் பார்த்தால் ‘புது வெள்ளை மழை’ பாடலுக்கு இணையான உயர்ந்த ஒலி ஆளுகை உள்ள ஒரு பாடலை அதற்குப் பின் அவருடைய இசையில் கேட்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ரகுமானின் இசை வரலாறு பதினாறு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்தப் பதினாறு ஆண்டுகளை முற்பாதி, பிற்பாதி என்று பிரித்தால் முதல் எட்டாண்டுகளை விட, அடுத்த எட்டாண்டுகளில் அவருடைய புகழ் உச்சத்தை தொட்டது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் போகாத உயரங்களுக்கு அவர் சென்றார். தேசிய அளவிலும், உலக அளவிலும் உயர்ந்த பல விருதுகள் அவர் முன் குவிந்தன. ஆனால் தமிழ் சினிமாவில் அவருடைய இசையின் தரமும், தாக்கமும் இதற்கு நேரெதிர் நிலையில் இருந்தன.
முதல் எட்டாண்டுகளில் ரகுமான் இசையமைத்த தமிழ்ப் பாடல்களுடன் ஒப்பிட்டால் அடுத்த எட்டாண்டுகளில் அவர் தந்த பாடல்கள் புகழ் பெறவில்லை என்றே சொல்லலாம். ஒலித் தொழில் நுட்பத்தில் உலகத்தரமான இசையை அவரால் பின் பாதியில் தர முடிந்தாலும், அந்த ஒலிகளை நிர்வகிப்பதிலும், இசையைக் கோர்ப்பதிலும் அவர் பெருமளவு சறுக்கியிருக்கிறார். அதே சமயம் பாடல்கள்தான் புகழ் அடையவில்லையே தவிர, அவருடைய புகழ் வளர்ந்துள்ளது. அவர் இசையமைக்கும் ஒவ்வொரு படத்துக்கும் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டேதான் வந்துள்ளது. ஏமாற்றமும்தான். இந்தக் கட்டுரைக்காக ரகுமான் இசையமைத்த பாடல்களில் பிடித்த பாடல்களை வரிசைப்படுத்தும் படி ஏறத்தாழ நூறு பேரிடம் கேள்வி நிரல் தயாரித்துக் கொடுத்து அவற்றை நிரப்பி வாங்கினேன். (படித்தவர், படிக்காதவர், இளைஞர், முதியோர், ஆண், பெண், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர் என்று பலதரப்பட்ட மனிதர்களையும் இதில் உள்ளடக்கியிருந்தேன்.) அவர்களால் அதிகம் குறிப்பிடப்பட்ட பாடல்களில் பெரும்பாலானவை சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் ரகுமான் இசையமைத்தவை. (மிக அதிகமாக குறிப்பிடப்பட்டிருந்த பாடல் ‘புது வெள்ளை மழை.’)
இந்த மாற்றத்துக்கு காரணம் தமிழ் சினிமாவிலிருந்து அவர் படிப்படியாக விலகிச் சென்றிருப்பதுதான். அவரைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பதை மாநில அளவிலிருந்து தேசிய அளவுக்கும், தேசிய அளவிலிருந்து உலக அளவுக்குமானதாகப் புரிந்து கொண்டு அவ்வாறான திசையில்தான் பயணித்துள்ளார். முற்பாதிக் காலத்தில் தன்னுடைய இசைத் திறனையும் உழைப்பையும் தமிழ் சினிமாவுக்காக வழங்கிய அவர் பிற்பாதியில் அதிலிருந்து தவறியுள்ளார். ‘ரங்கீலா’, ‘லகான்’ போன்ற படங்களின் வெற்றிக்குப் பின்னர் அவருடைய பார்வை இந்தி சினிமாவின் மீது திரும்பியது. இந்தி சினிமாவிலும் உச்சநிலையை அடைந்த பின்னர் அவருடைய பார்வை உலக சினிமாவின் (உலக சினிமா என்று இங்கு சுட்டுவது ஹாலிவுட் சினிமா என்று புரிந்து கொள்ளவும்.) பக்கம் பாய்ந்தது. அதன் பலனாக இந்தியர்களைக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படமான ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தார். தமிழனாக அவருடைய சாதனைக்காக பெருமைப்படுவதா, இல்லை தமிழ் சினிமாவில் இருந்து அவருடைய இசை இன்னும் விலகிப் போய் விடுமே என்று வருத்தப்படுவதா என்று குழப்பமாயிருந்தது.
முதலில் வடக்கு நோக்கி நகர்ந்த அவருடைய இசை, தற்போது மேற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்குப் பின் மிகப்பெரும் இசை ஆளுமையாக உருவெடுத்திருக்க வேண்டிய ரகுமான், தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறார். இளையராஜாவின் சிறந்த பாடல்களாக குறைந்தது ஆயிரம் பாடல்களையாவது பட்டியலிட முடியும். ஆனால் பதினாறு ஆண்டுகளில் ரகுமான் இசையமைத்தவற்றில் சிறந்த பாடல்களைப் பட்டியலிட்டால் அதிகபட்சம் நூறைத் தாண்டாது. குறைந்த அளவு படங்களுக்கு மட்டுமே இசையமைத்து ஏமாற்றம் தந்தவர், பிற்பாதிக் காலத்தில் குறைந்த அளவே உழைப்பையும், அக்கறையையும் தந்து மேலும் ஏமாற்றமளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் ரகுமானின் இசை எந்த அளவுக்கு நீர்த்துப் போயுள்ளது என்பதற்கு அவருடைய சமீபத்திய படங்களே நல்ல உதாரணம். அவர் இசையமைத்த ‘பாபா’, ‘தெனாலி’, ‘சிவாஜி’, ‘உதயா’, ‘கண்களால் கைது செய்’, ‘எந்திரன்’, ‘சக்கரக்கட்டி’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘ராவணன்’ போன்ற படங்களின் இசையுடன் ‘ரோஜா’, ‘திருடா திருடா’, ‘டூயட்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘இருவர்’, ‘காதலன்’, ‘காதல் தேசம்’, ‘இந்தியன்’, ‘காதலர் தினம்’ போன்ற படங்களின் இசையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.
படித்த மேல்தட்டு வர்க்கத்தினரால் கொண்டாடப்பட்ட ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் பாடல்கள் பெரும்பான்மைப் பிரிவைச் சேர்ந்த மக்களிடம் சென்று சேரவே இல்லை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டு மக்களைப் பெரிதும் கவர்ந்த பாடல்களில் பெரும்பாலானவை ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ் போன்றவர்கள் இசையமைத்தவை. இவற்றில் ரகுமான் இசையமைத்த பாடல்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இது போன்ற ஏமாற்றங்களை ஏ.ஆர்.ரகுமான் இனியும் தரக்கூடாது. திசைமாறிச் சென்றுவிட்ட இசைப் புயல், மீண்டும் திரும்பி தமிழ்நாட்டில் ஒரு தென்றலாகவாவது தவழ வேண்டும்.
கோபம் ஒன்றும் எனக்கில்லை, நீங்கள் எப்படி உங்கள் எண்ணங்களை சொன்னிர்களோ அது போல் தான் நான் என் என்னத்தை சொன்னேன். மேலும் கோபம் வந்தால்தான் அது சீண்டல் என்றில்லை, இந்த சின்ன கட்டுரைக்கே எவ்வளவு பதில்கள்/பதிப்ப ுகள் இதைத்தான் பப்ளிசிட்டி/விள ம்பரம் என்று சொன்னேன். கேள்வி கேட்க கூடாது என்று நான் சொல்லவில்லை, கேட்க வேண்டியவர்களிடம ் கேட்பதில்லை அதுதான் கவலையாக உள்ளது. தேவையில்லாமல் குத்து பாட்டு கொடுப்பவர்களையு ம், ரஹ்மான் மற்றும் ஆங்கில மெட்டுகளை காப்பி அடிப்பவர்களை பாராட்டியும் ஆனால் அதே சமயம் முடிந்தவரை originality-யை கடைபிடிக்கும் ரஹ்மானை குறைத்தும் சொல்வதுதான் தவறு என்கிறேன். ரஹ்மான் விஷயம் வந்ததால்தான் எனக்கு கீற்று என்று ஒரு இணையதளம் இருப்பதே எனக்கு தெரியவந்தது இதுதான் பப்ளிசிட்டி.
அப்படி கேள்வி கேட்க வேண்டியவர்கள் யார் யார் என்பது பற்றியும், அவர்களில் யாரிடம் நீங்கள் கேள்வி கேட்டுள்ளீர்கள் என்பது பற்றியும் ஒரு பட்டியல் தந்தால் நன்றாயிருக்கும் அபு. அதை வைத்து என்னுடைய சமூக உணர்வை நான் அளவிட்டுக் கொள்ள வசதியாய் இருக்கும். தருவீர்கள் என்று நம்புகிறேன்.
'உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன். நன் உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன்.' ஏ.ஆர்.ரகுமான் இசைஅமைத்த இந்த வரிகளை நினைவிருக்கிறதா மகேஸ்?
//உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன். நன் உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன்.' ஏ.ஆர்.ரகுமான் இசைஅமைத்த இந்த வரிகளை நினைவிருக்கிறதா மகேஸ்?//
அவர் ஓடிவிட்டேன் என்று எப்போது சொன்னார். ஒரு சின்ன வெற்றி கிடைத்தாலே தமிழையும் தமிழ் மண்ணையும்/மக்கள ையும் மதிக்காதவர்கள் மத்தியில் விதிவிலக்காய் தமிழை/தமிழன் பெயரை இன்னும் உயரத்திற்குக்கொ ண்டு செல்லும் ரஹ்மானை குறை கூருகிறீகள்.
உதாரணத்திற்கு: எவ்வளவோ எடுத்துக்காட்டு க்கள் கொடுக்கலாம் ஆனால் நான் இதை கூறுகிறேன் (இதைவிட அருவறத்தக்க பாடல்களும் இருக்கு): கட்டிபிடி கட்டிபிடிடா கண்டபடி கட்டிபிடிடா: இந்த பாட்டை கேட்டால்/பார்த் தால் உங்களை "வசுந்தரா தாஸ்/மும்தாஜ்/த ேவா" ஆகியோர் உண்மையிலேயே அதை கூறுகிறார்கள் என சொல்விர்களா? ஆனால் அதே சமயம் இன்றும் தமிழை மறக்காமல் இருக்கும் ரஹ்மானை ஓடிவிட்டார் என்கிறீர்கள். தமிழனுக்கு தமிழன்தான் எதிரி என்பது உங்கள் விசயத்தில் சரியாகிறது.
இளையராஜா ஆண்டுக்கு 25 படங்களுக்கு இசையமைத்தது பணத்துக்காக என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத வாதம். அப்படி பணத்தின் பின்னால் ஓடுவதாயிருந்தால ் அவர் ரகுமானைப் போல பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்க முடியும். சினிமாவில் நுழைந்த பல புதிய சின்னச் சின்ன தயாரிப்பாளர்களி ன் படங்களையும் நல்ல கதையம்சத்துடன் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களையும் ஊக்குவிக்கும் வகையில் தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு அவர் இசையமைத்துள்ளார ். அது இசையின் மீதான காதலால் மட்டுமே. இது குறித்து ஜெயமோகன் விரிவாக எழுதியுள்ள கட்டுரையை அவருடைய தளத்தில் வாசித்துப் பார்க்கவும். இளையராஜாவால் பிழைத்த நடிகர், இயக்குனர்களை நான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ளேன். ஆனால் அவரால் சினிமாவில் சாதாரணமாக இருந்து பெரிய அளவில் வளர்ந்த தயாரிப்பாளர்களி ன் எண்ணிக்கையும் மிக அதிகம். அவற்றை நான் குறிப்பிடவில்லை . இப்போது வரை சில நல்ல படங்களுக்காக குறைந்த அளவு ஊதியம் பெற்றுக் கொண்டு அல்லது ஊதியமே பெறாமல் இளையராஜா இசையமைத்து தருவது சினிமா உலகில் இருப்பவர்களுக்க ு தெரியும். ஏ.ஆர்.ரகுமானிடம ் இதை எதிர்பார்க்க முடியுமா? எவ்வளவுதான் நல்ல கதையுடன் இருந்தாலும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு கோடிகள் இன்றி அவரை அணுகவே முடியாது.
இளையராஜா ஆண்டுக்கு 25 படங்களுக்கு இசையமைத்தது பணத்துக்காக என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத வாதம். அப்படி பணத்தின் பின்னால் ஓடுவதாயிருந்தால ் அவர் ரகுமானைப் போல பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்க முடியும். சினிமாவில் நுழைந்த பல புதிய சின்னச் சின்ன தயாரிப்பாளர்களி ன் படங்களையும் நல்ல கதையம்சத்துடன் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களையும் ஊக்குவிக்கும் வகையில் தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு அவர் இசையமைத்துள்ளார ். அது இசையின் மீதான காதலால் மட்டுமே. இது குறித்து ஜெயமோகன் விரிவாக எழுதியுள்ள கட்டுரையை அவருடைய தளத்தில் வாசித்துப் பார்க்கவும். இளையராஜாவால் பிழைத்த நடிகர், இயக்குனர்களை நான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ளேன். ஆனால் அவரால் சினிமாவில் சாதாரணமாக இருந்து பெரிய அளவில் வளர்ந்த தயாரிப்பாளர்களி ன் எண்ணிக்கையும் மிக அதிகம். அவற்றை நான் குறிப்பிடவில்லை . இப்போது வரை சில நல்ல படங்களுக்காக குறைந்த அளவு ஊதியம் பெற்றுக் கொண்டு அல்லது ஊதியமே பெறாமல் இளையராஜா இசையமைத்து தருவது சினிமா உலகில் இருப்பவர்களுக்க ு தெரியும். ஏ.ஆர்.ரகுமானிடம ் இதை எதிர்பார்க்க முடியுமா? எவ்வளவுதான் நல்ல கதையுடன் இருந்தாலும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு கோடிகள் இன்றி அவரை அணுகவே முடியாது.
sakkarakkati, kangalal kaidu sei, paarthaley paravasam, varalaru, udaya, ayudha ezhuthu, jodi, enakku 20-unakku 18.
indha padangalil vandha paadalin tharam kuraiyavillai.
aanal sila padangal flop aagivittana. sila padangalil vandha paadalgal sariyaga padamaakkavilla i.
Ippadi pala padaippugal veenaagivittana .
thaangal kooria yuvan, harris pondror ellamey periya padangalukku mattum dan isai amaikkirargal.
aanal arr starting stage'il pudhiya iyakkunargaluda n pani purindhar.
so, arr always as like in 'roja'
எதற்காக இப்படி கீட்ரு இணையம் ரஹ்மான் மேல பொறாம படுதொ தெரியல.... கிண்டல் செய்வதற்கு கீட்ருத சிறந்த இணையம்....... நீங்க மொதல்ல ரஹ்மானோட பாட்டுகளையெல்லா ம் கேளுகங்க கேட்டுட்டு ரஹ்மான குறைசொல்லுங்க.. . 90ல் இருந்து ரஹ்ம்னோட இசை யெல்லாம் ஒவ்வொரு படத்துக்கும் தரம் வுயர்ந்தது.. இளையராஜா 10 படத்துக்கு இசை அமைப்பதற்கும் ரஹ்மான் 1 படத்துக்கு இசை அமைப்பதற்கு சமம்..... இனிமேலும் அடுத்தவர்களை குறைகூருவதை விட்டுட்டு உங்களுடைய வேலைய ஒழுங்கா பாத்திங்கனா நீங்க வாழ்கையில முன்னேறலாம்... முதல்ல அத பாருங்க....
எல்லாப்புகளும் ரஹ்மானுக்கே....
paattu ketta thalaivali pogum nu nan sollave illa. innoruthar sonnatha quote pannirunthen. sariya parunga neethu.
RSS feed for comments to this post