இயல்பை கீழே தள்ளி
ஏறி மிதித்துவிட்டு ஓடுகின்றன
செயற்கைகள்...
வாழ்க்கைக்கூடத்தில்
உணர்வுகளை கொண்டு
விளையாடுவதெப்படியென்று மட்டுமே
சொல்லித் தரப்படுகிறது...
எதுவும் தன் இயல்பில்
இருப்பதில்லை,
இயல்பு உட்பட....
அழிக்கமுடியாத ஒரு மாபெரும்
கருப்புப் புள்ளியில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சிறிதளவேனும் வெளுப்பு
தெரிந்தால் அது காட்சிப்பிழை
என்று எண்ணத் தோன்றுவதில்லை...
அழகான சித்திரமொன்றை
பாழ் செய்வதெவ்வாறென்கிற
முறை மட்டுமே இறுதியில்
தொக்குவது விசித்திரம்...
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
- அரபு இலக்கியத்தின் உயிர்நாடி, ‘ஆயுதங்களாகும் பாலஸ்தீனக் கவிதைகள்’
- பங்கு பிரிக்கும் சண்டை! சந்தி சிரிக்கும் பாஜக!
- தேறா ஆணையம்!
- அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்
- திராவிடக் கவிஞர் பாரதிதாசன்
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்