தமிழகத்தில், எழுதப்பட்ட வரலாறாலாக இருந்தாலும், வாய்மொழி வரலாறாக இருந்தாலும், கலைகளின் வாயிலாக காட்டப்பட்ட வரலாறாக இருந்தாலும் அனைத்துமே ஆண்ட பரம்பரையின் வரலாறுகளாக, அரசர்களின் வரலாறுகளாக, ஆண்டைகளின் வரலாறுகளாக, ஆதிக்க ஜாதிகளின் வரலாறுகளாகத்தான் இருந்து வருகின்றன.
அப்படிப் புனையப்பட்ட வரலாறுகளில் ஒன்றுதான் பசும்பொன் உ.முத்துராமலிங்கம் (தேவர்) என்பவரின் வரலாறு ஆகும்.தென் மாவட்டங்களில் மாத்திரம் அல்ல, முக்குலத்தோர் என்று சொல்லப்படுகிறவர்கள் குழுவாக அல்லது கூட்டமாக வாழ்கிற இடங்களில் மாத்திரம் அல்ல, தமிழகத்தின் தலைநகராய் விளங்கும் சென்னைப் பெருநகரின் மய்யத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத்தின் சிலை உட்பட அவரது நினைவாக நிறுவப்பட்ட அனைத்து சிலைகளின் பீடங்களிலும் பொன்மொழி போல் ஒரு வாசகம் தவறாமல் இடம் பெற்றிருக்கும். அது இதுதான்: ''தேசமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்''
மேற்காணும் வாசகத்தில் உள்ள இரண்டு சொற்களுக்குமே சொல்விற்பன்னர்கள் பல படப் பொருள் கூறுவர். அப்படிக் கூறுபவர்களில் பெரும்பாலோர் இவ்விரு சொற்களுமே பெருமையும், பெரும் பொருள் பொதிந்தவை என்றுமே கூறுவர்.
'தேசம்' என்கிறபோது, அது வெற்று வரைபடமோ அல்லது அவ்வரைபடம் விரிக்கும் நிலத்தின் வரையறையோ அல்ல! மாறாக, அவ்வரைபடம் வரையறுக்கும் நிலத்தில் வாழும் பல்வேறு இனக்குழு சார்ந்த மக்களையே அது குறிக்கும். இந்த இந்தியா என்கிற தேசம் விசித்திரமானது. இதில் பல்வேறு மொழி பேசுகிற, வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். இந்த வேறுபாடுகளை கடந்தவர்கள்தான் இதனை ஒரு தேசமாகக் கருத முடியும்-கண்ணைப்போல் காத்திடவும் முடியும். 120 கோடிக்கும் மேலான மக்கள் தொகைக்கொண்ட இத்தேசத்தில் அப்படி ஒருவரை கண்டறிவதென்பது கடற்கரை மணலில் விழுந்த கடுகைத் தேடுவது போல் தான் இருக்க முடியும்.
'தேசமும் , தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்று கூறிய திரு முத்துராமலிங்கம் அதனை அப்படியே கடைபிடித்தவர் தானா என்றால், அச்சொற்களின் உண்மைப் பொருளையும் - அதனை கூறிய திரு.உ.மு.தேவரின் நடவடிக்கைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் ஒற்றுமை என்பதை சிறிதளவேனும் காண இயலாது. அதிலும் குறிப்பாக இவர் தான் வசிக்கும் பகுதியில் வாழ்ந்த மக்களையே, சமமான மனிதர்களாகக் கருதும் மன இயல்பில்லாதவர்.
'அரிஜனங்கள் எனப்படுவோர் ஆண்டவனின் குழந்தைகள்' என்றார் மகாத்மா(!) காந்தி. 'ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம்' என்றனர் ஆன்மிகத் துறையினர். இதனை அறவே வெறுத்தவர் திரு முத்துராமலிங்கம். எனவே, தேசம் என்கிற சொல்லும், தெய்வீகம் என்கிற சொல்லும் இவரது அகராதியில் வெவ்வேறு பொருள் பொதிந்தவை ஆகின்றன. இதனை இவர் 'கண்ணாக'க் கருதினார் என்பதை இயற்கை அறிவு கொண்டோர் எவரும் ஏற்க இயலாது.
இவையன்றி இவரைக் குறித்துக் கட்டமைக்கப்பட்ட கதைகளும் அப்படித்தான்.
1. திரு.உ.மு.தேவர் பாண்டிய மன்னர் பரம்பரையில் வந்தவர்.
2. திரு.உ.மு.தேவர் தனது நிலங்களை தலித்துகளுக்கு பகிர்ந்தளித்தார்.
3. திரு.உ.மு.தேவர் இஸ்லாமியத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்.
இப்படியெல்லாம் இவரைக் குறித்தான பிரம்மிப்பூட்டும் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டது. இவர் தன்னலமற்ற தியாகியாகவும், சுயசாதி விருப்பமற்ற சமத்துவ விரும்பியாகவும், நாட்டுப்பற்றில் ஈடு இணையற்ற வீரராகவும், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தின் தலைவர்களுக்கெல்லாம் தலைவராகவும், நினைத்தால் எதையும் ஆக்கவும், அழிக்கவும் வல்ல சர்வ சக்தி படைத்தவராகவும் அவரை நம்பியக் கூட்டத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
எனினும், நடுவுநிலை பிறழாமல் சிந்திக்கக் கூடியவர்கள் எவருமே திரு.உ.முத்துராமலிங்கம் குறித்தான இத்தகைய புனைவுகளை ஏற்க மறுக்கின்றனர். அத்துடன் இவை அத்தனையும் புனைவுகள் தாம் என்பதை தரவுகளோடு நிறுவியும் உள்ளனர். அவற்றை நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.
புனைவு ஒன்று: உ.மு.தேவர் பாண்டிய மன்னர் வழிமுறையில் வந்தவர்
திரு.முத்துராமலிங்கம் 30.10.1908ஆம் ஆண்டில் உக்கிரபாண்டி-இந்திராணி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 'பசும்பொன்' கிராமத்தில் பிறந்து, 1938ல் சப்-மாஜிஸ்திரேட்டாக இருந்த பிரதம நாயகம் என்பவரை இவரது ஆட்கள் கொலை செய்து விட, அச்சூழலில் மதுரைக்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் 29.10.1962ல் மதுரை திருமங்கலம் பகுதியில் இறந்து விடுகிறார். 'பசும்பொன்' கிராமத்தின் பழம் பெயர் 'தவசிகுறிச்சி' எனவும் பிற்காலத்தில் உடையான் பசுபதியின் நினைவாக 'பசும்பொன்' என்று அழைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு புனையப்பட்ட 'மன்னர் பரம்பரை' கதையை பசும்பொன்னிற்கு பக்கத்தில் இருக்கும் 'முஷ்டக்குறிச்சி'யைச் சேர்ந்தவரும், 'முக்குலத்தோர்' பிரிவில் பிறந்தவருமான பத்திரிக்கையாளர் திரு.தினகரன் பின்வருமாறு மறுக்கிறார்:
'தெலுங்கு தேசமான ஹைதராபாத் நகரத்துக்கு அருகில் நெல்லிமாரலா, நௌபதாதுசி என்னும் கிராமங்களையொட்டி 'கிழுவநாடு' என்று ஒன்று இருந்தது. அங்கிருப்பவர்கள் 'தேவ' என்னும் பட்டம் உடையவர்கள். அய்யனார் தெய்வத்தை வணங்குகிறவர்கள். அய்யனை (குல தெய்வமாக) கொண்ட கூட்டத்தினர். (கூட்டத்திற்கு கோட்டை என்றும் பொருள் உண்டு) இவர்களே 'கொண்டையன் கோட்டை' மறவர்களின் முன்னோர்களாய் இருக்க வேண்டும் எனவும், ஆந்திரப் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து ஆப்பநாட்டுப் பகுதியில் குடியேறினர் என்றும் கூறுகின்றார்.'
(தமிழகத்தின் தலைவர்களை வந்தேறிகள் என வாய்க்கூசாமல் பேசிவரும் பெங்களூர் குணாவின் புதிய மாணாக்கர் 'தம்பி' சீமான் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.)
புனைவு இரண்டு : உ.மு.தேவர் தனது நிலங்களை தலித் மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்.
'உ.முத்துராமலிங்கத்தை பரம்பரைப் பணக்காரர் எனச் சொல்லும் அவரது பற்றாளர்கள் உ.முத்துராமலிங்கம் தனது நிலங்களை தலித்துகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார் என்பதைச் சற்று உரக்கவே கூவுகின்றார்கள். உ.முத்துராமலிங்கம் தனது இறப்புக்கு முன்னர் 1960ல் தனது பங்களா இருக்கும் புளிச்சிகுளம் கிராமத்தில் 32 1/2 கிராம நிலங்களை 17 பாகங்களாகப் பிரித்திருக்கிறார். ஒரு பாகத்தை தனக்கு வைத்துவிட்டு, 16 பாகங்களை தனக்கு நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருந்த 16 பேருக்கு எழுதி வைத்தார். அவர்களுள் பசும்பொன்னைச் சேர்ந்த இரண்டு தலித்துகளும் அடங்குவர்.
உ.முத்துராமலிங்கத்தின் இறப்புக்குப் பின்னர், ''திரு.உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு தர்மபரி பால ஸ்தாபனம்'' என்னும் பெயரில் நிறுவப்பட்ட அறக்கட்டளைக்கு, வடிவேலம்மாள், ஜானகி அம்மாள், ராமச்சந்திரன், அட்டெண்டர் முத்துசெல்வம் ஆகியோர் தவிர்த்த 12 பேர் தமது பங்குகள் அனைத்தையும் அப்படியே தந்து விட்டதாக ஏ.ஆர்.பெருமாள் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.
நிலங்களைத் திரும்பத் தர மறுத்த நால்வரும் மறவர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு புறமிருக்க வடிவேலம்மாள், ஜானகியம்மாள் இருவரும் உ.முத்துராமலிங்கத்தின் உறவுக்காரர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.
தலித்துகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டது போன்று மீண்டும் அம்மக்கள் உ.முத்துராமலிங்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கே திருப்பி கொடுத்து விட, அவரது சொத்துகளை இன்று வரை 'கோல்மால்' மூலமாக அபகரித்து, அனுபவித்து வரும் மறவர்களின் சதிச்செயல்கள் வெளித் தெரியாமல் இருப்பதற்காகவே தலித்துகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டதான பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகிறது.
ஆக, அவரது சொத்துகள் 17 பாகங்களாகப் பிரிக்கப்பட்டதும், அதில் இரண்டு பாகங்கள் அவரிடம் நெடுங்காலம் உழைத்த காரணத்தினாலோ அல்லது அவருக்கு உண்மையாக இருந்த காரணத்தினாலோ இரண்டு தலித்துகளுக்குக் கொடுக்கப்பட்டதும் உண்மை. ஆனால், சிறிது காலத்திலேயே அந்த நிலங்கள் திரும்பப் பறிக்கப்பட்டு விட்டது. கொடுத்ததையே பெருமையாகச் சொல்பவர்கள், அவரது அறக்கட்டளைக்கு திரும்ப வாங்கிக் கொண்டதை சொல்வதில்லை.
புனைவு மூன்று : உ.மு.தேவர் இஸ்லாமியத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்
1. 'உ.முத்துராமலிங்கத்தின் அரசியல் நுழைவு 1933 ஜூன் 23ல் இருந்து துவங்குகிறது. 'சாயல் குடி'யில் 'விவேகானந்தா வாசக சாலை'யின் முதலாவது ஆண்டு விழாவில் உ.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசியதுதான் அவரது அரசியல் பிரவேசத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறது. விவேகானந்தா வாசக சாலையில் பேசும்போது உ.முத்துராமலிங்கம் அபிராமபுரத்தின் இந்து மகா சபைத் தலைவர். அபிராமம் முஸ்லிம்களுக்கு எதிராக 1932, 1935, 1938 ஆகிய ஆண்டுகளில் கலவரம் புரிந்ததை அவரே ஒப்புக் கொண்டதாக பத்திரிக்கையாளர் தினகரன் எழுதுகிறார்.
2. தமிழகத்தில் ஜாதி சண்டையை மூட்டி விடுவதற்கு முன்பே மதச் சண்டையை மூட்டி விட்டு முன்னோட்டம் பார்த்த மதவாதியாக உ.முத்துராமலிங்கம் அரசியலுக்குள் நுழைகிறார். முத்துராமலிங்கத்தின் ஜாதி அடிப்படைவாதத்திற்கு 1937முதல் 1957 வரையிலான செயல்பாடுகள் தரவுகளாக இருப்பதைப் போன்று, மத அடிப்படை வாதத்திற்கு 1932ல் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து 1957 செப்டம்பர் 16 வடக்கன் குளத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைவரை நீண்டு கிடக்கிறது.
3. சட்டமன்ற விவாதத்தின்போது முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.மதுரை ஆர்.சிதம்பர பாரதி என்கின்ற உறுப்பினர் ஒரு செய்தியினை பதிவு செய்கிறார். ''சென்ற வருஷம் ஆர்.எஸ்.எஸ் தலைவரான ஸ்ரீ கோல்வால்கரை (இவர் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேவின் கோஷ்டி) மதுரைக்கு அழைத்து வந்து அவருக்கு ஸ்ரீ மு.தேவர் ஒரு பணப்பையை பரிசளிக்க ஏற்பாடு செய்தார். அச்சமயம் அவர் பேசியபோது, 'மகாத்மா காந்தி ஹரிஜனங்களை ஆதரிப்பதனால் இந்து மதத்திற்கே அவர் எதிரி என்றும், இதனால்தான் ஸ்ரீகோல்வால்கருக்கு பணமுடிப்பை அளிப்பதாகவும்'' கூறினாராம்.
(இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம்தான் 1925ல் இருந்து இன்று வரை சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக பல்வேறு கலவரங்கள் உருவாகக் காரணமாக இருந்து வருகிறது.)
4.1937 தேர்தலில் போட்டியிட காங்கிரசு கட்சி அவருக்கு வாய்ப்பளித்தது. இராமாநாதபுரம் சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்ட தேவர் வெற்றி பெறுகிறார். 1937 தேர்தல் வெற்றி உ.முத்துராமலிங்கம் அவர்களை தலைகால் தெரியாமல் ஆக்கியதால், தேர்தலில் தனக்கு ஓட்டளிக்காத தலித்துகள், இசுலாமியர்கள், நாடார்கள் மீது பலாத்காரத்தை தூண்டிவிட்டார்... 1939ல் அபிராமத்தில் உள்ள முஸ்லிம் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையில் இருக்கும்போது கண்மாயை வெட்டி தண்ணீரை வெளியேற்றியும் இருக்கிறார்.
5. 1957ல் தேர்தல் தினமாகிய ஜூலை 1ஆம் தேதியன்று தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக முஸ்லிம் கோஷா பெண்கள் வண்டிகளில் வந்துகொண்டிருந்தார்கள். அந்த வண்டிகளை நடுத்தெருவில் மறித்து நிறுத்தி, ஓட்டுப்போடும் இடங்களுக்கு போகக்கூடாது என்று தடுத்தார்கள். அச்சமயத்தில் காங்கிரஸ் ஊழியர்களான தலைமலைச்சாமி என்பவரும், சோணமுத்து என்பவரும் வேறு கிராமத்திலிருந்து அங்கே வந்தார்கள். ஓட்டர்களை மறித்து நிறுத்தி வைத்திருப்பதை அவர்கள் கண்டதும், அதை ஆட்சேபித்தார்கள். அதனால் அங்கிருந்த மறவர் கூட்டம் அவர்களை படுகாயம் அடையும்படி அடித்தார்கள். அதன் பிறகு கடைசிவரையில் அபிராமத்திலும், நத்தத்திலும் இருந்த கோஷா பெண்கள் ஓட்டு கொடுக்க முடியாமலேயே போக நேரிட்டது.
6. 'உ.முத்துராமலிங்கத்தின் பிறப்புச் செய்தியை குழப்பச் செய்தியுடன் வெளிஉலகுக்கு தெரியப்படுத்திய அவரது வரலாற்றாசிரியர்கள் உ.முத்துராமலிங்கம் 'இஸ்லாமியத் தாயின் மார்பில் பால் குடித்து வளர்ந்தார்' என்பதையும் கூறி வருகின்றனர். 1960ல் முத்துராமலிங்கத்தின் வரலாற்றை சுருக்கமாக எழுதிய சசிவர்ணம் ''இவர் பிறந்த ஆறாம் மாதம், வணக்கத்திற்குரிய இவரது தாயார் இந்திராணி அம்மையார் காலமாகி விட்டார்கள். அதுமுதல் இவரது பாட்டியார் இராணி அம்மையார்தான் இவரை வளர்த்து வந்தார்கள் (தேவர் ஜெயந்தி விஷேட சுவடி/11) என்பதாக பதிவு செய்கிறார்.
இவரை ஒட்டியே 1993ல் முத்துராமலிங்கத்தின் முழு வரலாற்றையும் எழுதிய ஏ.ஆர்.பெருமாளும் 'இஸ்லாமியப் பால் குடியை' வன்மையாக மறுத்து எழுதுவார். ஆனாலும் உ.முத்துராமலிங்கத்தின் 'இசுலாமிய பால் குடியை' வலிந்து பரப்பி வருகின்றனர்.
மேற்காணும் செய்திகளே திரு.உ.முத்துராமலிங்கத்தின் இந்து வெறி உணர்ச்சிக்கு சான்றாகும். இதனை மறைத்து அவரை ஒரு தேசியத் தலைவராக்கும் முயற்சியாகத்தான் 'இஸ்லாமியப் பால் குடி'' என்கிற கதை கட்டமைக்கப்பட்டது. இதனை அவரது வரலாற்றை எழுதியவர்களே மறுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- அறிவுக்குயில்
'ஆண்ட பரம்பரை' சீரியலை எல்லா சாதி செனலும் விரும்புகிறது. கொய்யால.... எல்லாரும் இந்நாட்டு மன்னர்
* தேவர் இறந்த வருடம் 1963..கட்டுரையா ளர் 1962 என கூறிக்கிறார்.
* தேவர் எழுதிய உயிலில் தலித்கள் பெயரும் உண்டு அதுப்போக சிட்டவண்ணாண் குளம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தி ல் வாழம் தலித்கள் இவர் நிலத்தைதான் வைத்து வாழ்கிறார்கள் இன்றும் அந்த நிலம் நிலங்கள் தேவரின் பெயரிலேயே உள்ளது..
* முதுகலத்தூர் கலவரம் என்ற ஒரு புத்தகத்தை அதுவும் காமராஜரின் நண்பர் எழிதிய புத்தகத்தை அதுவும் உங்கள் கட்டுரையைப்போலவ ே பொய்யை மட்டும் சொல்லும் ஒரு புத்தகத்தை என்னும் எத்தன நாளு கட்டுறையாளார் சொல்லிக்கொண்டே இருப்பாரோ தெரியல...
நீங்கள் கட்டுரை எழுத வந்தால் ஆதாரத்துடன் எழுதுங்கள்..நாள ை உங்கள் தலித்களே.. மப்பில் எழுதிய உங்கள் உளறல்களை உதாசீனப்படுத்தும்..
தவறு சொல்பவனே மிகுந்த ஜாக்கிரதையாக ஆதாரம் தரவேன்டும்.. வாய்க்கு வந்ததை எல்லாம் ஒருவன் சொல்வான் எனில் அவன் பெயர் பைத்தியம்.
புனைவுகளை படித்தவர்கள் எழுதுவது.
சரி தலித்கள் எந்த மதத்திற்கு வால் பிடிக்கிறார்கள் . அம்பேத்கர் புத்த மதத்திற்கு வால் பிடித்தார். பெரியார் இஸ்லாம், கிறிஸ்தவத்திற்க ு வால் பிடித்தார்.
இஸ்லாமிய பால்குடி கதை என்று தேவரின் வரலாற்றை எழுதியவர்களே எழுதிய பின்னர் இந்த கதையை பரப்புபவர்கள் யார்?
ராமசாமி படையாட்சியார், மானிக்கவேலு நாயக்கர் எனும் வன்னியர்கள் இல்லை என்றால் இன்று காமராஜர் என்ற ஒரு முதல்வரே இல்லை
அந்த இருவரும் தஙகள் கட்சி வசம் இருந்த 26 சட்டமன்ற உறிப்பினர்களின் ஆதரவை தந்ததால் தான் காமராஜர் அரியனை ஏரினார்...
அந்த காலத்தில் மெட்ராஸ் மாகானம்(தமிழ் நாடு, ஆந்த்ரா, கர்னாடகம், கேரளா) முழுவதும் சேர்த்தே 160 தொகுதிகள் தான
வரலாட்ரை சரியாக படித்து பாருங்கள்
தேவரை பட்ரி உங்கலுக்கு என்ன தெரிஉம்.....
விருநகர் மாவட்டம் சிட்டவண்ணாகுளம்
திருச்சூழி
வீரசோழபுரம் தவிர 8 கிராமங்கள்...
நாங்கள் அந்த பள்ளர் கிராமங்களுக்கு உங்களை அழைத்துப்போக யார். உண்மையை அறியும் ஆர்வமிருந்தால் வரலாம்!
DO you who is pandi,pandian ,pandiyar?
pandi is Nadar
pandian is kondiyan kottai maravar not other maravars
pandiyar is pallar
so pandiyan king is kondiyan kottai maravar
sethupathis is semmba nattu maravar which means chola nattu maravars they were rulers of chola king and migrated to ramnad and tirunelveli. please read history properly and comment.
PEOPLE DON’T SEE THIS WEBSITE BECAUSE IT IS NOT KEETRU. IT IS CASTE WBSITE.
Simply I can say the publisher and writers are FOOL. One of the best CASTE CLASH GREATING WEBSITE IS ”KEETRU”. DEVAR WHO IS THE MAN EXAMLE FOR UNITY,GODNESS, EAGERNESS, SIMPLICTY, TRUTHFULL. Stupid people like you ( KEETRU) cannot change the history. Mind your words and stop to publish this type of news otherwise you will get severe LOSS.
பசும் பொன் தேவரைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள். தயவு செய்து கட்டுரை எழுத வேண்டாம்.
ஆதாரம் இதோ நான் இருக்கிறேன் எனது தந்தை வழி பாட்டியின் தாயை பெற்றவர்தான் சாந்த் பீவி என்று அழைக்கப்படும் ஆயிஷா பீவி இவருக்கு சிக்கந்தரம்மாள் என்ற பெயரும் உண்டு இவர்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பால் கொடுத்தவர் அதன் மூலம் என் பாட்டிக்கு திருமணத்தின் போது தாய்மாமன் சீராக பல ஏக்கர் நிலங்களையும் தந்துள்ளார்
ஒருவரை பற்றி நல்லதை கூறாவிட்டாலும் பொய்யை கூறாமல் இருப்பது நல்லது
RSS feed for comments to this post