சில்லறைகளைக் கொட்டி எண்ணும்
பிச்சைக்காரனுக்கு
அகப்படுகின்ற
செல்லாத நாணயம் போலிருக்கிறது
அக்கணம்
நூறாயிரம் கணங்களைக்
கடக்கின்ற நீங்கள்தான்
கடக்கிறீர்கள்
அக்கணத்தையும்
ஒரு மலைத்தொடரை
ஏறிக் கடப்பதுபோல
பெருங்கடலில் படகு வலிப்பதுபோல்
அடைமழை நாளில்
திறக்கும் ஊற்றுக்கண்களென
நொதித்து நாறும் மனக்கண்கள்
திறக்கின்றன அக்கணத்தில்
பலநூறு சொற்களைக் கடக்கின்ற
நீங்கள் தான்
அந்த ஒரு சொல்லையும் கடக்கிறீர்கள்
மெளனத்தில் உறைந்து கண்சிமிட்டிய அவை
அக்கணத்தில் தம்
அரிதாரத்தைக் கழுவுகின்றன
துட்டதெய்வத்தின் கரங்களென
முளைக்கும் மனத்தின் வன்மம்
ரத்தம் கக்கிச் சாகும்படி
ஏவும் அச்சொல்லை
பறவையுதிர்க்கும் இறகு போலல்லாது
உலோகப் பறவையொன்றின்
வயிற்றினின்று வீழும்
அந்தச் சொல்லெனும்
அரூப நஞ்சு
அந்த
ஒரு கணத்தை
அந்த
ஒரு சொல்லைக்
கடக்கின்ற நீங்கள்தான்
அந்த ஒருத்தியைக்
கடக்கத் திராணியற்று நிற்கிறீர்கள்
- அழகிய பெரியவன்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- அழகிய பெரியவன்
- பிரிவு: கவிதைகள்