perarivalan book22 வருட​ங்​களுக்கு மேல் முடிவ​டை​யாத ஒரு தாயின் போராட்டத்தை சொல்லும் புத்தகம். கடவுளுக்கு நிகராக அதிகாரம் படைத்தவர்களிடம் நீங்கள் மாட்டிக்கொண்டால் என்ன ஆவீர்கள்? இந்த புத்தகத்தைப் படித்தால் ​அதைத் தெரிந்து கொள்வீர்கள்​.

பேரறிவாளன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் கொலையாளிகளுக்கு அவர் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதே. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டு 22 ஆண்டுகள் கடந்த பிறகு பேரறிவாளனுக்கும் அந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; அவர் நிரபராதி என்கிறார் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான தியாகராஜன்.

"பேரறிவாளனின் வாக்குமூலம் சுமார் நான்கு பக்கங்களைக் கொண்டது. பேரறிவாளன் என்னிடம் 'சிவராசன் கேட்டுக்கொண்டபடி பேட்டரியை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்பது எனக்குத் தெரியாது' என்று சொன்னார். அந்த வரிகளில், 'அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்பது எனக்குத் தெரியாது' என்று பேரறிவாளன் சொன்ன உயிரான அந்த வார்த்தைகளை எழுதாமல் தவிர்த்துவிட்டேன். துரதிர்ஷ்டவசமாக, தமிழில் இருந்து ஆங்கிலத்தில் வேறொரு குழுவினரால் வாக்குமூலங்கள் மொழிபெயர்க்கப்பட்ட போது நிகழ்ந்த தவறு அது" என்கிறார் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான தியாகராஜன்..

19 வயதில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க மல்லிகை இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது வயது 44. சிறையில் இருந்தபடியே ப்ளஸ்-டூ தேர்வு எழுதி சிறை வரலாற்றிலேயே 1,096 மதிப்பெண்கள் பெற்றவர். எம்.சி.ஏ. பட்டப்படிப்பிலும் தேறியிருக்கிறார். தெரிந்தே ஒரு கொலையை நீதித்துறை செய்துவிடக் கூடாது என்பதுதான் எல்லோரின் வேண்டுகோள்.

"மரண தண்டனையைச் சட்டப் புத்தகங்களில் இன்னும் சுமந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமற்ற சமூகத்தில் பேட்டரி வாங்கிக் கொடுத்தற்காக மரண தண்டனையை எதிர்கொள்வதென்பது உச்சபட்ச கொடுமை. ஏறி இறங்காத படி​கள்​ இல்லை. மோதாத கதவு​கள்​ இல்லை. என்ன நடக்குமோ என்று தெரியவில்லை. எப்படியும் அறிவு எங்களுடன் வந்துவிடுவான், நாங்கள் அதற்குப் பிறகு மகிழ்ச்சியாக இருப்போம்" என்கிறார் அற்புதம் அம்மா​ள்​.

அவரின் கனவு பலிக்கட்டும். ​வெறும் 110 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சாக படித்தால் கூட ஒரு மணி நேரத்தில் படித்துவிடலாம். ​கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

- தங்க.சத்திய​மூ​ர்த்தி

ஆசிரியர்:
தமிழில்: யூமா வாசுகி
மலையாளத்தில்: அனுசிரீ

பதிப்பகம்:
திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்,
எண் 11, கே கே தங்கவேல் தெரு, பெரியார் நகர்,
சோலையார் பேட்டை 635851
தொலைபேசி 94430 58565

விலை: ரூ. 60.

ஆன்லைனில் வாங்க...: http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D

Pin It