வாழ்வை இழக்கும் வெளவால்களின் சரணாலயமாக இருக்கும் மரங்கள் அழிக்கப் படுவதால் 5000க்கும் மேலான வெளவால்களும், காகம் மற்றும் குயில்களும் மற்றும பலவகையான பறவைகள் மரத்தை நம்பி வாழும் உயிரினங்கள் வாழ்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

கடந்த 2007ஆம் ஆண்டு கோவை அவிநாசி சாலையை ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி துவங்கியது. அதற்காக சாலையோர மரங்கள் 250க்கும் மேற்பட்டவை வெட்டி சாய்க்கப்பட்டன. இந்த மரங்களை நம்பி வாழ்ந்து வந்த காகம், குயில் இன்னும் பிற உயிரினங்கள் வேறு வழியின்றி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தேன். இப்பறவைகளின் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டன. பெரும்பாலான பறவைகள் கோவை வ.ஊ.சி பூங்காவிலும் அதன் அருகிலுள்ள மத்திய சிறைச்சாலையில் உள்ள மரங்களிலும் தஞ்சம் அடைந்தன.

இம்மரங்கள் வெட்டப்படும்போதே பறவைகளின் வாழ்விடப் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. அந்த மரங்களில் நகர வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட காகங்களும் குயில்களுமே பெரும்பாலானவை. இந்நிலையில் தற்போது கோவை-&மேட்டுப் பாளையம் சாலை விரிவாக்கத்திற்காக 49 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் இச்சாலை மேம்படுத்தப்படுகிறது. இதற்காக சாலையோரத்தில் உள்ள பச்சை மரங்கள் சுமார் 400 மரங்களுக்கும் மேல் வெட்டும் பணி நடைபெறுகிறது. இந்த மரங்களில் பல்லாயிரக் கணக்கான பறவை களுக்கு வாழ்விடமாக உள்ளது. இந்த மரங்கள் வெட்டப்படும் நிலையில் இதை நம்பி வாழும் பறைவகள் வேறு இடத்திற்கு கட்டாயம் செல்லவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இப்பறவைகளும் வ.ஊ.சி பார்க்கிலும் மத்திய சிறைச்சாலையிலும் உள்ள மரங்களில்தான் தஞ்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கே பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், தேவையில்லாத நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது.

கோவை வ.உ.சி பார்க்கிலும், மத்திய சிறையினுள்ளும் உள்ள மரங்களும் சுமார் 5000 வெளவால்களும், 100க்கும் மேற்பட்ட மைனா, காடை, கௌதாரி, கழுகு, ஆந்தை, தவிட்டுக் குருவி, மயில் இன்னும் நிறைய பறவைகளும¢ வாழும் இந்த இடத்தில்தான் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இங்குள்ள மரங்களையே நம்பி உயிர்வாழும் இந்த உயிரினங்களின் நிலை மிக சோகமாக அமையும். இந்த பறவைகள் பாதுகாப்பில்லா இடங்களில் தங்குவதால், அவற்றை வேட்டையாடும் நிலை அதிகரிக்கும். இப்படி இப்பறவைகள் அழிக்கப்பட்டால் பறவை இனமே அழிந்துவிடும். அபாயம் உள்ளது.

குறிப்பு

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தொழிற்சாலைகளின் 5000 டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது-. 50,000 டன் இரும்பு உருக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் நச்சு புகையிலிருந்து இந்த மரங்கள்தான் ஓரளவேனும் மக்களை காப்பாற்றியது.

(பூவுலகு செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)

Pin It