கொண்டாடியும்
குறை சொல்லியும்
பயணித்துக்கொண்டேயிருக்கின்றன
பல கோடி பாதங்கள்.
பாதை நகர்ந்துக் கொண்டிருக்கிறது
ஆழமானதொரு நதியைப் போல
அமைதியாக..!

புலன்களின் அனுபவச்சாயத்தை
பூசிக்கொள்ளும் பாதங்கள்
வேறு வழியின்றி
விமர்சிக்கத் தொடங்குகின்றன
பாதையினை.

பயணம் நின்றுப்போகும்
ஓர்பொழுதில்
பாதங்கள் ஆகிவிடுகின்றன
பாதையின் துளியாக...
குறைந்தபட்சம்
கண்ணுக்குத் தெரியாத
ஒரு ரேகையாக.! 

இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It