1957 – அக்காலகட்டத்திலும் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டோர் மீது வன்முறைத் தாக்குதல் நடத்துவது என்பது ஒரு பொதுப் போக்காகும். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் நின்று முத்துராமலிங்கம்(தேவர்) வெற்றி பெற்றார். ஒரே நபர் இரு பதவி வகிக்க முடியாது என்ற காரணத்தினால் அவர் தனது சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவே, முதுகுளத்தூர் தொகுதியில் சட்டசபைத் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற வேட்பாளர் சசிவர்ண 'தேவர்’ என்பவருக்கு பள்ளர்கள் வாக்களிக்கவில்லை என்ற காரணத்தால் மறவர்கள் அவர்கள் மீது தாக்குதலை நடத்தினர். இதில் 42 பேர் கொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 10 ஆம் நாள் ஓர் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், தாழ்த்தப்பட்டோர் சார்பாக இம்மானுவேல் சேகரன் அவர்களும் கலந்து கொண்டார். அவர் முத்துராமலிங்கம் வரும் பொழுது எழுந்து நின்று வணக்கம் செலுத்தவில்லை; அவருக்கு சரி நிகராக உட்கார்ந்து கொண்டு பேசினார்.
பேச்சுவார்த்தையின் கோரிக்கைகளை முத்துராமலிங்கம் ஒப்புக்கொண்டாலும் இம்மானுவேல் சேகரனுடன் சேர்ந்து கையெழுத்திட மறுத்ததால் ஒரே கோரிக்கை இரண்டு பிரதி எடுக்கப்பட்டு முத்துராமலிங்கம் தனி பிரதியில் கையெழுத்திட்டார். மறுநாள், செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவர் சுயமரியாதையுடன் நடந்து கொண்டது தான் மறவர்களை ஆத்திரம் அடையச் செய்து கொலை வெறிக்கு தூண்டியுள்ளது. 'தேவர்' சாதி வெறியை ஊட்டி வளர்த்த முத்துராமலிங்கம் ’தேசத் தலைவர்’ ஆனார். அவர் பிறந்த நாள் அரசு விழா ஆனது. ஆனால் ஒடுக்கப்பட்டோர் தலைவர்கள் சாதிக்கு எதிராக களம் கண்டிருந்தாலும், நாட்டின் அரசியலமைப்பையே எழுதியிருந்தாலும், தியாகிகளானாலும் ’தேசத் தலைவர்கள்’ ஆக முடியுமா என்ன?
50 ஆண்டுகளுக்குப் பிறகு, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய தியாகி இம்மானுவேலின் நினைவு நாள் அரசியல் அரங்கில் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், பரமக்குடியிலும் மதுரையிலும் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பார்க்க வேண்டுமே அன்றி, இதை தனி ஒரு நிகழ்வாக அணுக முடியாது. செப்டம்பர் 10 அன்று பழனிக்குமார் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொல்லப்பட்டதும் அதற்குக் காரணம் முத்துராமலிங்கத்தைப் பற்றி அவதூறாக எழுதி வைக்கப்பட்டிருந்தது என்று சட்டசபையில் முதல்வர் பேசியதும் இந்த வரலாற்று வேர்களைத் தேடச் சொல்கின்றது. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்திற்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இது வெறும் அரச வன்முறை என்று கண்டித்தலோடு, நாம் கடந்து போகக் கூடிய ஒன்றல்ல.
நம் மண்ணில் எல்லா மனிதர்களின் முதல் ஏக்கமும் சாதி தீண்டாமை இழிவிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே. இதற்காக வரலாறு முழுவதும் கதாநாயகர்களுக்காக காத்திருக்கின்றார்கள் அவர்கள். தமக்கு கிடைத்தத் தலைவர்களைத் தலைமேல் வைத்து கொண்டாடி இருக்கின்றார்கள். வரலாறு தோறும் கைவிடப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தம் எழுச்சிக்கான அடையாளங்களும், குறியீடுகளும் இன்றியமையாததாகின்றது. இப்படித் தான் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் சுயமரியாதை போராட்டத்திற்கான குறியீடாக கொண்டாடப்படுகின்றது. தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் அரசியல் எழுச்சி நாளாக ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இன்னொருபுறம் 1980, 90களில் சாதி வெறியர்களால் தாம் தாக்கப்படும் பொழுதெல்லாம் வலிக்கும்படி திருப்பி அடித்துக் காண்பித்தார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்; புதிய கட்சிகள், புதிய தலைவர்கள் என்று அரசியல் எழுச்சி கொண்டார்கள். இனியும் வெட்டறிவாள், கம்போடு அரசு, காவல் துறை உதவியுடன் ஆதிக்க சாதி வீரத்தைக் காட்டுவது அத்தனை எளிதல்ல என்று மாறியது களம்.
இன்னொருபுறம் அரசின் துணையுடன் சாதி வெறி தாக்குதல் நடத்தினால் சேதாரம் தம் பக்கமும் உண்டு; இனி அரசு இயந்திரத்தை நேரடியாக களத்தில் இறக்குவது தான் சிறந்தது’ என்று தக்க தருணம் பார்த்து காத்து இருந்திருக்கின்றது சாதி வெறிக் கும்பல். அதற்கு சரியான காலம் கனிந்தது போல், இந்த பார்ப்பனிய அரசக்கட்டமைப்பில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டது. ஒடுக்கப்பட்டோர் தம் எழுச்சி நாளாக கருதிய செப்டம்பர் 11 ஐ கலவர நாளாக மாற்றிவிட்டார்கள். அடுத்த ஆண்டு இன்னும் பலத்த காவல்துறை கெடுபிடி, துப்பாக்கிகள், செக் போஸ்ட்கள் என்று மக்களைப் பீதியூட்டுவதற்கு அடித்தளமிட்டுவிட்டார்கள். தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை, அரசியல் முக்கியத்துவமற்றதாக ஆக்குவதற்கு ஆதிக்க சாதி வெறியர்கள் அரசுடன் சேர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையே இந்த துப்பாக்கிச் சூடு.
ஆதிக்க சாதி வெறிச் செயல்கள் நடந்தேறும் பொழுதெல்லாம் மிகச் சாதாரணமாக இச்சமூகம் கடந்து போவதே, சாதிய மனநிலையில் இருந்து தான். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதல்கள் நடக்கும் போது அதை நம் சமூகம் மெளனமாக ஆதரிக்கின்றது. நம் சமூகத்தின் மெளனம் தான் அவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைக்கான ஆயுதமாக இருக்கின்றது. கிராமங்களில் சாதி ஒடுக்குமுறையும் அதன் வெளிப்பாடும் அப்பட்டமாக எந்த ஒளிவு மறைவும் இன்றி நடந்து கொண்டிருக்கின்றது. 'நகரத்தில் யாரும் சாதி பார்ப்பதில்லை’ என்பது போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில், ’தாழ்த்தப்பட்டோர்’ என்று வரும் பொழுது தான், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ‘சாதி முகம்’ வெளிப்படுகின்றது. தாழ்த்தப்பட்டோரின் அரசியல் எழுச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமை, அவர்களின் தலைவர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதும், கருதுவதும் சமூகத்தின் பொதுப் போக்காகவே இருக்கின்றது. ஒரு ‘தலித் விரோத உளவியல்’ சமூக உளவியலின் ஆழத்தில் படிந்து கிடக்கின்றது. தாழ்த்தப்பட்டோர் மீதான காழ்ப்புணர்ச்சியும், வன்மமும், ஆதிக்க உளவியலும் சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து நகரத்திற்கு வந்தாலும், கடல் கடந்து வேறு நாட்டுக்கு சென்றாலும்கூட சிந்தனையில் இருந்து பெயர்த்தெடுக்கப் படாமலே இருக்கின்றது.
பொது கோயில், பொது சாலை, பொது சுடுகாடு, பொது கிணறு, பொது தண்ணீர் குழாய், தேநீர் கடைகளில் பொது குவளை என்று தீண்டாமை ஒழிப்புக் கோரிக்கைகளே முற்றுப்பெறாமல் இருக்கின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போலவே கொலை வெறித் தாக்குதல்கள் தொடர்கின்றன. கிராமங்களில் சேரிகள் காலனியாக உருமாற்றப்பட்டது முன்பு. அது போல், இப்போது நகரங்களில் ஊருக்கு வெளியே கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் என்று புதிய சேரிகள் உருவாக்கப்படுகின்றன. தீண்டாமை புதியப் பெயர்களில், புதிய வடிவங்களில் தொடர்கின்றது. ’சட்டப் புத்தகத்தில் இருந்து மரண தண்டனையை ஒழித்திடு!’ போன்ற மனித உரிமைகளின் உன்னதமான கோரிக்கைகளை முன் வைக்கும் அளவிற்கு நம் சமூகம் மனித உரிமை விழுமியங்களில் வளர்ந்திருக்கிறதா? என்ற கேள்வியே இதிலிருந்து எழுகின்றது.
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து அதை சாதி ஒழிப்பு அரசியலாக வளர்த்தெடுத்த பெரியார் வாழ்ந்த மண்ணில் தான் இன்னும் இந்த பேரவலங்கள் தொடர்கின்றன. தாழ்த்தப்பட்டோர் மீதான ஒடுக்குமுறைகள் சமூகத்தின் மிக முக்கிய முரண்பாடாக இருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தாழ்த்தப்பட்ட மக்கள் தம் மீது நடத்தப்படும் அப்பட்டமான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய வண்ணம் ஒரு அரசியல் எழுச்சிக்கு தயாராகி வருகின்றார்கள். இதை தடுக்க அளவற்ற தடைகளை அவர்கள் முன் வைக்கின்றது சாதிய சமூகம். பெரியார் விதைத்த 'பார்ப்பனிய எதிர்ப்பு’ வீறு கொண்டெழத் தடையாயிருப்பது பெரும்பான்மை சமூகத்தின் தலித் விரோத போக்கு. சாதி ஒழிப்பு அரசியலைப் பெருமரமாக வளர்த்தெடுக்க வேண்டுமாயின் இச்சமூகத்தின் 'தலித் விரோத உளவியல்’ என்ற களையைப் பிடுங்கி எறிய வேண்டும் நாம். 'பறையன் பட்டம் போகாமல் உன் சூத்திரப் பட்டம் போகாது’ என்பதை இச்சமூகத்திற்கு அறைந்து உணர்த்தாவிட்டால், பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடி இந்து மதத்தை வேரறுத்து சாதியை ஒழிப்பது நோக்கி இனி ஒரு அடியைக் கூட முன் வைக்க முடியாது.
தென்னாப்பிரிக்காவில் கருப்பர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்காக வெள்ளையர்கள் வருந்தினார்கள். கண்ணீர் விட்டு அழுதார்கள்; குற்றவுணர்ச்சியில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பவற்றை நாம் படித்து இருக்கின்றோம். வெள்ளையர்கள் தம் முன்னோர்கள் இழைத்த அநீதிகளை எண்ணி அவமான உணர்ச்சி கொண்டதைக் கண்டவர்கள் சொல்லிக் கேட்டிருக்கின்றோம். ஆனால், எந்த ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரும் ஒரு வரலாற்று அநீதி இழைக்கப்பட்டிருப்பதை எண்ணி தம்மைக் குற்றவாளியாக உணர்ந்ததாக கேட்டறிந்த கதைகள் அரிதிலும் அரிது. ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழே யாராவது ஒருவரையாவது 'கீழ் சாதி' என்று சொல்லி ஒடுக்குமுறையை நிகழ்த்தும் ஒரு படிநிலை சமூகமாகத் தான் நம் சமூகம் இருந்துவந்திருக்கின்றது. இந்த சாதிய இழிவைப் போக்கிக் கொண்டு சாதி ஒழிப்பதற்கான போராட்டத்தினூடே ஒவ்வொரு சாதியினரும் தாம் இழைத்த அநீதிகளுக்காக வருந்த வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது. 'சாதி ஒழிப்பு போராட்டம்’ என்ற நீண்ட பயணம் தீண்டாமை ஒழிப்பு, சாதிய வன்முறை தாக்குதல்களைச் சாத்தியமற்றதாகச் செய்வது, சமூகத்தின் அத்தனை துறைகளிலும் சமத்துவம், இங்கு இருக்கும் வளங்களைப் பகிர்வதிலும் சமத்துவம் என்று பல இலக்குகளை உள்ளடக்கி உள்ளது. இந்த நெடியப் போராட்டப் பயணத்தில் தான் தீராத வன்மத்தையும், ஆறாத காயங்களையும் கொண்ட இந்த சாதிய சமூகத்தில் ஒன்றிணைவும், மீள் இணக்கமும் சாத்தியமாகப் போகின்றது.
ஜனநாயக (தேசிய, புரட்சிகர, முற்போக்கு) ஆற்றல்கள் சிலரின் மெளனமும், மழுப்பல் அணுகுமுறையும் எந்த அரசியலையும் வளர்த்தெடுக்கப் போவதில்லை. மேலும் நம் சொந்த மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும். இந்த அணுகுமுறை, என்றாவது ஒருநாள் சாதி ஒழிப்புக்கு எதிராகக் கொண்டு சென்று நிறுத்திவிடும். ஆதிக்க சாதி வெறியர்கள் உருவாக்கி வைத்துள்ள அடையாளங்களும், குறியீடுகளும் அதை சுற்றி கட்டி எழுப்பப்பட்டுள்ள பிம்பங்களும் சாதி இருத்தலுக்கே உரம் சேர்க்கின்றன. ஒடுக்கப்பட்டோர் தம் அடையாளங்களும், குறியீடுகளும் சாதி ஒழிப்புக்கே இட்டுச் செல்லும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. இவ்விரண்டையும் இனம் பிரித்துக் பார்ப்பதும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சிக்கு துணை நிற்பதுமே ஆதிக்க சாதி வெறிப் போக்கைத் தனிமைப்படுத்துவதற்கும் உணர்த்துவதற்கும் வழி. இதுவே, பார்ப்பனியத் தன்மை கொண்ட அரசுடன் சேர்ந்து சாதி வெறி கும்பல் தொடுத்திருக்கும் தாக்குதலுக்கு, ஜனநாயக ஆற்றல்கள் தரும் அரசியல் பதிலடியாக அமையும்.
பேச்சுவார்த்தையின் கோரிக்கைகளை முத்துராமலிங்கம் ஒப்புக்கொண்டாலும் இம்மானுவேல் சேகரனுடன் சேர்ந்து கையெழுத்திட மறுத்ததால் ஒரே கோரிக்கை இரண்டு பிரதி எடுக்கப்பட்டு முத்துராமலிங்கம் தனி பிரதியில் கையெழுத்திட்டார். மறுநாள், செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவர் சுயமரியாதையுடன் நடந்து கொண்டது தான் மறவர்களை ஆத்திரம் அடையச் செய்து கொலை வெறிக்கு தூண்டியுள்ளது. 'தேவர்' சாதி வெறியை ஊட்டி வளர்த்த முத்துராமலிங்கம் ’தேசத் தலைவர்’ ஆனார். அவர் பிறந்த நாள் அரசு விழா ஆனது. ஆனால் ஒடுக்கப்பட்டோர் தலைவர்கள் சாதிக்கு எதிராக களம் கண்டிருந்தாலும், நாட்டின் அரசியலமைப்பையே எழுதியிருந்தாலும், தியாகிகளானாலும் ’தேசத் தலைவர்கள்’ ஆக முடியுமா என்ன?
50 ஆண்டுகளுக்குப் பிறகு, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய தியாகி இம்மானுவேலின் நினைவு நாள் அரசியல் அரங்கில் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், பரமக்குடியிலும் மதுரையிலும் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பார்க்க வேண்டுமே அன்றி, இதை தனி ஒரு நிகழ்வாக அணுக முடியாது. செப்டம்பர் 10 அன்று பழனிக்குமார் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொல்லப்பட்டதும் அதற்குக் காரணம் முத்துராமலிங்கத்தைப் பற்றி அவதூறாக எழுதி வைக்கப்பட்டிருந்தது என்று சட்டசபையில் முதல்வர் பேசியதும் இந்த வரலாற்று வேர்களைத் தேடச் சொல்கின்றது. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்திற்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இது வெறும் அரச வன்முறை என்று கண்டித்தலோடு, நாம் கடந்து போகக் கூடிய ஒன்றல்ல.
நம் மண்ணில் எல்லா மனிதர்களின் முதல் ஏக்கமும் சாதி தீண்டாமை இழிவிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே. இதற்காக வரலாறு முழுவதும் கதாநாயகர்களுக்காக காத்திருக்கின்றார்கள் அவர்கள். தமக்கு கிடைத்தத் தலைவர்களைத் தலைமேல் வைத்து கொண்டாடி இருக்கின்றார்கள். வரலாறு தோறும் கைவிடப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தம் எழுச்சிக்கான அடையாளங்களும், குறியீடுகளும் இன்றியமையாததாகின்றது. இப்படித் தான் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் சுயமரியாதை போராட்டத்திற்கான குறியீடாக கொண்டாடப்படுகின்றது. தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் அரசியல் எழுச்சி நாளாக ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இன்னொருபுறம் 1980, 90களில் சாதி வெறியர்களால் தாம் தாக்கப்படும் பொழுதெல்லாம் வலிக்கும்படி திருப்பி அடித்துக் காண்பித்தார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்; புதிய கட்சிகள், புதிய தலைவர்கள் என்று அரசியல் எழுச்சி கொண்டார்கள். இனியும் வெட்டறிவாள், கம்போடு அரசு, காவல் துறை உதவியுடன் ஆதிக்க சாதி வீரத்தைக் காட்டுவது அத்தனை எளிதல்ல என்று மாறியது களம்.
இன்னொருபுறம் அரசின் துணையுடன் சாதி வெறி தாக்குதல் நடத்தினால் சேதாரம் தம் பக்கமும் உண்டு; இனி அரசு இயந்திரத்தை நேரடியாக களத்தில் இறக்குவது தான் சிறந்தது’ என்று தக்க தருணம் பார்த்து காத்து இருந்திருக்கின்றது சாதி வெறிக் கும்பல். அதற்கு சரியான காலம் கனிந்தது போல், இந்த பார்ப்பனிய அரசக்கட்டமைப்பில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டது. ஒடுக்கப்பட்டோர் தம் எழுச்சி நாளாக கருதிய செப்டம்பர் 11 ஐ கலவர நாளாக மாற்றிவிட்டார்கள். அடுத்த ஆண்டு இன்னும் பலத்த காவல்துறை கெடுபிடி, துப்பாக்கிகள், செக் போஸ்ட்கள் என்று மக்களைப் பீதியூட்டுவதற்கு அடித்தளமிட்டுவிட்டார்கள். தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை, அரசியல் முக்கியத்துவமற்றதாக ஆக்குவதற்கு ஆதிக்க சாதி வெறியர்கள் அரசுடன் சேர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையே இந்த துப்பாக்கிச் சூடு.
ஆதிக்க சாதி வெறிச் செயல்கள் நடந்தேறும் பொழுதெல்லாம் மிகச் சாதாரணமாக இச்சமூகம் கடந்து போவதே, சாதிய மனநிலையில் இருந்து தான். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதல்கள் நடக்கும் போது அதை நம் சமூகம் மெளனமாக ஆதரிக்கின்றது. நம் சமூகத்தின் மெளனம் தான் அவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைக்கான ஆயுதமாக இருக்கின்றது. கிராமங்களில் சாதி ஒடுக்குமுறையும் அதன் வெளிப்பாடும் அப்பட்டமாக எந்த ஒளிவு மறைவும் இன்றி நடந்து கொண்டிருக்கின்றது. 'நகரத்தில் யாரும் சாதி பார்ப்பதில்லை’ என்பது போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில், ’தாழ்த்தப்பட்டோர்’ என்று வரும் பொழுது தான், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ‘சாதி முகம்’ வெளிப்படுகின்றது. தாழ்த்தப்பட்டோரின் அரசியல் எழுச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமை, அவர்களின் தலைவர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதும், கருதுவதும் சமூகத்தின் பொதுப் போக்காகவே இருக்கின்றது. ஒரு ‘தலித் விரோத உளவியல்’ சமூக உளவியலின் ஆழத்தில் படிந்து கிடக்கின்றது. தாழ்த்தப்பட்டோர் மீதான காழ்ப்புணர்ச்சியும், வன்மமும், ஆதிக்க உளவியலும் சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து நகரத்திற்கு வந்தாலும், கடல் கடந்து வேறு நாட்டுக்கு சென்றாலும்கூட சிந்தனையில் இருந்து பெயர்த்தெடுக்கப் படாமலே இருக்கின்றது.
பொது கோயில், பொது சாலை, பொது சுடுகாடு, பொது கிணறு, பொது தண்ணீர் குழாய், தேநீர் கடைகளில் பொது குவளை என்று தீண்டாமை ஒழிப்புக் கோரிக்கைகளே முற்றுப்பெறாமல் இருக்கின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போலவே கொலை வெறித் தாக்குதல்கள் தொடர்கின்றன. கிராமங்களில் சேரிகள் காலனியாக உருமாற்றப்பட்டது முன்பு. அது போல், இப்போது நகரங்களில் ஊருக்கு வெளியே கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் என்று புதிய சேரிகள் உருவாக்கப்படுகின்றன. தீண்டாமை புதியப் பெயர்களில், புதிய வடிவங்களில் தொடர்கின்றது. ’சட்டப் புத்தகத்தில் இருந்து மரண தண்டனையை ஒழித்திடு!’ போன்ற மனித உரிமைகளின் உன்னதமான கோரிக்கைகளை முன் வைக்கும் அளவிற்கு நம் சமூகம் மனித உரிமை விழுமியங்களில் வளர்ந்திருக்கிறதா? என்ற கேள்வியே இதிலிருந்து எழுகின்றது.
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து அதை சாதி ஒழிப்பு அரசியலாக வளர்த்தெடுத்த பெரியார் வாழ்ந்த மண்ணில் தான் இன்னும் இந்த பேரவலங்கள் தொடர்கின்றன. தாழ்த்தப்பட்டோர் மீதான ஒடுக்குமுறைகள் சமூகத்தின் மிக முக்கிய முரண்பாடாக இருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தாழ்த்தப்பட்ட மக்கள் தம் மீது நடத்தப்படும் அப்பட்டமான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய வண்ணம் ஒரு அரசியல் எழுச்சிக்கு தயாராகி வருகின்றார்கள். இதை தடுக்க அளவற்ற தடைகளை அவர்கள் முன் வைக்கின்றது சாதிய சமூகம். பெரியார் விதைத்த 'பார்ப்பனிய எதிர்ப்பு’ வீறு கொண்டெழத் தடையாயிருப்பது பெரும்பான்மை சமூகத்தின் தலித் விரோத போக்கு. சாதி ஒழிப்பு அரசியலைப் பெருமரமாக வளர்த்தெடுக்க வேண்டுமாயின் இச்சமூகத்தின் 'தலித் விரோத உளவியல்’ என்ற களையைப் பிடுங்கி எறிய வேண்டும் நாம். 'பறையன் பட்டம் போகாமல் உன் சூத்திரப் பட்டம் போகாது’ என்பதை இச்சமூகத்திற்கு அறைந்து உணர்த்தாவிட்டால், பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடி இந்து மதத்தை வேரறுத்து சாதியை ஒழிப்பது நோக்கி இனி ஒரு அடியைக் கூட முன் வைக்க முடியாது.
தென்னாப்பிரிக்காவில் கருப்பர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்காக வெள்ளையர்கள் வருந்தினார்கள். கண்ணீர் விட்டு அழுதார்கள்; குற்றவுணர்ச்சியில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பவற்றை நாம் படித்து இருக்கின்றோம். வெள்ளையர்கள் தம் முன்னோர்கள் இழைத்த அநீதிகளை எண்ணி அவமான உணர்ச்சி கொண்டதைக் கண்டவர்கள் சொல்லிக் கேட்டிருக்கின்றோம். ஆனால், எந்த ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரும் ஒரு வரலாற்று அநீதி இழைக்கப்பட்டிருப்பதை எண்ணி தம்மைக் குற்றவாளியாக உணர்ந்ததாக கேட்டறிந்த கதைகள் அரிதிலும் அரிது. ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழே யாராவது ஒருவரையாவது 'கீழ் சாதி' என்று சொல்லி ஒடுக்குமுறையை நிகழ்த்தும் ஒரு படிநிலை சமூகமாகத் தான் நம் சமூகம் இருந்துவந்திருக்கின்றது. இந்த சாதிய இழிவைப் போக்கிக் கொண்டு சாதி ஒழிப்பதற்கான போராட்டத்தினூடே ஒவ்வொரு சாதியினரும் தாம் இழைத்த அநீதிகளுக்காக வருந்த வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது. 'சாதி ஒழிப்பு போராட்டம்’ என்ற நீண்ட பயணம் தீண்டாமை ஒழிப்பு, சாதிய வன்முறை தாக்குதல்களைச் சாத்தியமற்றதாகச் செய்வது, சமூகத்தின் அத்தனை துறைகளிலும் சமத்துவம், இங்கு இருக்கும் வளங்களைப் பகிர்வதிலும் சமத்துவம் என்று பல இலக்குகளை உள்ளடக்கி உள்ளது. இந்த நெடியப் போராட்டப் பயணத்தில் தான் தீராத வன்மத்தையும், ஆறாத காயங்களையும் கொண்ட இந்த சாதிய சமூகத்தில் ஒன்றிணைவும், மீள் இணக்கமும் சாத்தியமாகப் போகின்றது.
ஜனநாயக (தேசிய, புரட்சிகர, முற்போக்கு) ஆற்றல்கள் சிலரின் மெளனமும், மழுப்பல் அணுகுமுறையும் எந்த அரசியலையும் வளர்த்தெடுக்கப் போவதில்லை. மேலும் நம் சொந்த மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும். இந்த அணுகுமுறை, என்றாவது ஒருநாள் சாதி ஒழிப்புக்கு எதிராகக் கொண்டு சென்று நிறுத்திவிடும். ஆதிக்க சாதி வெறியர்கள் உருவாக்கி வைத்துள்ள அடையாளங்களும், குறியீடுகளும் அதை சுற்றி கட்டி எழுப்பப்பட்டுள்ள பிம்பங்களும் சாதி இருத்தலுக்கே உரம் சேர்க்கின்றன. ஒடுக்கப்பட்டோர் தம் அடையாளங்களும், குறியீடுகளும் சாதி ஒழிப்புக்கே இட்டுச் செல்லும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. இவ்விரண்டையும் இனம் பிரித்துக் பார்ப்பதும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சிக்கு துணை நிற்பதுமே ஆதிக்க சாதி வெறிப் போக்கைத் தனிமைப்படுத்துவதற்கும் உணர்த்துவதற்கும் வழி. இதுவே, பார்ப்பனியத் தன்மை கொண்ட அரசுடன் சேர்ந்து சாதி வெறி கும்பல் தொடுத்திருக்கும் தாக்குதலுக்கு, ஜனநாயக ஆற்றல்கள் தரும் அரசியல் பதிலடியாக அமையும்.
இராமநாதபுரத்தில ் ஜாதிக்கலவரம் மூண்ட போது மதுரை திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தி ல் பேசிய தேவர் திருமகன் அவர்கள், ஜெயராம் செட்டியார், எம்.எல்.சி. அவர்கள் காரில் கிளம்பிய போது, மதுரை கோரிப்பளையத்தில ் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அப்போது ஒரு பத்திரிக்கையாளர ் ஓடிவந்து, நாடெங்கும் கலவரம் மூண்டுவிட்டது, இந்த நேரத்தில் உங்களை கைது செய்தால், விபரீத விளைவுகள் ஏற்படாதா? என்று கேட்டார். அப்போது தேவர், “இது அரசியல் சூழ்ச்சி, இதை புரிந்து கொள்ளாமல் யாரேனும் ஏழை அரிஜன மக்களை துன்புறுத்துவார ்களேயானால், அவர்கள் என்னுடைய நெஞ்சைப் பிளந்து இரத்தத்தை குடிப்பதற்க்குச ் சமமாகவே கருதுவேன். மேலும் எல்லோரும் அமைதி காக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு காவல் துறை வேனில் ஏறினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத ் தேவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் அகில பாரத பார்வர்டு ப்ளாக் கட்சியின் முன்னோடும் பிள்ளையாக விளங்கியவர். அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பல்வேறு தொழில்களின் நிமித்தம் வசித்து வந்த தமிழர்கள் பலரும் தேசிய ஆவேசத்துடன் சுபாஷின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருவதற்குக் காரணமாக இருந்தவர் பசும்பொன் தேவர். அந்த விதத்தில் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற தகுதிக்கு உரியவரானவரும்கூ ட. அவர் மீது தலித்துகளின் விரோதி என்னும் பழியைச் சுமத்தி, இம்மானுவேல் என்கிற கிறிஸ்தவ தலித்தைக் கொலை செய்யத் தூண்டினார் எனக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது அன்றைக்கு காமராஜர் தலைமையில் இருந்த தமிழக அரசு. பசும்பொன் தேவர் தண்டனை பெறுவதற்கு ஏற்ப அரசால் வழக்கு ஜோடிக்கப்பட்டது மட்டுமின்றி, முதுகுளத்தூரில் கலவரத்தை அடக்கும் சாக்கில் பல தேவர்களைக் காவல் துறை நிற்கவைத்துச் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சியும் நடந்தது. தேவர் சமூகத்தின் மீது மிகக் கொடிய அடக்குமுறையும் செலுத்தப்பட்டது . தேவர் தலித் மக்களிடையே பகைமை தோற்றுவிக்கப்பட்டது!
இம்மானுவேல் கிறிஸ்தவச் சர்ச்சுகளால் தூண்டப்பட்டு ஹிந்து தலித்துகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும் ஏவுகணையாகச் செயல்பட்டு, பலிகடாவானவர். பிற்காலத்தில் மீனாட்சிபுரம் இந்து தலித்துகள் முகமதியராக மாற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டத ற்கு அது ஒரு முன்னுதாரணம்!
இதன் பின் விளைவாகத்தான் தென் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற உயர் தகுதியில் இருந்த பசும்பொன் தேவர் காமராஜர் ஆட்சியால் ஒரு கொலை வழக்குக் குற்றவாளியாகச் சிறைவைக்கப்பட்ட ு அவமதிக்கப்பட்டா ர். ஹிந்து தலித்துகளைத் தூண்டிவிட்டு சங்கடத்தில் ஆழ்த்திப் பிறகு அவர்களை ஒட்டுமொத்தமாகக் கிறிஸ்தவர்களாக மாற்றும் சதித் திட்டத்தை முறியடிக்க முற்பட்டதுதான் பசும்பொன் தேவர் செய்த மாபெரும் செ!
தேவர்களுக்கும் தலித்துகளுக்கும ் இடையிலான ஜாதிக் கலவரமாக அது தடம் புரண்டு வருந்தத்தக்க விளைவுகளை உண்டாக்கிவிட்டத ு. இந்த அடிப்படை உண்மையை காமராஜர் அரசு சாமர்த்தியமாக மறைத்துவிட்டது. பசும்பொன் தேவர் தேவமாரின் ஜாதித் தலைவராகக் குறுக்கப்பட்டார ்.
இவ்வளவுக்கும் காமராஜருக்கு முதல் முதலில் விருதுப்பட்டி என்கிற பிற்கால விருதுநகரின் நகராட்சித் தேர்தலில் நிற்பதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தவரே பசும்பொன் தேவர்தான்! ஒரு ஆட்டை வாங்கி காமராஜர் பெயரில் அதற்காக நகராட்சிக்கு வரி செலுத்தி அப்படியொரு தகுதியை காமராஜர் பெறச் செய்தார், பசும்பொன் தேவர்.
பிற்காலத்தில் காமராஜர் மாநில முதல்வர் பதவியில் அமரும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில் பசும்பொன் தேவர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்ச்சியை மிகவும் அலட்சியமான தொனியில் பகிரங்கப்படுத்த ியதைக் காமராஜரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பதிலுக்குப் பசும்ப்பொன் தேவரை வீழ்ச்சியடையச் செய்வதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்; இம்மானுவேல் கொல்லப்பட்டது அவருக்கு வசதியாகப் போயிற்று!
*** ******* **** **** ***
மேலும் அங்கே இருந்த பிராமிணர் உணவகத்தில் இமானுவேலு சாப்பிட்டுவிட்ட ு அதற்கான தொகை தராமல் தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்ததும் பலருக்கு தெரிந்திருக்கின ்றது. அவரது அண்ணன் துரைசாமி என்பவர் இமானுவேலுக்கு புகைப்படமே இல்லை, இப்பொழுது இருப்பது வரைந்த படமே என்கிறார். இராணுவத்தில் சேர்ந்திருக்கின ்றாரே அந்த புகைப்படம் இருக்குமே என்று நாம் நமக்குள் மட்டுமே கேள்வி கேட்டுக்கொள்ள முடிகிறது. சிலர் அவர் இராணுவத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியில் வந்தவர் என்றும் உரைக்க கேட்கின்றோம். ஐம்பது ஆண்டுகள் கடந்து திடீரென்று நினைவு நாள் கொண்டாடப்படும் அரசியலும், புது புது வரலாற்று ஆக்கங்களும், அவற்றிற்கு மத சமூக அடையாளங்கள் அடிப்படையில் ஆதரித்து வரவேற்பதும் நமக்கு புரியாமல் இல்லை.
ஆக மொத்தத்தில் காமராஜ் நாடார் விதைத்த காங்கிரஸ்-பார்வ ர்ட் பிளாக் கட்சி மோதல், மறவர்-பள்ளர் சண்டை என பெயர் சூட்டப்பட்டு சாதி சண்டையாக உருவெடுத்து இன்று தேவர்-தலித் சண்டையாக வளர்ந்து நிற்கிறது. ஒரே மண்ணில் அதுவும் வானம் பார்த்த பூமியில் இன்றும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இருக்கின்ற இரு சமூகங்களின் வாழ்வு திசை மாறி, தொழிற்சாலைகள் எதுவும் இன்றி, கருவேல் மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளன ர். அருகில் உள்ள விருதுநகரும், தூத்துக்குடியும ் எப்படி எதனால் முன்னேறியதோ ஆனால் முகவை மாவட்டத்தில் எந்த தொழிலும் அரசால் முன்னெடுக்கப்பட வில்லை என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை. சில பல அரசு வேலைகளும், வெளிநாட்டுப் பயணங்களும் இவர்களுக்கு இன்று சாத்தியப்பட்டிர ுக்கின்றது. ஆனால் ஒற்றுமையைத் தான் காணோம்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரிடம் ஒரு புகைப்படம் கூட இல்லை என்பது தான் உண்மை. அவரது அண்ணன் துரைச்சாமி என்பவர் தான் “அவனுக்கு ஒரு போட்டோ கூட கிடையாது, இப்போது இருப்பதெல்லாம் அனுமானத்தில் வரைந்தது தான்” என்று கூறியிருக்கின்ற ார். ஒரு புகைப்படம் கூட இல்லாத சமீபத்தில் வாழ்ந்த ஒருவரை தேசியத் தலைவர் என்றும், இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், மக்களுக்காக போராடி சிறை சென்றவர் என்றும், பலமுறை போராட்டங்கள் நடத்தியவர் என்றும் கதை கட்டுவதை, புத்தகம் வெளியிடுவது, குருபூஜை கொண்டாடுவது, சமுதாய விடிவெள்ளி என்றழைப்பது, போராளி என்று பரப்புரை செய்வது, தேவர் ஐயாவின் அடைமொழிகளை இவருக்கு சூடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுப்பது போன்றவற்றை அறிவிற் சிறந்த சான்றோர் எங்ஙனம் எடுத்துக் கொள்வர் என்பதும் நமக்கு புரியாமல் இல்லை. அரசியல் சூழ்ச்சிக்கு பலியான முகவை மக்கள் இன்று வரை அதற்கு பலியாடாய் பலியாவதற்கு தற்போது நடந்துள்ள பரமக்குடி கலவரம் ஒரு கொடூரமான எடுத்துக்காட்டு . வரலாற்றில் சுவடு இல்லை என்பதற்காக உழைக்கும் மக்கள் இப்படி துவேசத்தால் தூண்டப்பட்டு தவறான பாதையில் செல்வது சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கவே காரணமாகும் என்பதில் ஐயமில்லை.
செட்டியார் இனத்தை சேர்ந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காரணத்தால், அப்பெண்ணின் உறவினர்களின் தூண்டுதலின் பெயரில் கொல்லப்பட்டவர்த ான் இந்த இமானுவேல்… ஒரு கும்பக்கார பெண்ணிடம் (கரகாட்டம் ஆடுபவர்) தொடுப்பு வைத்திருந்ததாகவ ும் அதனால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைக்காகவு ம் இம்மானுவேல் சேகரனின் மனைவியே பரமக்குடி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக புகார் கொடுத்து இருக்கிறார் . காவல்நிலையப் புகார் ஆவணமாக உள்ளது. மேலும் அங்கே இருந்த பிராமிணர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்ட ு அதற்கான தொகை தராமல் தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்ததும் பலருக்கு தெரிந்திருக்கின ்றது. அவரது அண்ணன் துரைசாமி என்பவர் இமானுவேலுக்கு புகைப்படமே இல்லை, இப்பொழுது இருப்பது வரைந்த படமே என்கிறார். இராணுவத்தில் சேர்ந்திருக்கின ்றாரே அந்த புகைப்படம் இருக்குமே என்று நாம் நமக்குள் மட்டுமே கேள்வி கேட்டுக்கொள்ள முடிகிறது. . ஐம்பது ஆண்டுகள் கடந்து திடீரென்று நினைவு நாள் கொண்டாடப்படும் அரசியலும், புது புது வரலாற்று ஆக்கங்களும், அவற்றிற்கு மத சமூக அடையாளங்கள் அடிப்படையில் ஆதரித்து வரவேற்பதும் நமக்கு புரியாமல் இல்லை.சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரிடம் ஒரு புகைப்படம் கூட இல்லை என்பது தான் உண்மை. அவரது அண்ணன் துரைச்சாமி என்பவர் தான் “அவனுக்கு ஒரு போட்டோ கூட கிடையாது, இப்போது இருப்பதெல்லாம் அனுமானத்தில் வரைந்தது தான்” என்று கூறியிருக்கின்ற ார். ஒரு புகைப்படம் கூட இல்லாத சமீபத்தில் வாழ்ந்த ஒருவரை தேசியத் தலைவர் என்றும், இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், மக்களுக்காக போராடி சிறை சென்றவர் என்றும், பலமுறை போராட்டங்கள் நடத்தியவர் என்றும் கதை கட்டுவதை, புத்தகம் வெளியிடுவது, குருபூஜை கொண்டாடுவது, சமுதாய விடிவெள்ளி என்றழைப்பது, போராளி என்று பரப்புரை செய்வது, தேவர் ஐயாவின் அடைமொழிகளை இவருக்கு சூடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுப்பது போன்றவற்றை அறிவிற் சிறந்த சான்றோர் எங்ஙனம் எடுத்துக் கொள்வர் என்பதும் நமக்கு புரியாமல் இல்லை.வரலாற்றில ் சுவடு இல்லை என்பதற்காக உழைக்கும் மக்கள் இப்படி சில அரசியல்வாதிகளின ால் தூண்டப்பட்டு தவறான பாதையில் செல்வது சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கவே காரணமாகும் என்பதில் ஐயமில்லை
- சார் கருப்பர்களுக்கு இழக்கப்பட்ட கொடுமை என்பது உண்மை! அதனால் அடித்த வாரிகள் அதற்காக அவமானப்பட்டார்கள்...வெட்கப்பட்டார்கள்..!
ஆனால் இங்கு இமானுவேல் என்ன தியாகியா? என்ன? வெறும் கட்டு கதைகளாலும் பொய் எழுதிய புத்தகத்தாலும் வள்ர்க்கப்பட்ட இமானுவேல் வாழ்க்கை..எப்பட ி அடுத்தவர் மனதை உருகச்செய்யும்??
உண்மையை பேசுங்க சார்..!!!
பழனி
நாங்கள் யாரை வணங்க வேண்டும் என்று
எங்களுக்கு தெரியும்.
அடக்குமுறைக்கு எதிராக மீண்டும் மீண்டும் தனித்து களம் காணும் ஒரே சமூகம் என்றால்
அது தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் மட்டுமே.
எண்ணற்ற உயிர் பலிகள் கொடுத்தும்
வீரத்துடன் துணிந்து நிற்கும் மருதநில மக்களின் நெஞ்சில் என்றும் வாழும் ஒரே தெய்வம் இமானுவேல் தேவேந்திரர் மட்டுமே.
அரசு விழா இல்லாமல் அதைவிட சிறப்பாக பரமக்குடியில் குருபூஜை நடத்துகின்ற சமூகம்.
RSS feed for comments to this post