பொதுவாக கர்ப்ப காலத்தில் பல் பராமரிப்பு மிகவும் அவசியம். ஆனால் இந்த நேரத்தில்

* எந்தவித ஊடுக்கதிர் (எக்ஸ்ரே) பரிசோதனைகளும் செய்ய வேண்டாம். எந்த மாத்திரையானாலும் சாப்பிடும் முன் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி ஒப்புதல் பெறவேண்டும்.

* சொத்தை இருப்பின் உங்களுக்குச் சங்கடம் இல்லாதபடி பல் அடைத்தல், வேர் சிகிச்சை செய்துகொள்ளலாம்.

* பல் பிடுங்குவதை குழந்தைப் பிறக்கும் வரை தள்ளிப்போட வேண்டும். முதல் மூன்று மாதத்திலும், ஏழாம் மாதத்திற்குப் பிறகும் பல் பிடுங்கக் கூடாது. முன்னதில் கருச்சிதைவு, பின்னதில் குறைப்பிரசவத்திற்கு வாய்ப்புகள் அதிகம்.

* பல் மரத்துப்போக உபயோகிக்கும் மருந்துகள் கரு வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். முடிந்துவரை மருந்து, ஊசிகளைத் தவிர்ப்பது நல்லது. ஈறுவீக்கம் ஏற்படாமலிருக்க பற்களை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.

 

(நன்றி: கேளுங்கள் சொல்கிறோம்)

Pin It